அகிலத்திரட்டு அம்மானை 8581 - 8610 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8581 - 8610 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற
ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை
ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே

விருத்தம்


மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர்
தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத்
தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே

விருத்தம்


கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு
மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே

விருத்தம்


வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே

விருத்தம்

கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே

நடை


சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது
தன்னீதமான சதாசிவன் கண்ணிலிருந்து
மன்மதனைநீ எரித்தாய் மயமான அக்கினியே
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi