அகிலத்திரட்டு அம்மானை 7501 - 7530 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7501 - 7530 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பூர்வத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை
என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும்
பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது
பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி
முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு
எண்ணாயிரத்தில் எடுத்தாரொரூராமஉரு
கண்ணாளர் தம்கூட்டில் கற்பகம்போ லித்தேவன்
சொர்க்கலோகம் போறார் சொர்ணமுடிபெறவே
ஆர்க்கும் கிடைக்காது அந்தலோக முடியின்
மதலையாகப் பிறந்து சொர்க்கந்தான் சேரவென்று
கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே
ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான்
பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித்
தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார்
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வைய மளந்த மாலும்பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத்
தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார்
செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து
மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம்
சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி
உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால்
அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே
எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும்
கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi