அகிலத்திரட்டு அம்மானை 8281 - 8310 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8281 - 8310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை

விருத்தம்

கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே

விருத்தம்

வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே  நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

கலைமுனி ஞானமுனி வரவு

நடை


ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம்
இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi