அகிலத்திரட்டு அம்மானை 8401 - 8430 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8401 - 8430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு
நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று
ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல்
நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள்
அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார்
இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே
எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே
அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது
அன்றைத்தோசம் அகலஅப்போதுதான்
என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே
உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே
சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க
ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால்
ஆக்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை
வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார்
நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து
தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார்
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi