அகிலத்திரட்டு அம்மானை 8041 - 8070 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8041 - 8070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிகுத்துக் கட்டுவார்களென்றும்,  இன்னுஞ்சிறிது
நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும்
துர்ச்சனராயிருக்  கிறபேர்களும்
வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் 
சண்டைபோட்டு மாண்டுபோவார்களென்றும்
போனபேர்கள் போக  இருக்கிற பேர்கள்
புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு
சர்வபாக்கியத்திலே அடைவார்களென்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்.
அதினால் மானிடரெல்லாம் உயிரிழந்து உட்கொள்ளைப்
பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும்.
நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்.
நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும்,
மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும்,
அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம்
மாண்டு போவார்கள். போனபேர்கள் போக
இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள்.
மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும்.
வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச்
சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே
மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும்.
ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும்,
ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும்,
ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு
ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு
ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும்.
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு
தர்மம் வாங்கிறபேர்களில்லை யென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi