அகிலத்திரட்டு அம்மானை 361 - 390 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 361 - 390 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம்வழக்கு வாரா தேயிருந்தார்
அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை
சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார்
இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு
விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை
இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்

கயிலை வளமை


முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை
பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை
ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும்
ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரு மறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமே சுரனாரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi