அகிலத்திரட்டு அம்மானை 8521 - 8550 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8521 - 8550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார்
அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து
இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால்
குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார்
அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச்
செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே
அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார்
கற்பில்லா தேவன்மேல் நாடியே கோபமுற்று
மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
நல்லதுநீ கேட்ட வரம் நாம்கொடுக்க ஆகாது
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே
மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப்
பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி
தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும்
சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே
தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
தேவன்அதைக் கேட்டுசிந்தை மிகக்கலங்கி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi