அருள் நூல் 1291 - 1320 of 2738 அடிகள்

arul-nool

அரிகோபலனை அய்யா காதை முறுக்கி
உனக்கு இடடகணக்கைத் தந்தேன்
தந்த கணக்கை எல்லோருக்கும்
தெரியச் சொன்னாயா?
தெரியச்சொன்னதைச் சொல் என்று கேட்க
அரிகோபலன் சொல்லத் தெரியமால் நின்று
தியங்கண்டு மகிழ்ந்து மயிலாடி சீசர்
கிடுகிடென்று மனப்பயங்கரமாய் நிற்க
நீ சொல்சீசன்  எழுத்தெழுந்து அய்யா சொல்ல
அரிகோபலன் சொல்லத்தெரியாமலும்
சீசர்சொல்லத் தெரியமாலும் இருந்ததினாலே
அய்யாதிருவாய் மலர்ந்து அருளினது என்னவென்றால்
கன்னிமார் ஏழுபேர் உண்டுமே
ஏழுபேர்க்கும் ஏழுமதலைகள் உண்டுமே
ஏழுபேரில் வைகையில் இரண்டுபேர் இறந்துபோனதுண்டுமே
அதிலே ஐந்துபேர்க்கு ஐந்துதேவிமார் உண்டுமே
ஐந்துபேர் ஆண்பிள்ளையாளால் அவரவர் தேவிமார்க்கு
அம்மையிடத்தில் உத்தரவு தோணிற்று
பெண்பிள்ளை ஐந்துபேரானாலும்
தர்மக்கிணற்றில் தானம்பிண்ணித் தர்மக்கிணற்றை ஐந்துதரம்
சுற்றிச்சேவித்து நம்முடைய திருப்பதியை
ஐந்துதரம் சுற்றிச் சேவித்து
கொடிமரத்தை ஐந்துதரம் சுற்றி சேவித்து
நான் அம்பலத்தில் சுவாமி அரசடிமூட்டில்
வந்திருந்து சத்தியம் கொண்டோம்
அன்றுமுதலாய் அந்த ஒழுங்கின்படி
நடந்து வருகின்றார்களா?
அவரவர் தேவிமார் முகம்பார்த்து பேசினதே அல்லாது
வேறெதேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்றும்
ஆண்பிள்ளைகள் நீங்கள் ஐந்துபேரானாலும்

விளக்கவுரை :



அருள் நூல் 1261 - 1290 of 2738 அடிகள்

arul-nool

பத்திரத்தைப் பள்ளியில் வைத்துப்பகர்ந்துகொடு நீமகனே,
இப்படி, உத்தரவுதந்தேன் உகந்து வா மகனே!
சத்தியமாயிருக்கவேணும் சண்டைபோடாதே மகனே!
அவரவர் கூடுதமட்டும்உள்ளதர்மம் தந்ததை வாங்குங்கடா மகனே!
இந்தப் பத்திரத்தைப் பள்ளியிலே தானும்வைத்துப் பணிவிடைகள்
செய்திடுங்கோ!
புத்திர பலன்களுண்டாம் பூமிவிளைந்துவரும்.
சத்தியமாயிருக்கவேணும் தர்மபதிகிடைக்கும் என்மகனே.
தர்மசங்கத்தார் தர்மம் வளரும்.
தர்மராசர் தர்மபுவி ஆளுவார்.
அம்மையார் பத்திரம்
பையன்மார் பத்திரம்
சீசன்மார் பத்திரம்
திருநெல்வேலிமார் பத்திரம்
பால்விறகுப் பத்திரம்
அய்யாபதி உட்படப் பத்திரம்
முட்டப்பதி பத்திரம்
பள்ளத்துப்பதிப் பத்திரம்
தாமரைக்குளம்பதிப் பத்திரம்
பூப்பதிப் பத்திரம்
செட்டிக்குடியிருப்புப் பத்திரம்
அகத்தீசுவரம் பத்திரம்
பாலவூர் பத்திரம்
சுண்டவிளைப் பத்திரம்
வடலிவிளைப் பத்திரம்
உன்பரக்கொடிப் பத்திரம்
பற்பலஊர் ஜனங்களுக்கும் கூடியபத்திரம்.

அய்யா சீசருக்குச் சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யாபதியில் வடக்கே முகமாயிருக்க
சீசர்தெற்கே முகமாகநிற்க
அரிகோபலனும் கைகட்டி மனப்பயங்கரமாய் நிற்க

விளக்கவுரை :


அருள் நூல் 1231 - 1260 of 2738 அடிகள்

arul-nool

நாம்சொன்னோம் மாமுனியும்
என், பள்ளியிலே வைத்திருந்தேன் பாதையில் போகவிட்டேன்.
கொடியேறும் நாள்தொடங்கி ஏழுநாள்
பிச்சை வாங்குங்கோ மகனே!
சுரையோடு கையிலெடுத்து எல்லோரும்
கூடிச்சேர்ந்து போய்விடுங்கோ.
சராசரத்தைப்போற்றித் தானதர்மம் செய்திடுங்கோ.
நல்லவர் இட்டதர்மம் நாள்தோறும் பொங்குமடா.
தர்மம், தந்தவனும் நல்லவன்தான்,
தராதவனும் நல்லவன்தான்.
நல்லவனும் பொல்லா தவனும்,
யெல்லாரும் நல்லவனென்று சொல்லிவிடு.
எட்டாம்நாள் வேட்டையாடி வருவேனடா நான்சுவாமி,
அகப்பட்டதைக் காப்பிட்ட மகன்கைக் கொடுத்து
உனக்கெனக்கும் பகையில்லையடா யுகபழிந்துபோனாலும்.
உன்னைப்போல் சுந்தரன் ஊரிலும்நான் காணேன்.
வட்டவட்ட சாலையிலே வாறவழிப் போக்கினிலே,
நீயுமுன்கூடச் சேர்ந்த ஜனங்களும் இட்டதர்மம் பெருகுமடா.
நாட்டைத்தான் ஒடுக்குதற்குக் கொடுத்தவரம் பறிக்கவாறேன்
நான்மகனே!
மந்திரவாள் தான்வாங்கி இந்திரனும் பதியேறி,
சந்திரனும் சூரியனும் சண்டைப்போட்டுத் தேசம்வாறார்.
இந்திரனார் சுந்தரர்க்குத் தாம்கொடுத்தோம் மாமுனியும்
இந்த, புதுச்சட்டம்வந்திருப்பதினால் நல்ல புத்தியாயிருந்து விடுங்கோ
நல்லபுத்தியிருக்காவிட்டால் பிழைகள்வரும் உங்களுக்கு
பற்பல ஊர்களிலேயிருக்கும் நிழல்தாங்கல்களில் என்மகனே
பள்ளியிலேதானும் வைத்துபணிவிடைகள் செய்திடுங்கோ.
சீசன்மார் கைக்கொடுத்து தெளிந்துபார் என்மகனே!
பள்ளிக்கூடங்கள்தோறும் பதிவாக நீங்கள்போய்   
இதை சொல்லுங்கடா என்மகனே மாமுனியும் சொன்னேன் நான்.

விளக்கவுரை :

அருள் நூல் 1201 - 1230 of 2738 அடிகள்

arul-nool

ஆண்மூட்பும் பெண்மூப்பும் அதிகப்பட்டு போச்சுதடா
இன, என்மூப்புதானுமுண்டு எவர்மூப்பும் செல்லாதே
பார்வதியும் அவறொருத்திப் பங்குண்டு என்று சொன்னாள்
அதுசீதனம் கொடுத்துப்போச்சு சிரிக்க வேண்டாம் என்மகனே
பள்ளியிலே தானிருக்கும் பள்ளியறைக் காவல்கார என்மகனே
உள்ளபடி நானுமிப்போ உபதேசம் சொல்கின்றேன்
பள்ளியிலே யிருந்து
பலபேர்க்கும் புத்திசொல்ல நாம்வருவோம்
பள்ளிக்கூடம் சோதிக்க
உத்தரவு நாம்கொடுத்தோம்மகனே
தர்மசீ சரை முன்னேவிட்டு சுவாமியும் நாம்வருவோம்
என்னுத்தர வோடேயுன் உத்தரவும் சொல்மகனே
நீயும்தான்
திருப்பிரம்பை பைக்கொடுத்து நீயனுப்பு என்மகனே
நீயனுப்பாவிட்டால் நான்
கூட்டிக்கொண்டு போய்விடுவேன் மகனே
என்னை, குற்றமென்றும் சொல்லாதே என்மகனே
இப்படி, கணக்கினைக் கற்பித்தகணக்கென்று
சொல்லிவா என்மகனே
ஆணும்பெண்ணுங் கூடி ஆசாரம் செய்தடுங்கோ
தானதர்மம் செய்துகொண்டு தழைப்பீர்கள் நீங்கமக்காள்.
மகனே, வட்டவட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
பட்டங்கள் தந்தேனடா பதறாதே என்மகனே
உன், உச்சக்கிரகமடா ஒருவருக்கும் தெரியாது.
உன், பச்சமுண்டால் போதுமடா
பகையெனக்கு இல்லையடா.
யாருக்கும் பதறாதே அச்சமில்லை என்மகனே
ஏடுதந்தேன், உன்கையிலே எழுத்தானியும் கூட தந்தேன்.
மகனே, பட்டயமும் தந்தேன் பகைதீர்த்தேன் பதறாதே
இனி, நமக்கொடு ஒழுங்குவேணும்.

விளக்கவுரை :


அருள் நூல் 1171 - 1200 of 2738 அடிகள்

arul-nool

சீதனமாய் உங்களுக்குநான் தந்தேனடாமகனே
சித்திரை மாதத்திலே செழித்தமழை பெய்யுமடா
பத்திரமாயிருந்து பணிவிடைகள் செய்திடுங்கோ
புத்திரன் நானொருவன் புத்திசொல்ல வந்தேனடா
வற்றாத பொய்கையிலே வாழுமந்தகுரு நாட்டில்
புத்திசொல்ல வந்திருந்து புலம்புகிறேன் நான்சுவாமி
கண்டகுறி சொல்லுதற்காய் கண்ணுறக்கம் நானுமில்லை
இந்தவிதிப்படியே வந்தேனடா நான்மகனே
எல்லோர்க்குங்கிட்டாது சொன்னேன் என்மகனே
பேய்செடிக்கு கொடுத்தவனை பிரம்பெடுத்துநானடிப்பேன்
ஆயிரத்தெட்டாம் மாசியில் வந்தங்கேபுத்தி சொன்னேன்
இதுவரைக்கும் புத்திசொல்லி என்வாயும் சடைந்துபோச்சு
இனி, சட்டங்களும் கூட்டங்களும் சமயங்களும் வருகுதடா
பெட்டகத்துத் திரவியமும் போய்விடுமோ என்மகனே
கட்டில்களும் நாருகளும் சட்டங்களும் போகுமடா
ஏரும்சீரும் ஆடுமாடும் போகுமடா என்மகனே
தெச்சணாப்பதியில் நான் தேரேற வந்தேனடா
காரணத்தைக்கேட்டமட்டும் கண்ணுறக்கம் தானுமில்லை
பூரணக்கேற்றபடி பூமிசெழிக்குமடா என்மகனே
வாதாடிவந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன் சுவாமி
நீராடிப்போகவேண்டாம் நெடுமால் திருக்கடலில்
ஓரடியாயளந்தமாயன் உலகமாள நாம்வருவோம்
பாதியடிகேட்டதற்குப் பங்கில்லையென்று சொன்னான்
சீறியவனைப்பார்த்ச் சினந்துவிட்டேன் மாவலியை
மாலயன் இடத்தில்வந்து மயங்குகிறான்மாமுனியும்
ஓரோலையெழுதுமட்டும் ஒளித்திருந்தேன் மாமுனியும்
கந்தல்துணி கழுத்திலிட்டும் காத்திருந்தேன் மாமுனியும்
சொந்தகிளை நானுனக்குச் சோறுதரவந்தேனடா
அட்டமந்திரமும் சாத்திரமும்மறைந்துபோகும் என்மகனே
இந்தவிதியுனக்கு இருத்திவைத்தேன் கலியுகத்தில்

விளக்கவுரை :



அருள் நூல் 1141 - 1170 of 2738 அடிகள்

arul-nool

என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ
கள்ளக்கணக்கெழுதும் பேர்களைத்தான்
முள்ளளியில் போட்டிடுவேன்
முதுகிலடித்திடுவேன் முனிபரனும் சொன்னேன்நான்
நான்சொன்னபடி கேட்காவிட்டால் விடுவேனோ நான்சுவாமி
ஒரு அன்னவூஞ்சல் போட்டிருக்கு அந்தபயல்களுக்கு
கழுகடையம் காட்டுக்குள்ளே காட்டித்தாரேன்சுவாமி
அவன் இட்டதெல்லாம் சட்டமென்று இருக்கிறான்மகனே
அவன், பெட்டகமும் பொன்பணமும்
பறிப்பேனடா நான்சுவாமி
பொல்லாப்பு இல்லையடா புலம்புகிறேன் நான்சுவாமி
வாழையிரண்டு குலையீன்றதுபோல்
வாறேனடா வையகத்தில் என்மகனே
இனிபள்ளிக்கூடம் சோதிக்கபையனையும் கொண்டுவாறேன்
அடே, நாமெழுதும் கணக்குகளை நடுத்தீர்த்துநாமெழுதி
ஆண்டிமகன் ஆண்டியடா ஆருக்கும் அஞ்சுவனோ
பாண்டிமகன் பாண்டியடா பண்டாரக் கிழவனல்லோ
இனி, கொடுத்தவரம் பறிப்பேனடா
குடல்தோன்றி நான்சுவாமி
உம்பளமம் சம்பளமும் ஒருகாசும் நமக்குவேண்டாம்
உத்தரவுபெற்றபடி யுள்ளதெல்லாம் போதுமடா
கைலாசவரம்பெறவே காத்திருக்கிறேன் சுவாமி
பூலோக ஆசாபாசப் பங்குவேண்டாமமகனே
அண்டரண்ம் படைத்தசுவாமி அரிவிரி படிக்கிறாரே
ஒன்றிரண்டும் தெரியாது நீ சொல்லித்தர மாட்டாயோ?
அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே
என்னுடைய பத்திரங்கள் என்னுடைய பள்ளியெல்லாம்
கொடுத்துவரச் சொன்னார் குருபரமாமுனியும்
என்கணகக்ன் பேரறிவான் ஊரறிவான் தலமறிவான்
பரமண்டலம் வூமண்டலம் பகுத்தெழுதிவாமகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1111 - 1140 of 2738 அடிகள்

arul-nool

நாமெல்லாபதிகளுக்கும் இருந்துவிளையாடும் சுவாமி
என்பேரைச்சொன்னால் எல்லாரும் அறிந்திடுவார்மகனே
நான்,
உள்ளபடி சொன்னதுண்டால் உலகம்கைக் கொள்ளாது
நான்,
சொன்னதைச் சொல்லாமலவன் சுயமதியாய்ச் சொன்னான்
அவனைச் செவிட்டிலே
தான்போட்டுக் கொடுத்த கணக்கைப்பறிப்பேன்மகனே
கள்ளக்கணக்கர்தான்பெருத்துக் கனமோசமாகிப் போச்சே
நாம் உள்ளபடிகேட்கையிலே அவனுத்தாரம்சொல்வேனோ
பல்லக்கு நான்தருவேன் பதறாதே நீமகனே
இப்படிநான் சொல்லச்சொன்னக்கணக்கருக்கொரு நகவண்டி
போடாயே
நீபோடாவிட்டால்நான்போடுவேனடா மகனே
கைலாசவாசல் திறக்கையிலே காட்டித்தாறேனிந்த அதிசயத்தை
இதைப்
பொய்யென்று சொன்னவரோடே போருக்கு நான் வருவேன்
பல்லாக்குந் தண்டிகையும் பரிமணமும் சந்தனமும்
உள்ளபடி உள்ளதெல்லாம் உங்களுக்கு நான்தருவேன்
வெள்ளானைக் கடலுக்குள்ளே விளையாடக் கண்டேனடா
தென்கடலும் வடகடலும் ஒருவழியாத்தோன்றுமடா
பாரளந்த மாயவர்க்கு பலவிதமும் உபாயமுண்டு
ஓரடியா நாமளந்து ஓடிவந்தேன் மகனே
மாவலியைச் சிறையில் வைத்த மாயனல்லோமகனே
இடையன்சாமி யென்றாலும் உங்களுக்குச் சட்டமுண்டு
முன்னோலை யெழுதுமட்டும் முழித்திருப்பேன் மகனே
ஏட்டுக்கடங்காது எழுத்ததாணிக்குஞ் சேராது
இதைமெய்யென்று சொன்னவரை முத்தியணைபேன்மகனே
உதித்தநாள் கொடியேற்றி இருபத்தினநாள் இறக்கிவிடு
இது, கலியுகத்து ஆசாபாசம் கண்டேனடா மகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1081 - 1110 of 2738 அடிகள்

arul-nool

உங்களைப் புகழ்ந்தெடுத்தேன் என்மகனே!
வானவெள்ளி உதிக்குமுன்னே வந்தேனடா மகனே!
இனிபூமி வெடித்துப் புத்திசொல்ல நான்வருவேன்.
தேவதேவர் கூட்டத்தில் திருசங்குதான் முழங்கும்.
வேகம்வந்தால் தீராது சொன்னேன் நான்என்மகனே
சடைவுவந்தால்; உங்களுக்கு சங்கடங்கள் தீர்ப்பது யார்?
பஞ்சாசாப பொருளைப் பகர்ந்தெழுத மாட்டால்
இந்தவிதிப்படிநான் சொன்னேன் என்மகனே
ஆற்றங்கரைப் பள்ளியிலே அங்கிருந்தேன் மகனே
ஊத்தங்கரைப் பள்ளியிலே ஒதுங்கியிருந்தேன்மகனே
குதிரைபரியாகவேதான் குடிகெடுக்க நான்வருவேன்
பதியெழும்பிக்கலியழிக்க மறைபொருளாய் நான்வருவேன்
செடிக்குக் கொடுத்தவனை செவிதிருக்கி குற்றங்கேட்பேன்
பக்தியில்லா
தேவப்பிராமணரைப் பயம்காட்ட நாம் வருவோம்
உள்ளபடி சொல்வதற்காய் உகந்துவந்தேன் என்மகனே
நல்லபாம்பு விசம்போல நடத்துவேனடாமகனே
அந்தவல்லரக்கன் கோட்டையிலே வடிகொடுத்ததேன்மகனே
என்சொல்கேட்காவிட்டால் சிரித்தறுப்பேன் மகனே
ஆரார்க்கும் புத்திசொல்லி அழிக்கவந்தேன் கலியுகத்தை
என்புத்திக் கேட்டாயானால் உனக்கிறைபகுதிதவிர்த்து வைப்பேன்
ஆளும்கோட்டை வாசலிலே அதிசயம் உண்டாகும் மகனே
அது, கைகண்ட புலச்சமடா காட்டித்தா றேன்மகனே
திருச்சம்பதிக் கடலுக்குள்ளே திருமாலும் அங்கிருந்தேன்
அந்தபதி உட்படவே ஆகபதி யிருவத்தினாலாம்
ஆளும்பதி தென்கடலில் அதிகர் வரயம்பதி என்மகனே
தென்கடலில் வழிகாட்டித் திரும்பிமுகம் பார்;க்கையிலே
சந்திரனும்சூரியனும் சண்டைபோட்டே மறைவார்
தெற்குவடக்குமாகத் திருப்பததியும் தோன்றுமடாமகனே
அந்தபதி அல்லாதே அதிபதி யங்கேஉண்டு என்மகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1051 - 1080 of 2738 அடிகள்


arul-nool

பூலோகப்பங்கதுதான் பொருத்தமில்லை உங்களுக்கு,
பூலோகப்பங்கதுதான் பகுதியுண்டு என்மகனே
சாற்றரிய தன்விசயன் தங்கிக்கிடங்கு மென்றுசொல்லி
பூத்துஅவர் சொரிந்து பூமியில்வந்தார் என்மகனே!
வேர்த்து அவர்சடைத்துப் பாசுபதம் வாங்கிப்
பகைத்தீர்ப்பேன் என்மகனே!
பள்ளியறை தான்திறந்து பதியேறும் நாளையிலே
உள்ளபடி சொல்லுதற்கு உகந்துவாறே னென்மகனே!
கவிந்திருந்து மாமுனியும் இந்த அதிசயத்தைக்கண்டிருந்து
நிமிர்ந்து அவர் காரணங்கள் செப்புவார் என்மகனே
உள்ளபடி நாமிந்த உபதேசம் சொன்னாலும்
நல்லதென்று சொல்லியவர் நன்மைகொள்ளாரென்மகனே!
உன்னருள்தானென்றுசொல்லி உந்திடாதேமகனே!
உனக்கேச்சும் பேச்சுமல்லாத யிணக்கமில்லை என்மகனே!
மாய்ச்சல்வாரும் தானுனக்கு மகிழ்ந்திருப்பாய் நீமகனே!
காய்ச்சல்வந்தால் உன்னைக்காணாது கற்பித்தேன் நான்மகனே
பயந்திருந்தநீ பணிவிடைகள் செய்வாயானால்,
உயர்ந்த குடிவாய் உயிர்பிழைப்பாய் நீமகனே!
இதைப்
பகர்த்தெழுதிவந்து பள்ளிகூடங்கள் தோறுங்கொடுத்து
அதில் குறைவுவந்தாலும் தெளிந்துவா என்மகனே.
நாமெழுதச் சொன்ன கணக்கரோடேதும் பறையாதே
தர்மம் பெருகுமடா தான்தளிர்ப்பாய் நீமகனே!
இறைபகுதிதான்குறைந்து இருந்தாள்வோம் நாம்மகனே!
துவரயம்பதியதுதான் துலங்குவரும் நாளையிலே
இலங்குமடா என்பதிதான் எழுதினேன் என்மகனே!
நாதாக்கள்கூட்டம்நாட்டில் நடுநடுங்கும்
போருக்கு வந்தவனை போகவிடேன் நான்மகனே!
ஒழுங்காய் நடந்துவர உத்தரவு தந்தேனடா.
பூமணப்பதிதனிலே,

விளக்கவுரை :



அருள் நூல் 1021 - 1050 of 2738 அடிகள்


arul-nool

முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம், ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகபதி யென்மகனே!
வட்ட வட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
நாம், இட்டபடி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே!
நாம் எழுந்தருளும் வேளையிலே அங்கங்கே உள்ளசனம்
எல்லோருந்தான்வருவார் என்மக்களே நீங்களுந்தான்.
அத்திபுரந்தனிலே ஐபேருந் தானிருந்தார்.
புத்தியுள்ள குருநாட்டில் பிறந்து வந்தேன் யென்மகனே!
பட்சிமிருகங்களும் பலஜீவ சந்துக்களும்,
பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடை செய் யும்மகனே!
தர்மம் பெரிதப்பா தான்சொன்னேன் என்மகனே!
தண்ணீர் பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றி சேவித்துவந்த,
மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே!
உகந்தகுடியென்று உன்னிடத்தில் சொன்னேன்நான்.
பயந்துதர்ம மிட்டந்த பரம்பொருளை தேடிடுங்கோ!
கொடுத்தது கூடாது கூடும்படி நீகொடுத்து,
அதிலிருந்து தசையாறி குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான்,
தழைப்பீர்கள் நீங்கமக்கள் தான்சொன்னேன் என்மகனே!
முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே!
பின்முகப்பிலாக்வி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன்.
பக்திமறவாமல் பதறாமல் நீயிருந்தால்,
புத்தி சொல்ல நான் வருவேன் புலம்புவேன் என்மகனே!
கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே.
சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து
போதமில்லையென்று பேசிடுநீ என்மகனே!
ஆடரவில்பள்ளிகொள்ளும் மாலவனும் தேவியுமாய்,
பேதகமில்லையென்று பொறுமை சொன்னா ரென்மகனே!
சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக் கூட்டத்திலே,
என்பங்கைத்தாவென்று பகர்ந்துவா நீமகனே!

விளக்கவுரை :



Powered by Blogger.