அகிலத்திரட்டு அம்மானை 8551 - 8580 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8551 - 8580 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆவிமறுகி அப்போது சொல்லலுற்றான்
பூரணனேவாசவனே பொறுத்துநீர் கொள்ளுமையா
நாரணனே என்சிவனே நான்செய்த பிழைபொறுத்து
வாரணக்கோவே வைகுந்தம் ஈந்தருழும்
காரணரே என்னைக் காத்தருளும் எனப்பணிந்தான்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
நல்லபேறும் கொடுப்போம் நம்மாணை தப்பாதென
வல்லவனேநீரும் வாய்த்த தேவன்தனக்கு
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதைஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்

விருத்தம்

என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்

விருத்தம்


மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்

விருத்தம்
வைகுண்டர் உதயம் விஞ்சை

அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்

விருத்தம்

வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi