அகிலத்திரட்டு அம்மானை 11221 - 11250 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11221 - 11250 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சாமிதர்மத் தாலே தோச மதையழித்து
நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள்
சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும்
மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித்
தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து
நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து
வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து
மாளாவரங்கள் மக்களுக்கே தான்கொடுத்து
ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான்
என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க
நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து
சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான்
எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன
சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே
நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான்
இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே
சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண்
தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்
பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும்
நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே
சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே
என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான்
மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான்
அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும்
இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால்
போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப்
பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப்
பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும்
சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi