அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

arul-nool

கன்னி யீஸ்வரி சரசுவதியே
சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்;கு
தெய்வமடவாரும் காப்பாமே

விருத்தம்

ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும்
சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில்
வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளா;கன்னி நகாpல்மாயன்
நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே

வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு
கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார்
சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக
பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார்

அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க
ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து
என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே
நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன
சன்னபின்னம் போலுள்ள வீரர்கள்
தா;மபுரி நன்மைக்குமாதே
என்னமாயிது நான்செய்வதெப்படி
என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே
ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள்
ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர்
நாடுமட்டும் அடக்கி உண்டிடும்
நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ
கடியசேவகன் கயிலையில் பையனும்
அக்கினியேறி மாயப்பலவேசம்
அத்திவாக்கனும் காத்தவராயனும்
அந்துபேருமே தீர்க்கமுள்ளவர்
தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான்
தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர்
கோலமாம்பல தூலங்கள் கற்றவர்

விளக்கவுரை :


அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

arul-nool

கதைப்பாடத் திருமால் காப்பாம்
அண்ணன் தம்பியோடைந்து பேரும்
அருளால் சிவவேடமுந்தாpத்து
ஒண்ணு போலொரு சொல்லதுவாய்
உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க

வண்டத்தனம் பேசும்வன்பர்களே
வாணன் வதைத்திந்த கலியுகத்தில்
கொண்டே யிருட்கலி தனையறுத்து
கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும்

துலங்கா பதிகளும் துலங்கவைத்துத்
தொணும் சிவாலயம் காத்தாண்டு
பெருமைமிகு ஆடை பால்பழமும்
பொpய மணிமேடை அம்பலமும்

நன்மை பலதான வரிசையுடன்
நாரணர் சட்டம் மீறாமலே
ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக
உண்மை பலசெய்தாரதை

முழுதும் காவியமாய் படிப்வர்க்கு
முதலோன் அருள்தந்து முன்நிற்கவே
கருரெனும் வீரர் கருடராசன்
கடியகமண்டல சிமளராசன்

துட்டரெனும்வீரர்; தேர்த்தகனும்
குட்டிவீரனும் தேர்க்குடையோன்
அன்பர்க்கனுகூல மாவீரன்
அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற

வாரபிழையொன்றும் வாராமலே
வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார்
சீராய்ச் சரவணம் மேல்துயிலும்
செந்தில் வேற்குரு கந்தப்பரே
கந்தக்கருங்குhல் தெய்வமாது

விளக்கவுரை :


அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

arul-nool

நன்மையாய்த்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ
தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய
செம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார்

என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள்
தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான
மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன்
என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார்

வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி
புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து
மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பாpசையேந்தும்
தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார்

மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை
தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும்
பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை
குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே

வேறு

சிவனே சிவஞானத் தேசிகனே
தேவர் தேவர்க்கும்தாயகமே
தவமே தவஞான தவக்கொழுந்தே
சர்வதயாபர சங்கரனே

சங்கம் நிறைந்தருள்தற்பரனே
தமியேன் உனதுட வருளாலிந்த
மங்கைபதிநாட்டில் தாமரையூர்
வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள்

ஏவல் சீவாயிமாரெனவும்
ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே
காவல்காரராய் வரங்கள் வேண்டிக்
கருடரெனப்போர் தழைக்தோங்க

மூவுலோகம் தளைத்தோங்க
முதலோன் மகவெனகீர்த்திபெற்ற
காவபுகழ்கொண்ட கருடராசன்

விளக்கவுரை :

அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்

arul-nool

வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து  தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.

பஞ்சதேவர் உற்பத்தி

காப்பு

விருத்தம்

சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி
நாரணர் மனுப்போலிந்த நகா;க்கலியுகத்தில் வந்து
போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி
காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே

பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும்

விளக்கவுரை :

அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

arul-nool

தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்

விளக்கவுரை :


அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

arul-nool

நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே

விளக்கவுரை :


அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

arul-nool

கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2161 - 2190 of 2738 அடிகள்

arul-nool

தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன்
ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு
சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு
கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு
ஆலங்காய்நெல்லிவிளையும் அரிசிசிறு தானியமுண்டு
அமுததேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்
கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு
சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய்
தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து
கற்புடையராசன்வந்து கண்ணாடி வைத்துபப் பார்த்தான்
என்பேரில் குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை
அப்படியேபிள்ளகைளே அணைத்தார்பால்கோட்டையிலே
இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு
சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களக்குக்
கன்னியிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன்
சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு
பஞ்சவரே உங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை
மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம்தீர்த்துவாறேன்
திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி
பால்காவடிவேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன்
ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே
சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன்
பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை
நல்லெண்ணெய் பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை
தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே
நானானேன் தானானேன் தந்தேநன்னம் தந்தேநன்னம்
நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன்
மந்திரம் மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன்
கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும்

விளக்கவுரை :


அருள் நூல் 2131 - 2160 of 2738 அடிகள்

arul-nool

என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ
வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான்
ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே
சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே
அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே
தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான்
பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க
பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன்
குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன்
கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன்
தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில்
வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங்
எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன்
அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான்
செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு
இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா
தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு
பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு
பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்
கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை
பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட்டானுமில்லை
பொன்னரிய கன்னபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால்
குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்துவைத்திருக்குதப்பா
பட்டமர சாளக்கோடிமக்க ளுண்டு பாவனையாய்நான்  கொடுப்பேன்
எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன்
சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகாட்டி ஆளலாமே
குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே
அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுத்கொள்ளலாமே
கண்ணாடி பார்த்தப்பட்டு கடியதுகியில் ஆடையுண்டு
குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டமுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 2101 - 2130 of 2738 அடிகள்

arul-nool

இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே
பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா
சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளர்த்தபிள்ளை
இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா
உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன்
தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன்
அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார்
ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென்
கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க
எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே
ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும்
மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு
என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான்
எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன்
கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன்
கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா
மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே
கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன்
அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன்
தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை
அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன்
விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான்
என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய்
அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே
ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை
உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை
கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை
உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை
ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ

விளக்கவுரை :


Powered by Blogger.