அகிலத்திரட்டு அம்மானை 8881 - 8910 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8881 - 8910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
நில்லு நினைவில்நீ  சரித்துக்கொடு என்மகனே
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi