அய்யாவழி வழிபாட்டு புத்தகம்

ayyavazhi-vazhipattu-puththagam

ayyavazhi-vazhipattu-puththagam

ayyavazhi-vazhipattu-puththagam

ayyavazhi-vazhipattu-puththagam
 
அய்யாவழி உதயமாகி 174 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய - சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய - சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.

அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது.

பதிகளும் நிழல் தாங்ல்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 2016 - ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 10000 - க்கும் நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன.

அய்யாவழி வழிபாட்டு புத்தகம் என்னும் இந்த நூல் எல்லா பதிகளிலும், நிழல் தாங்ல்களிலும் மற்றும் வீடுகளிலும் அய்யா வைகுண்டரை வழிபடுவதற்கு உதவியாக இருக்கும் வகையில் இலவசமாக வெளியிடப்படுகிறது.

இந்தப் புத்தகம் தேவைப்படும் அய்யாவழி அன்பர்கள் பின்வரும் முகவரியில் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
நாகலிங்கம்.
அய்யா உண்டு!!!

முகவரி:


பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்,
எண். 300, மத்தியாஸ் காம்ளக்ஸ்,
செட்டிக்குளம் ஜங்ஷன், நாகர் கோவில் – 629002.
தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல்:

pothigaipublishers@gmail.com,

http://www.pothigaipublishers.com

அருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்

arul-nool

வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க

விளக்கவுரை :


அருள் நூல் நிறைந்தது

அருள் நூல் 2701 - 2730 of 2738 அடிகள்

arul-nool


சங்கீதம் பாட சகலகலையுந் தொனிக்க
மக்கள் ஓசையேழு வாhத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னாpவா சித்துநிற்க
தம்பூரு வீணைசுரமண்டலம் முழங்கக்
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கொpய
அiகு கொலுவிரிக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க
இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லாரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும்ட அருகில வரிருக்க
சதிரான வார்த்தையொன்ற தான்செவியி லுமூகி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதணி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானிணைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களான சிலவரிசை தான்கொடுத்து
மாதவனை நினைந்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளகளே யிந்த  பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்குத்
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம நீர்வாழ

விளக்கவுரை :

அருள் நூல் 2671 - 2700 of 2738 அடிகள்

arul-nool

பேய்க்குக் கொடுத்திடுவார் அச்சமுடன்
தெண்டமதற்கிடுவார் வஞ்சமறநாடு வுயர்ந்துவரும்
நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றிவரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் மேகத்திலே
இருந்து மீனும்விழும் மழையிலே மேகமதாய் வில்லும்
வெவ்வேறாகிவிடும் ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும்தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்
ஆயள்தான்குறையும்
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசாயிருக்கிறான்
மாமன்நானிருக்க மனம்போல் நடத்துகிறான்
அவன்பட்டம் பறித்திடுவேன் கொட்டிக் கலைத்திடுவேன்.
நாரணனும்

முற்றிற்று

கல்யாணவாழ்த்து
மவுனி  கலியாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்க யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும் வருத்தி

விளக்கவுரை :

அருள் நூல் 2641 - 2670 of 2738 அடிகள்

arul-nool

மேல்மழைகள் தான்கூடி மரத்துக்கொப்பு
நனைத்துவிடும்நாடி ஒருகொப்பு னையாது
மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிண்டு
மூன்றுவரும் கோஎன்று பெட்டைக்கூவிவிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர்வேகுமே பள்ளமதாய்
தாழுமேசிலவூர் சமுத்திரம்வந்தே பெருகும்மாளும்
சிலவூர்மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும்
சிலவூர்கள் இக்குடனேமண்மாரி பெய்துவிடும்
நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல்
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில்
மண்ணாலும் நித்தம்மடிவார் முன்னோர்கள்
உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமெனக்கை யெடுப்பார் சண்டாளர்
குட்டியழித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை
முட்டியவர் தாயைமகன் கொல்லுவான் கெட்டுவிழ நெஞ்சுடனே
பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும்மாற
பில்லிசூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார்
பாவமதாய் கூர்மையுடன் பாராமல் பன்னி உருக்காட்டி
பலியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால்
தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும்
ஏவல்செய்ய சின்னபிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே
மண்ணில் சடைவாக வார்த்தை சொல்லும்
பின்னும் மந்தப்பாவம் பிணிகருத்தாய் பாலருகில்
மானிடர்க்கு காவலுருப் புண்ணியங் கசப்பாகும்
மேவரிய ஒருத்தனுடன் ஒப்பத்தெட்டு பேர்கள்
திருத்தமறவே திரிவார் தேசமதில்
வருத்தமாய் தேடிநித்தம் குருதாய் தகப்பன்
கூறுமொழிகேளார் திருத்தமுடனே சிவத்தைத்
தேடார்கள் கருத்துடனே பிச்சையது போடாமல்

விளக்கவுரை :

அருள் நூல் 2611 - 2640 of 2738 அடிகள்

arul-nool

தம்பிபகை அன்னயர்க்குப் பிள்ளைபகைகன்னி
பெண்களும்பகையாம் பண்ணிரியாமி
மருமகளுக்கு மாற்றானாய் மாறாமல்பூமிதனில்
மாமிதன்மேல் போர்ப்பகையாம் கூராண்மைஅறிவு
மயக்கமாய் அண்ணனுடன் தங்கமுறைமை
தம்பிச்சொல்லுவார் முழுதுமேதரைதனிலே
தாயுமானும் சரசமிகப்பெருகி ஞாயவழிப்பாராமல்
நத்தியேநேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார்
சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள்
அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள்
மோகம் பெருகிக்கண்ட கணவன்மேல்
பாவமெனத்தோன்றாமல் பாருலகமெல்லாம்
அதிகக்கோபமுடன் பொய்யாற்கொலைகள்
செய்வார் பாவமதாய் முன்னாலே பெண்ரூபம்
முக்கோணமாய்ப் பிறக்கும் பின்னாலே ஆண்போல
புpறந்துவிடும் முன்னாலே ஆண்பிள்ளைபெண்பிள்ளைகள்போல
அரையின்கீழ் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு
ஆகிவிடும் மட்டிகளாய் நாணுவார் நஞ்சுதின்பார்
நாக்கைப்பிடுங்கிடவார் சீனமுடன்சாவார் கிணற்றிலே
நாணமுடன் ஆற்றிலேமடிவாரும் அக்கினியில் மாள்வாரும்
தாழ்மையாய் குத்திமிகச் சாவாரும் முகடராய் நாட்டமுடன்
பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச்
சக்கரத்தால்மடிவார்கள் பூவோகம்விசிறும்
பனியாலும் வீசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவாய், வீறுகெட்டு
நாளுக்குநாளாய் நடக்கவழிகுறுகும், சேவிக்குமே
வானம்திசைமாறும் கூலிக்கும்பார்க்கும் பாழ்நரகில்
ஏறுஅக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்கமுண்டாம்
வாழ்வோருக்கும் மேல்புறத்து நஞ்சைவிளையும்
அதற்குக் கீழ்புறத்து நஞ்சைவிளையாது

விளக்கவுரை :

அருள் நூல் 2581 - 2610 of 2738 அடிகள்

arul-nool

வஞ்சப்பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய்
தீநகரக்காந்தல் செகத்தோர்க்குத் தான்வயிற்றில்
மாநெருப்பாய்த்தங்கி வயிறுகழிந்து தீனமுடன்
மாள்வார்சிலபேர்கள் மாறாமலேசிலநாள்
தாழ்வாருயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே
சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே…
இரத்தமிகவோடவே மண்டலத்தில்…
நாடுபிழையாது நற்காலம்போயொழிக்கும்
கேடுதொடுத்துலகம் கெட்டுவரும் நாடுதனில்
மழைதழைத்துப்பெய்யாமல் வானம்சுருங்கிவரும்
களைகள் பயிரில் கலக்கமேவிளையாது
வெள்ளத்தால் பஞ்சம்வரும் வெண்சாவியாகி விடும்
பள்ளத்தாலும்நெற்பயிர் நடுக்கும் சனங்களுற்ற
பட்டணங்கள்தோறும் பசிநோய் அதிகமதாய்
வட்டிஅநியாயம் வாங்கிடுவார்தட்டழிந்து
பிள்ளையுடன் கொண்டபெண்ணைப் பேறாகவிற்றிடுவார்
தௌ;ளிமையாய் கள்ளச்சிறைகள் வைப்பார்
வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல்களவும்
பொய்பெருத்து மாதருள்மேல் மோகமுற்று
வாடுவார்நீதமுள்ள ஞானங்கள்தப்பிவரும்
நாய்போல்சினந்திடுவார் ஊனக்கொலைபுரிவார்
ஓயாமல்தீனதிய திருட்டுப்பெருத்துவரும்
சீமையெல்லாம் புரட்டுமுரட்டாகப் பேசிடுவார்
மருட்டியேஎன்தன் பணத்தை யிப்போது
தாவென்றுசொல்லிசிந்தை கலங்கிடவேசெப்பிடுவார்
நந்தலுறம் பொய்யாணைவிட்டிடு வார்பொய்ச்
சத்தியமே பெருகும் மெய்யோனைத்தேடாமல்
விற்றிடுவார் வையகத்தில் ராஜனவன்கைக்கூலி
நடத்தியே வாங்கிடுவான்பேசிடுவான் ஞாயப்
பிழையாக ஆசையுள்ள அண்ணனுக்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

arul-nool

ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை
எங்கேயென்று தேடி அடிப்பாரே
இப்படி கலியருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர்
வைகுண்டாpடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள்

விருத்தம்

எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு
பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும்
மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே
கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள்
நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க
பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம்
ஆதியிலேயேPசுரர்தான் அம்புவியெல்லாமொpக்க
நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம்சீக்கிரத்திலேயெழுப்பி
நற்
குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து
மேத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து
தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன்
நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன்
நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி
அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில்
நாம்போறோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன்
சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின்
அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம்
நளடக்கும்குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன்
என்றும்அடக்கமறச் சொல்லுகிறேன்அதுகேளும்
பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம்

விளக்கவுரை :


சொல்வாய் ஞாயவழி காட்டி

அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

arul-nool

பேருலகில் சொல்லாமல்; பேர்மாறி நிற்போம்
அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால்
ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா
இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார்
என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து
தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும்
சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும்
தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும்
தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார்

விருத்தம்

கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து
பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே
அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு
வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள்
காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு
ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு
மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு
ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள்

நடை

கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று
காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர்
மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல்
மான வரம்பில்லை யப்பாகண்டீர்
ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும்
ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர்
மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே
வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம்
ஐயமிறைக்கூலி தெண்டம்
அட்டிஅநியாயம் மெத்த
ஆண்களைத் தீண்டி வேலைகொள்வார்
மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம்
வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார்

விளக்கவுரை :

அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

arul-nool

மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார்
எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக
எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார்
இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு
இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார்
முட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம்
வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு
சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு
தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார்
வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு
வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே
என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும்
ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம்
பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா
புட்டாரநாயகியே கட்டழியம்மா
இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை
ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா
முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம்
மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம்
வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே
அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம்
மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று
மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம்
சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை
கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம்
பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால்
பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா
மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள்
மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா
பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம்

விளக்கவுரை :

அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்

arul-nool

உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு
ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக்
நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும்

நடை

அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க
அருமையானஇங்கழைத்து உரிமையாக இப்போது
மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி
மேலுந் தா;மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று
மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று
மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார்
மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள்
மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே
போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு
பொpயபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார்
கையில் மழுசூலம் காப்பறைகளேந்தி
கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார்
மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு
மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி
தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன்
சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே
கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார்
கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ
பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ
பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி
நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ
நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர்
ஏவல்பொpயோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற
ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே
செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி
தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார்
வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார்

விளக்கவுரை :


அருள் நூல் 2431 - 2460 of 2738 அடிகள்

arul-nool

எந்தஞாயமாய் நான்தவம் செய்குவேன்
சீமையெங்கும் அநியாயம் கண்டதால்
சொல்லுமுபாயம் இறைகூடி கண்டமும்
வன்மையாக நிறுத்தியே தா;மமாய்
மக்கள்தன்னையும் வைத்தாள வென்றுதான்
பேய்கள் செய்யும் கொடுமை அகற்றியே
பலிகள் தீபஒலிகளடக்கியே
ஞாயமாக நான் சீமையாளவும்
நாரணர்சுவாமி வைகுண்டமாகவும்
தேசமாகிய தெச்சணமீதினில்
செல்வச் சான்றோரிடமே பிறந்துநான்
வாசமானபுமை நடத்தவே
மாயனேமிதம் கொண்டிருக்கவே
திட்டமாயிந்ததுட்டவீராpன்
செய்திகேட்ட சிணப்பொழுதன்
வட்டமாகிய நெஞ்சம் குளிருதுமனம்
வாழ்கயிலைக் கதியதியாக
சூழஇந்தத் துடிவீரர் தங்களை
சூச்சமாகச் சுருக்காய் அழைத்துநீர்
முன்னிருந்த வரத்தின் முறைமையை
உபாயமாக அடக்கி மறுவரம்
பின்னும் தங்கப் பிறவியாக்கிப்
பேரும்மாற்றி புதுவர மீந்துநீர்
எந்தனோடு இதமா அனுப்பினால்
ஏற்றகாரியம் பார்த்து முடிப்பேன்நான்
சிந்தையது செய்யாதே பானாக்கால்
தெச்சனாபுரி சென்றேறப் போகாது
என்று மாயோனிதுவுரை கூறிட
இருந்தபேர்களும் உள்ளதென் றார்களே

விருத்தம்

ஆயனார் உரைத்தபோது அரனுமே மனதுமெச்சி

விளக்கவுரை :


அருள் நூல் 2401 - 2430 of 2738 அடிகள்

arul-nool

சொல்லும்மாயங்கள் யிங்கவர் கண்டிடும்
மார்க்கமாகவே நாலுவேதத்திலும்
மாறாட்டியே வெகுபூசையுண்டவர்
பன்றிகோழி பலிபல தானதும்
பார்த்துச்செய்வோரை காத்துக்கொள்ளுவார்
அன்றிநித்தம் அவரை தொழாது
அதட்டுவோரை உருட்டியே கொல்லுவார்
மூடும்கண்கள் விழிப்பதற்குள்ளாக
உலகம்ஈரேழும் உலாவித்திரிபவர்
வாசமான வடவா முகத்திலே
வன்னிசெந்தழல் ஆவிகுளிப்பவர்
தேசமெங்கு மவரல்லால் வேறில்லை
கொல்லும் வரிசைக்க வாள்வல்லவர்
வேசமானால் பலது கொண்டாடுவார்
வெற்றிவீரர் வெகுபுத்திக் காரராம்
ஆனதாலவர் அருகில்வந்தாக்கால்
அட்டதுட்டிக்கு இடமல்லோ ஆக்குவார்
ஈனம்சற்றும் இரக்கம் கிடையாது
ஏற்றமாலோனே யோதுதான்சொல்கிறீர்
ஆகுமோ அந்த பேர்களமக்கென்றார்
ஐந்துபேரையுமிங்கே அழைக்கிறேன்
பாகுசெநாpந்தஈசர் உரைத்திட
பண்டுமாலும் பகுத்துரை செய்வார்
நல்லமாமறை மைத்துணரானவர்
நாட்டிலிப்படி கோட்டிகளாக்கிடில்
செல்வமாகிய தெச்சணம் மீதினில்
சென்றுநான்தவன் செய்துநிறைவேற்றி
அன்பரானமனுக்கள் தொpந்துநான்
அரசேயாள வரம்பெற்றதெப்படி
இந்தமாஞாலா பேர்களிருந்தக்கால்

விளக்கவுரை :

அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

arul-nool

கன்னி யீஸ்வரி சரசுவதியே
சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்;கு
தெய்வமடவாரும் காப்பாமே

விருத்தம்

ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும்
சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில்
வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளா;கன்னி நகாpல்மாயன்
நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே

வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு
கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார்
சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக
பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார்

அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க
ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து
என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே
நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன
சன்னபின்னம் போலுள்ள வீரர்கள்
தா;மபுரி நன்மைக்குமாதே
என்னமாயிது நான்செய்வதெப்படி
என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே
ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள்
ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர்
நாடுமட்டும் அடக்கி உண்டிடும்
நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ
கடியசேவகன் கயிலையில் பையனும்
அக்கினியேறி மாயப்பலவேசம்
அத்திவாக்கனும் காத்தவராயனும்
அந்துபேருமே தீர்க்கமுள்ளவர்
தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான்
தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர்
கோலமாம்பல தூலங்கள் கற்றவர்

விளக்கவுரை :


அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

arul-nool

கதைப்பாடத் திருமால் காப்பாம்
அண்ணன் தம்பியோடைந்து பேரும்
அருளால் சிவவேடமுந்தாpத்து
ஒண்ணு போலொரு சொல்லதுவாய்
உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க

வண்டத்தனம் பேசும்வன்பர்களே
வாணன் வதைத்திந்த கலியுகத்தில்
கொண்டே யிருட்கலி தனையறுத்து
கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும்

துலங்கா பதிகளும் துலங்கவைத்துத்
தொணும் சிவாலயம் காத்தாண்டு
பெருமைமிகு ஆடை பால்பழமும்
பொpய மணிமேடை அம்பலமும்

நன்மை பலதான வரிசையுடன்
நாரணர் சட்டம் மீறாமலே
ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக
உண்மை பலசெய்தாரதை

முழுதும் காவியமாய் படிப்வர்க்கு
முதலோன் அருள்தந்து முன்நிற்கவே
கருரெனும் வீரர் கருடராசன்
கடியகமண்டல சிமளராசன்

துட்டரெனும்வீரர்; தேர்த்தகனும்
குட்டிவீரனும் தேர்க்குடையோன்
அன்பர்க்கனுகூல மாவீரன்
அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற

வாரபிழையொன்றும் வாராமலே
வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார்
சீராய்ச் சரவணம் மேல்துயிலும்
செந்தில் வேற்குரு கந்தப்பரே
கந்தக்கருங்குhல் தெய்வமாது

விளக்கவுரை :


அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

arul-nool

நன்மையாய்த்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ
தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய
செம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார்

என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள்
தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான
மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன்
என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார்

வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி
புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து
மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பாpசையேந்தும்
தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார்

மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை
தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும்
பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை
குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே

வேறு

சிவனே சிவஞானத் தேசிகனே
தேவர் தேவர்க்கும்தாயகமே
தவமே தவஞான தவக்கொழுந்தே
சர்வதயாபர சங்கரனே

சங்கம் நிறைந்தருள்தற்பரனே
தமியேன் உனதுட வருளாலிந்த
மங்கைபதிநாட்டில் தாமரையூர்
வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள்

ஏவல் சீவாயிமாரெனவும்
ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே
காவல்காரராய் வரங்கள் வேண்டிக்
கருடரெனப்போர் தழைக்தோங்க

மூவுலோகம் தளைத்தோங்க
முதலோன் மகவெனகீர்த்திபெற்ற
காவபுகழ்கொண்ட கருடராசன்

விளக்கவுரை :

அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்

arul-nool

வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து  தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.

பஞ்சதேவர் உற்பத்தி

காப்பு

விருத்தம்

சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி
நாரணர் மனுப்போலிந்த நகா;க்கலியுகத்தில் வந்து
போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி
காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே

பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும்

விளக்கவுரை :

அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

arul-nool

தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்

விளக்கவுரை :


அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

arul-nool

நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே

விளக்கவுரை :


அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

arul-nool

கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு

விளக்கவுரை :

Powered by Blogger.