அகிலத்திரட்டு அம்மானை 511 - 540 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 511 - 540 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்
துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்
பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை
அந்தக் குறோணி அவனுதிர மானதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச்
சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை

சதுரயுகம் - குண்டோமசாலி பாடு

அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி
முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக்
குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப்
பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்
வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை
முந்து பிறந்த முழுமோச மானதிலும்
மந்து முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே
உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான்
அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான்
மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi