அருள் நூல் 2071 - 2100 of 2738 அடிகள்

arul-nool

மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே
ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன்
என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை
எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன்
பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார்
அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே
சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி
சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான்
இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று
பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே
அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன்
நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும்
என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார்
பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை
கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை
சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன்
கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன்
ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா
சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா
தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி
ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா
பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும்
பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா
சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும்
நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில்
பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான்
எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம்
முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன்
அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே
இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான்

விளக்கவுரை :

அருள் நூல் 2041 - 2070 of 2738 அடிகள்

arul-nool

செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க
எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே
செப்பறியதிருமாலும் அங்கிருக்க
தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம்
ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம்
பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே
முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன்
என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில்
வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க
என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய்
சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு
வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே
சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள்  அம்மையவள்
மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே
மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே
திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு
செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே
கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க
பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி
பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை
திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு
கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும்
பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை
கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன்
சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை
கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை
நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை
கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும்
அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக்
கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு

விளக்கவுரை :

அருள் நூல் 2011 - 2040 of 2738 அடிகள்

arul-nool

ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தன் போற்றி போற்றியே
மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம்போற்றி
தேவர்க்கரியதிரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே
காவகரியவனமதிலே கற்பை அழத்துக் கைவிட்டகன்ற
தாவாதுணையேயென்கணவா தயவேஉததுபதம் போற்றி
தீர்த்தோமெங்களைத்தானும் திரும்பக்கயிலைகழையாமலவர்
சார்ந்தோரெமது கணவரையும் தந்தேதரணி அரசான
தேர்ந்தேபயின்ற சிறுவர்களின் சிறப்புஏதும் குறையாமல்
வாழ்ந்தேயிருக்கு வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையார் பங்காளா
காட்டிலடியா ரேழ்பேம் கற்றா விழந்த பசுவது போல்
ஊட்டி உறக்க மில்லாமல் ஊமை கண்டக் கனாவது போல்
வாட்ட மறிந்து மனமிரங்கி வந்தாய் கவரை தீர்ந்தோமே

நடை

நாரணரேநீரும் நல்லபெண்கள் யேழுபேர்க்கும்
சீரான வரங்கள்செப்பி அனுப்புமென்றார்
உடனே நாராயணரும் உள்ளம்மிகக்கழித்து
மடமாதேபெண்ணே மக்களுடதன்வழியில்
சான்றோரிடமேதான் பிறந்து கன்னியர்களாய்
இருக்கும்சமயம் யான்வருவேன் தெச்சணத்தில்
தெச்சணத்தில்வந்து சிறந்த தவம்புரிந்து
தவத்தைநிறைவேற்றி தானிருக்கும் வேளையில்
உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன்
இருபேரும்மக்களை எடுத்துபுவி ஆண்;டிடலாம்
தந்தோம் வரங்கள்தான் பிறங்கோ பெண்ணோயென்றார்

விருத்தம்


தந்தார் வரத்தை வாங்கித் தார்குழலேழுபேரும்
முந்திநாமீன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில்தோன்ற
மைக்கழல் மார்களெல்லாம் மானிடர்வழியே வந்தார்
மேற்குலம் தன்னில் மாதர்விருப்பமாய் வாழ்ந்தாரன்றே.

திங்கள் பதம்

அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கை காலுமாகப்
பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே

விளக்கவுரை :

அருள் நூல் 1981 - 2010 of 2738 அடிகள்

arul-nool

நாடுபதி னாலறிய நாமமதுவிட்டு
காணாத கற்பகப்பால் வையதிலே கொடுத்து
காளியென்ற தேவியுடைய கையில்மிக வீந்து
வளர்த்துத்தரு வாயெனவே வாக்குமிக வாங்கி
மாமுனியும் ஓர்மலையில் மானாகச் சென்றார்
இளைத்துத்தளர்ந்து கூட்டையதில் போடவென்று
எண்ணிவிட யெம்பொருமாள் எய்துவிட்டான்வேடன்
வேடனுக்குப் புத்திசொல்லி பஞ்சவரை வருத்தி
வீரத்தனமெல்லாம் தண்டாலே யவர்வாங்கி
சூரமுள்ள கூட்டையதில் தான்கிடத்திப் போட்டுச்
சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச் சென்றார்
இப்படியே யுள்ளவரலாறான தெல்லாம்
ஆதிகருட ஆழ்வாரும் அம்மையுடன்சொல்லி
இப்போது கூட்டி வாறேனம்மா எனக்குவிடைதந்தால்
என்னடி பணிந்துசருட ஆழ்வாரும்நிற்க
நல்லதுதான் அண்ணருடைய அதிகத் திறங்கேட்டோம்
நாலுமணி நேர மாதிநாராயணரைக் கூட்டிக்கொண்டு
மாதுபார் வதிகயிலை வாழ்ந்திருந்தாளே
கயிலையில் மாதுதானும் கட்டுடனிருக்கும்போது
ஒயிலுடன் கருடனும்; ஒருதொடி தன்னில்சென்று
அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிவாறேன்
கயிலையில் வந்துஞாயம் கட்டுடன் உரைக்கின்றாரே
பரிதனக் குதவுமாயப் பாவைய ரேழுபேரும்
திறமையாய் தவசிபார்க்க சீர்தனைச் செய்யுமென்றார்
தவம்தன்னையேற்றாம் வாருங்கோ வெளியிலென்றார்
வெளியே வந்துமாது விளக்கமே தீர்த்தோமென்று
தெளிவுடன் வெற்றியோங்கி வாழ்வைநீதருவாய்போற்றி

விருத்தம்

சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவாசிவனே போற்றி
நீதவாநனிநடப் பெய்துவாய் போற்றி நீ சிவசிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்வனே போற்றி

விளக்கவுரை :


அருள் நூல் 1951 - 1980 of 2738 அடிகள்

arul-nool

அப்படியிருக்க ஆனகயிலைதன்னில்
அம்மையுமையும் தானேறிந்து தானேது சொல்வாள்
செப்பமுடி யாததவம் தேவியேழு பேரும்
நற்புடைய யீசுரரைச் சென்று தொழுதேற்றி
நல்லகன்னி மார்புதுமை நவிலலுற்றார் மாது
கேட்டறிந்த யீசுரரும் கெட்டி கெட்டி யென்ன
கேட்டாயோ வுனதண்ணர் நாட்ட மிதுவென்றார்
வட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு
மாயஞ்செய்ய யேதுவினால் வந்;தஞாயம் பெண்ணே
நாட்டமுட னிந்தகதை பார்க்கப் போகவென்றால்
நாரணர் வாராமல் நாம்போவ தேதோ
கேட்டந்த யீசொரியும் கெட்டிகெட்டியென்று
கெருடாழ்வா ரைநினைக்கக உடனே யவர்வந்தார்
உற்றாயுங்கள் அண்ணருடைய ஊர்வளமை யெல்லாம்
உரைத்துவிடு வென்றாரே உலகளந்த மாதை
சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம்
சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே
வீரமுள்ள தெய்வகன்னி மாரைவன மீதில்
வித்தியாதர முனிபோலே வேசமொன் யெடுத்து
கூதலையும் கொந்தலையும் கோதையர்க் கேவி
கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப்போ லானார்
அக்கினி வேசம்  கொண்டு அவர்கிடக்கும் மாயம்
ஆரமணி கன்னியர்கள் கூதல்பொறுக்காமல்
முக்கியமாய் அக்கினியை மோந்துவளைந் தனரே
முன்மோகம் மிகத்திரண்டு மூன்று நாலுப்பிள்ளை
பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு வோடி
மீளும்சுனை தானிழந்து பெண்களேழு பேரும்
அத்துவனக் கானகத்தில் அருந்தவசு நின்றார்
அண்ணரொரு பிள்ளைதனை ஆவியுமே யெடுத்து
நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணானென்று

விளக்கவுரை :


அருள் நூல் 1921 - 1950 of 2738 அடிகள்

arul-nool

செவ்வாய்க்கருமேனி சிறீபத்ம னாபதிலே
சென்றேகடலில் துயன்ற பாரளந்த்
சிறீபாதமே துணையாம்
ஐயவர்க்குதவுவோனே ஆதிநாராயணனே
இந்தவரத்தைதந்தருள் செய்யவேண்டும் பச்சைமாலே
தென்கடலில்துயின்ற பாரளந்த சிறீபதமே துணையாம்
ஆடரவில்துயிலும் சிவஐங்கரா சங்கரனெ
ஆலிலையில்துயிலும்நாதனே ஆபத்துக்காத்தருள்வாய்
மனதிலறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும்
வந்திடும்தீவினை அகற்றிடவே அருள்மாதுமைபாகனே
இனிதுயர் தீர்த்தேழுபேர்களும் யீன்றவைத்த
மதலையைத்தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாருமய்யனே
பண்டூசல்செய்த முனியவர்பாரியாய் எங்களையும்
பண்பாகக்கலியாணயின்ப முடன்செய்து
பாராளுதற்குவந்தருள் செய்யவேணும்
சிசிமாது மணவைநகர்ப்பதியில் வாழ்பவரே
மேட்டுலாடமதில் மெல்லியர் கண்டாட்டி மேலுடலெல்லாம்
பொருமித்துநயனத்துவில்விளைத்ததில் ஐந்துபூவைபக்கட்டி
நாற்பத்தொன்றுபத்து ஆவிமடக்கி சயனமதில்மேவளர்த்ததபாக
நாடித்தங்கள்தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டிதிலோர்
விரலைநாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழிதாக்கி
நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக்கொண்டு கல்லறிவைப்
போக்கிவாக்கி சித்தியாயநோக்கி மடவார்வாசமெல்லாம்
அடைத்தொரு வாசல்நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியைமிஞ்சவே
இருத்திப்பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும்
இந்த நிகட்டையாக பன்னிரண்டுவருடம் காலிழகாவண்ணம்
தவசிநின்றார் நின்றுதவசில் மண்டலரைக்கண்டு தேவரெல்லாம்
நெட்டூரமித்தவன்தான் கட்டுட் டென்பார்
மண்டலத்தில் யித்தவம்போல் கண்டறியோம் கேட்டறியோம்
விண்டறியக்கூடாத வெற்றி! வெற்றி! வெற்றி! மேலோர்மெச்சினார்

விளக்கவுரை :


அருள் நூல் 1891 - 1920 of 2738 அடிகள்

arul-nool

மெய்யோவறீய வழியிலொரு விசனத்தீங்கு கண்டிலமே
பையோடரவு மிகவணிந்தபரமன் பயிலைக்கேகவென்றால்
ஓடுவர் கன்னியர்களெல்லாம் பதறிஓம்நகச்சிவாயவெனவே
நாடுவார் நமக்கிவ்விதம் நன்னுதல்மார் ஏழுபேருமோடினார்.

விருத்தம்

பொர்பவனத்தில குளித்ததும்போச்சு
    பென்னார்கயிலை வாழ்ந்ததும் போச்சு
கற்போகுலைந்துபல கோலங்களாச்சு            
    காட்டில்பயந்திருக்கவே விதியாச்சு
என்னயென்ன பாவத்தைச் செய்தோமோ
    கண்ணேயிவ்விதி வந்தறியோமோ
வன்னசிவனார் நம்மைமறந்தார்
    மாதுமைத்தாயம் நமைமற்நதாரே
என்றந்த கன்னி யேழுபேரும்
    யியல்பாய் வனவாசம் போனார்
சென்றந்த வனவாசம் கண்டவர்மறைந்து
    சிவானர் அருள்பெறவே தவசிநன்றாரே
நின்றதவத்தின் நிலைமை கூறிட
    நித்தமேயுன்சித்த மருள்செய்வாயn
மக்களையீன்றுவந்த மாமுனியருகில்வைத்து
    வெட்கமும்மிகவேயாகி விழிநுதல்வேழுபேரும்
சிக்கெனவாகனத்தில் சென்றவரேழுபேரும்
    அம்மையருள்பெறத் தவசி நின்றார்
நின்றார் நெடுகான வனமானதிலே
    நித்தம் கற்றோனை சித்தம்வைத்தே
வண்டாடும் பூஞ்சுனையில் மாதேழு
    பேருங்குழித்து நித்தம்வருகையிலே
கோலம் வேறாகின தாலிவ்வனத்திலே
    சிவனேதஞ்சமென்று மெங்களை ஆளவருவாயே

நடை

வருவாய் வருவாய் நீ மகாபரயீ சுவரனே
வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட்கொள்வாயே

விளக்கவுரை :

அருள் நூல் 1861 - 1890 of 2738 அடிகள்

arul-nool

கண்ட அகமகிழ்ந்து நல்லகாரிகை கன்னியர்ஏழுபேரும்
பண்டுமறைந்தநிதி நல்லபண்பாகக் கண்டபாவினைபோல்
வந்துகுளிர் காயந்தது நல்லமங்கைஎயெழுபேரும் போவோமென்று
பந்துதனம் உடையாரந்த பாவையேழுபேரும் சம்மதித்து
வந்துமிகக்கனலை வட்டமிட்டே வளைந்துகொண்டு
சந்துஷ்டியாய் மகிழந்து தணலை ஆவிமிகத் தானிருக்க
கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு
பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவையேழுபேரும் கர்ப்பமுற்று
அண்டாமல்தான்நீங்கி இவரோவெனவே எரிக்கஉன்னினரே
கொண்டாடித்தாக்கிடவே அந்த, கோதையின் கற்பிழந்து
எரிக்கமதியழிந்து அந்த, ஏலங்குழலாரியல்மறந்து
மதிக்கொத்தமாமயிலார் மாமுனியைக்கண்டு மதிஅசந்து
அய்யோநம்பெண்ணரசே நம்மறிவுகுலைந்தோம் ஆயிழையே
இத்தனைநாள்வரைக்கும் நாமிருந்த நெறியும்குலைந்தோமடி
சத்திக்குமீசுரக்கும் நாம்சாற்றும்மொழியேது தங்கையரே
வனத்திலேவந்தயிடத்திலிருந்த மாயம் வருவதறிந்திலமே
புனத்தில்கிளியன்னமும் நம்பேச்சும்கேட்காமல் போகுதடி
என்னவிதிவசமோ நமக்கிட்ட விதிமுறையிப்படியோர்
அன்னமடவாரேயிது யார்செய்த கைமசக்கானதுவோ
என்றே மிகப்புலம்ப முனியேற்றின கர்ப்பமுருத்திரண்டு
அன்றே ஒருமணிக்கர்ப்பம் அவதரித்தங்கேதான்பிறந்து
பிறந்தபொழுது பெருமூச்சுவிட்டார் ஆயிழைமாரெல்லாம்
மறக்கமதிமயங்கியந்த மக்களைப்பாராமல்மாமடவார்
நாணிமிகவயர்த்து காடு நாட்டூடேபோவென்று
கோணிமடவார் கோகோகோவென வோடலுற்றார்
ஓடினார்பெண்களெல்லாம் ஒருநொடியதில்நில்லாமல்
தேடினார்வானத்தினூடே சிவசிவா சிவனேயென்று
கோடியேமடவாரெல்லாம்; கொண்டதோர் நாணத்தாலே
வாடியேபுலம்பிமாதர்வனத்தை நோக்கிப் போகின்றாரே
அய்யா வனத்தில் சுனையாட அங்கேயிருந்து வரும்போது

விளக்கவுரை :


அருள் நூல் 1831 - 1860 of 2738 அடிகள்

arul-nool

ஈசன்யெலென்று மரத்திலந்ததேவிமார் ஏறவேணுமென்றே
மிகத்துணிந்து நல்லஏழினுள்கன்னி இளையவளும்
கூறிதுயிலெடுக்கும்வேளை கோலதிருமால் ஒரு கோலம் கொண்டார்
கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து
இன்றே கைவாச்சுதன்று யெரிக்கதுணிந்ததாரே நாரணரை
தீப்போல்மிகமிகவாவி அந்த சொந்த சுனைக்கரையானதிலே
வெயில்போல் கொழுந்துவிட்முமுனி நல்லகனலாகிகிடந்தார்
கண்டந்தகன்னியரும் கனலாய்எரிந்துவிடோமென்று சொல்லி
கொண்டாடிக்கன்னியர்கள் பின்னும் குக்களித்துச் சுனையாடவென்று
துகிலைக்கரையில் வைத்தஅந்த தோகைச்சுனையில் குளித்திடவே
வெயிலான மாயவருமொரு உபாயம்நினைத்தார் உலகளந்தார்
இனியிந்தகன்னிகட்குமெத்தவெவிறையலை தான்கொடுத்து
தணியாத அக்கினியைவந்துதழுவிட கற்பையழிக்கவென்று
நினைத்தே வருணனையும் நெடுவாயுவை அங்கேவரைவழைத்து
நினைந்தே விறையல்கொண்டு நண்ணுதல்மாரேழுபேரையிப்போ
மசக்கி கொடுவாவென்றொரு மாயமதுக்கு விடைகொடுத்தார்
திசக்கியமாயமது அந்ததேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே
அப்போதங்கே அருணன் ஆகாசமீதிலே நின்றுகொண்டு
பொற்பொறி நரல்போல் வந்த பெண்களின்மேலே தூவினனே
தப்பாமால்வாயுவும் வளர்சரீரம் விறைக்கவே வீசனனே
மெய்யானகன்னியர்கன் மெத்தவிறையலாலுளும் நடுங்கி
ஒடுங்கி மிகக்கொடுகி யந்த உள்ளம் தடுமாறும் பெண்களெல்லாம்
இந்த விறையலுக்கு நாம்ஏது செய்யப்போகிறோம் பெண்ணரசே
சிந்தையருதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி
ஆராருசெய்தததுவோ பெண்ணே ஆட்டம் பொறுக்கமுடியுதில்லை
கூரல்மிகக்காய ஒரு கொந்தணல் தன்னிலும் காணோமே
காணாமே பெண்ணரசேநம் கர்மவிதியது தங்கையரே
வாணாளயருதடி யென்று மாதுகன்னிமார் ஏழுபேரும்
பார்க்கின்றவப்பொழுது அந்தபாரான ஆவிக்கரையருகில்
தாக்கின்ற அக்கனியும் தணல்போலே குமறி யெரிந்திடவே

விளக்கவுரை :

அருள் நூல் 1801 - 1830 of 2738 அடிகள்

arul-nool

விருத்தம்

சீரணி மாயன்றானும் தெட்சணம் மீதில்வந்து
காரணமான கன்னிமார்கள் ஏழுபேரை
நாரணம் முகூர்த்தம் செய்ய நாடோருகுடைக்குள் ஆண்ட
காரணம் தன்னைக் கூறகமலப் பூமகளேகாப்போம்

நடை

சீரானகன்னியர்கள் சிவலோகம் சிவனார்க்குபூசைசெய்து
நேராய்மிகவிருக்க அந்த நேரிளைகன்னிமார் ஏழுபேர்களும்
நாராணயர்தொடர்ந்து அந்தநல்லவனத்தில் சுனையருகில்
ஆரார்மிகவறியார் அருவனம் பூஞ்சுனையானதிலே
போகாவவ்விடம்தனிலே அந்தப் பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை
வாயால்தொகுத்து உரைக்கயிந்த வையகமதில் யாதுளதோ
தேவர்மிகப்போகார் தெய்வேந்திரன் வானவர்போகவறிவார்
மூவரும்போகறியாரி முனிசித்தாதிமார்களும் போகறியார்
ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக்கரையானதிலே
ஆலிலைமேல்துயிலும் நல்லவச்சுதன்பச்சைமாலங்கே சென்று
ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலதின்மேல்
ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னிஏழுபேரும்
குளித்தோடி அக்கரையில்வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே
காணார்துகில்தனையும் கருமேகத்தைநோக்கிய ஆலமரத்தை
அண்ணாந்தவர்பார்த்து ஆடையைபார்க்கவே நோக்குவேளை
கண்டாரே ஆலமரத்தல் அவர்க்கானது கிலடையாளமென்று
கொண்டாடி கன்னியர்கள் கோ!கோ!கோ! என்ன கொடுமையென்பர்
எடுத்தாரைக்கண்டிலமே இதுஎன்மாயமோ பெண்ணரசே
கடுத்தானகற்பினையோயிது கம்மாயோ பெண்கன்னியரே
பூமிதனிலிருந்தும்நம்பொற்றுலகில் ஆலில்பறந்தென்ன
சுவாமிசிவனர்க்கு பொல்லாத தோசத்தை செய்தோமோ
கர்மவிதிப்பயனோ வேதன்கட்டளையிட்டபடிதானோ
நம்துகில்பற்து நடு ஆலமரத்திலே போயிருக்க
என்னவிதிப்பயனோ எடுத்தோரை கண்டிலோமி; பெண்ணரசே
உன்னியெடுப்பதற்கு ஒருஆளையிங்குகண்டிலோம்
என்றேமிகப்புலம்பி கன்னியேழுபேரும் மிகத்திரண்டு

விளக்கவுரை :


Powered by Blogger.