அகிலத்திரட்டு அம்மானை 11071 - 11100 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11071 - 11100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ
காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ
நாணியிருக்காதுங்கோ நன்றிவுள்ள சான்றோரே
வைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோ
அவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோ
எவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமே
என்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக்
கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார்
எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று
நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே
வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத்
தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும்
என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலே
நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க
எங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லி
சங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார்
நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள்
துரித முடனே தொல்புவியில் வாழுகின்ற
பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும்
அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும்
ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும்
கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும்
உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரே
சித்திரமாய்கேட்டு சிறந்திருக்கும் அன்போரே
மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ
மறுக்கலச்சலிட்டு மாளாமல் வாழ்ந்திருங்கோ
உங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi