அகிலத்திரட்டு அம்மானை 751 - 780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 751 - 780 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி
திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான்
சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன்
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்
ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி
ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார்
ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான்
பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்
மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்
சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து
பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச்
சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது
பவமான சூர பற்பன் பிறந்தனனாம்
இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும்
சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது
சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள்
வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க
அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி
உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும்
உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi