அகிலத்திரட்டு அம்மானை 7651 - 7680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு
தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும்
வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை
அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு
எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும்
கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
பரப்பிரியமாய் நின்று பக்திசோதித்தேநாம்
எங்குமிருந்து எரிப்போங் கலிதனையும்
சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை
என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான்
மன்று தனையளந்த மாயத் திருமாலே
இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து)
எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள்
கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே
நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும்
இகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து
மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய
நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி
மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து
மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன்
பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக்
கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச்
சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன்
என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே
அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு
சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7621 - 7650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும்
என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்
அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால்
நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்
அல்லாமற் கேளு அரிய முனியேநீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
அச்சாதிநன்றாகும் அவ்வினமும் நன்றாகும்
எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்
அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும்
தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும்
ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே
பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே
சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே
இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும்
சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண்
மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து
வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே
பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய்
முன்னுகத்தில் கேள் ஒருவர்க்கோர்வாரமுமாய்
நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச்
சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு
காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம்
மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம்
கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார்
பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன்
கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7591 - 7620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கனவிலு மடங்கா கருவிலு மடங்கா உருவிலு மடங்கா உருதையிலடங்கா
ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன தருகினி லடங்கிட
அருளுரைத் திடுவென அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான்

விருத்தம்


உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா உணர்விலு மடங்கா
உற்பனத் திலுமடங்கா தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா
தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா அகத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா
மனத்தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட
வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான்

நடை


ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும்
ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும்
ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென
ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே
எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே
கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால்
நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான்
தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான்
அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும்
இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான்
ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே
கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ
எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே
புனக்கார மில்லை பூசை முறையுமில்லை
கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும்
இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7561 - 7590 of 16200 அடிகள் 


akilathirattu-ammanai

செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார்
சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன்
சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன்
அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன்
வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன்
கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன்
நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன்
யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன்
விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன்
சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன்
கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன்
அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன்
புத்தியிலும் மடங்கேன் பொறியதிலுமடங்கேன்
இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன்
என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி
மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி

விருத்தம்


மண்ணிலு மடங்கா மனத்திலு மடங்கா மறையிலு மடங்கா
பலவசத்திலு மடங்கா கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா
கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா
எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா இறையினி லடங்கா
இரங்கிலு மடங்கா ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட
உரைத்திட திடமருளென பதத்தடிமிசை விழுந்தான்

விருத்தம்

மறையினி லடங்கா இறையினி லடங்கா வணங்கிலு மடங்கா
பலவகையிலு மடங்கா துறையினி லடங்கா தொல்புவியி லடங்கா
சுருதியி லடங்காய சுகயினிலடங்கா உறவிலு மடங்கா
ஒளியிலு மடங்கா உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா புகழ்ந்துனை யடைக்கிட
வகுத்துரையென பதத்தடி மிசைவிழுந்தான்

விருத்தம்

சரிகையி லடங்கா கிரியையி லடங்கா சயோகத்தி லடங்கா
ஞானத்தி லடங்கா கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7531 - 7560 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம்

திருமால் கலைமுனிக்கு அருளல்

பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க
வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி
நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி
பொடுபொடென வந்தான் போற வழிதனிலே
ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன்
கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன்
என்ன விதத்தாலே என்றே யவனிசைய
சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன்
அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான்
இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு
எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன்
அப்போ முனியோடு அருளினது நீர்கேளும்
மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை
நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ
கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும்
திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும்
முன்னின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன்
வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே
நில்லாமல் நின்று நீசன்தனை யழிப்பேன்
அற்புதமும் செய்யேன் அந்நீசன் தானறிய
உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன்
வந்தெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார்
என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார்
இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார்
அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே
எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே
அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7501 - 7530 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பூர்வத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை
என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும்
பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது
பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி
முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு
எண்ணாயிரத்தில் எடுத்தாரொரூராமஉரு
கண்ணாளர் தம்கூட்டில் கற்பகம்போ லித்தேவன்
சொர்க்கலோகம் போறார் சொர்ணமுடிபெறவே
ஆர்க்கும் கிடைக்காது அந்தலோக முடியின்
மதலையாகப் பிறந்து சொர்க்கந்தான் சேரவென்று
கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே
ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான்
பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித்
தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார்
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வைய மளந்த மாலும்பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத்
தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார்
செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து
மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம்
சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி
உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால்
அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே
எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும்
கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7471 - 7500 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிறந்த முகிர்த்தமதில்ச் சேர்த்தேயுனையெடுத்து
உன்தனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி
உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி
என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி
முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி
எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு
எட்டுத்திசை போற்ற ஏற்றகுடை யொன்றுதந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச்
செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி
எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால்
சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப்
பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும்
கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும்
மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான்
முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத்
தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய்
அரசாளவைப்பேன் என ஆதிமிகவுரைத்து
தேவனுயிரை திக்கென்று தான்பிடித்து
மூவர்நடுவருட கூட்டிலிட்டு முகத்தேவன் கூடழித்தார்
என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப்
பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7441 - 7470 of 16200 அடிகள் 


akilathirattu-ammanai

தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பரித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி
நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனைப் போல பெரிய சம்பூர்ணனை
சுமந்துவருவாய் கடலில் சொர்க்கங் கொடுக்கவேணும்
அமர்ந்த முகூர்த்தமதில் அங்குன்னை நானெடுத்து
உன்தனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
எந்தனோடு எல்லாரும் இன்பமாய் தவசிருந்து
சிவநாராயணரை சிறுமதலை குண்டராக்கி
நவசோதனைக்கு நாட்டுக் கனுப்பி வைத்து
புத்திரனாய் நீயெனக்குப் பெரிய தெய்வவுயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாள்க்கழித்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7411 - 7440 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை

ஆத்ம ஜெயம்

அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம்
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
நற்சடலமானதை நருக்கென்றளித்து விட்டு
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
தேவருக்கு அதிபதியாம் திருமால்ஆனவரும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்

விளக்கவுரை :   


அகிலத்திரட்டு அம்மானை 7381 - 7410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும்
காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
நாட்டையறுக்கும் நாதனுட சக்கரந்தான்
சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன்
என்பேரால் நீயும் என்சொர்க்கம் சேரனுமே
சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள்
என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே

விளக்கவுரை :   
Powered by Blogger.