அகிலத்திரட்டு அம்மானை 181 - 210 of 16200 அடிகள்


அகிலத்திரட்டு அம்மானை 181 - 210 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே
ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே
தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீச வினைதீர நீராடுந் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே
பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
நாகமதில் துயில்வோர் நாடிவரும் தெச்சணமே
பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
உகத்துதிருநாள் நடத்துவதும் தெச்சணமே
செகத்தோர்கள் வந்து சேருவதும் தெச்சணமே
ஆகதர்ம்ம் வளருவதும் தெச்சணமே
மாயத்தேர் மாயன் ஏறுவதும் தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது
அச்சமில்லாப் பூமி அடவுகே ளம்மானை
கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி
நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான
தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்

சீமையின் இயல்பு

புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட
அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும்
கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும்
எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi