அகிலத்திரட்டு அம்மானை 811 - 840 of 16200 அடிகள்



அகிலத்திரட்டு அம்மானை 811 - 840 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்
தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க
ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து
கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்
வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்
பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து
அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து
மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்
அகில முழுதும் அடக்கியர சாண்டனனே
அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்
ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்
தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi