அகிலத்திரட்டு அம்மானை 9061 - 9090 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9061 - 9090 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம்
மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே
புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும்
சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள்
அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே
முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை
இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு
சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே
மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ
பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே
அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள்
பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும்
மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில்
கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான்
முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi