அகிலத்திரட்டு அம்மானை 601 - 630 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 601 - 630 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க
முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத்
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி
அப்போது மாயன் ஆதி யடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும்
என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க
வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார்
திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும்
பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால்
மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள்
ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார்
அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில்
தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு
அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி
போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல்
வாறாரே சூரர் வாய்களிரு காதவழி
சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும்
மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்
கண்களொருநூறு வெண்டரள மிருகலமே
துங்கணங் களாகச் சூர ரடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்
அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசழித்து
வீணடா செய்தாய் விழலா யறமோடா
என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi