அருள் நூல் 1951 - 1980 of 2738 அடிகள்

arul-nool

அப்படியிருக்க ஆனகயிலைதன்னில்
அம்மையுமையும் தானேறிந்து தானேது சொல்வாள்
செப்பமுடி யாததவம் தேவியேழு பேரும்
நற்புடைய யீசுரரைச் சென்று தொழுதேற்றி
நல்லகன்னி மார்புதுமை நவிலலுற்றார் மாது
கேட்டறிந்த யீசுரரும் கெட்டி கெட்டி யென்ன
கேட்டாயோ வுனதண்ணர் நாட்ட மிதுவென்றார்
வட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு
மாயஞ்செய்ய யேதுவினால் வந்;தஞாயம் பெண்ணே
நாட்டமுட னிந்தகதை பார்க்கப் போகவென்றால்
நாரணர் வாராமல் நாம்போவ தேதோ
கேட்டந்த யீசொரியும் கெட்டிகெட்டியென்று
கெருடாழ்வா ரைநினைக்கக உடனே யவர்வந்தார்
உற்றாயுங்கள் அண்ணருடைய ஊர்வளமை யெல்லாம்
உரைத்துவிடு வென்றாரே உலகளந்த மாதை
சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம்
சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே
வீரமுள்ள தெய்வகன்னி மாரைவன மீதில்
வித்தியாதர முனிபோலே வேசமொன் யெடுத்து
கூதலையும் கொந்தலையும் கோதையர்க் கேவி
கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப்போ லானார்
அக்கினி வேசம்  கொண்டு அவர்கிடக்கும் மாயம்
ஆரமணி கன்னியர்கள் கூதல்பொறுக்காமல்
முக்கியமாய் அக்கினியை மோந்துவளைந் தனரே
முன்மோகம் மிகத்திரண்டு மூன்று நாலுப்பிள்ளை
பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு வோடி
மீளும்சுனை தானிழந்து பெண்களேழு பேரும்
அத்துவனக் கானகத்தில் அருந்தவசு நின்றார்
அண்ணரொரு பிள்ளைதனை ஆவியுமே யெடுத்து
நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணானென்று

விளக்கவுரை :


அருள் நூல் 1921 - 1950 of 2738 அடிகள்

arul-nool

செவ்வாய்க்கருமேனி சிறீபத்ம னாபதிலே
சென்றேகடலில் துயன்ற பாரளந்த்
சிறீபாதமே துணையாம்
ஐயவர்க்குதவுவோனே ஆதிநாராயணனே
இந்தவரத்தைதந்தருள் செய்யவேண்டும் பச்சைமாலே
தென்கடலில்துயின்ற பாரளந்த சிறீபதமே துணையாம்
ஆடரவில்துயிலும் சிவஐங்கரா சங்கரனெ
ஆலிலையில்துயிலும்நாதனே ஆபத்துக்காத்தருள்வாய்
மனதிலறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும்
வந்திடும்தீவினை அகற்றிடவே அருள்மாதுமைபாகனே
இனிதுயர் தீர்த்தேழுபேர்களும் யீன்றவைத்த
மதலையைத்தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாருமய்யனே
பண்டூசல்செய்த முனியவர்பாரியாய் எங்களையும்
பண்பாகக்கலியாணயின்ப முடன்செய்து
பாராளுதற்குவந்தருள் செய்யவேணும்
சிசிமாது மணவைநகர்ப்பதியில் வாழ்பவரே
மேட்டுலாடமதில் மெல்லியர் கண்டாட்டி மேலுடலெல்லாம்
பொருமித்துநயனத்துவில்விளைத்ததில் ஐந்துபூவைபக்கட்டி
நாற்பத்தொன்றுபத்து ஆவிமடக்கி சயனமதில்மேவளர்த்ததபாக
நாடித்தங்கள்தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டிதிலோர்
விரலைநாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழிதாக்கி
நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக்கொண்டு கல்லறிவைப்
போக்கிவாக்கி சித்தியாயநோக்கி மடவார்வாசமெல்லாம்
அடைத்தொரு வாசல்நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியைமிஞ்சவே
இருத்திப்பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும்
இந்த நிகட்டையாக பன்னிரண்டுவருடம் காலிழகாவண்ணம்
தவசிநின்றார் நின்றுதவசில் மண்டலரைக்கண்டு தேவரெல்லாம்
நெட்டூரமித்தவன்தான் கட்டுட் டென்பார்
மண்டலத்தில் யித்தவம்போல் கண்டறியோம் கேட்டறியோம்
விண்டறியக்கூடாத வெற்றி! வெற்றி! வெற்றி! மேலோர்மெச்சினார்

விளக்கவுரை :


அருள் நூல் 1891 - 1920 of 2738 அடிகள்

arul-nool

மெய்யோவறீய வழியிலொரு விசனத்தீங்கு கண்டிலமே
பையோடரவு மிகவணிந்தபரமன் பயிலைக்கேகவென்றால்
ஓடுவர் கன்னியர்களெல்லாம் பதறிஓம்நகச்சிவாயவெனவே
நாடுவார் நமக்கிவ்விதம் நன்னுதல்மார் ஏழுபேருமோடினார்.

விருத்தம்

பொர்பவனத்தில குளித்ததும்போச்சு
    பென்னார்கயிலை வாழ்ந்ததும் போச்சு
கற்போகுலைந்துபல கோலங்களாச்சு            
    காட்டில்பயந்திருக்கவே விதியாச்சு
என்னயென்ன பாவத்தைச் செய்தோமோ
    கண்ணேயிவ்விதி வந்தறியோமோ
வன்னசிவனார் நம்மைமறந்தார்
    மாதுமைத்தாயம் நமைமற்நதாரே
என்றந்த கன்னி யேழுபேரும்
    யியல்பாய் வனவாசம் போனார்
சென்றந்த வனவாசம் கண்டவர்மறைந்து
    சிவானர் அருள்பெறவே தவசிநன்றாரே
நின்றதவத்தின் நிலைமை கூறிட
    நித்தமேயுன்சித்த மருள்செய்வாயn
மக்களையீன்றுவந்த மாமுனியருகில்வைத்து
    வெட்கமும்மிகவேயாகி விழிநுதல்வேழுபேரும்
சிக்கெனவாகனத்தில் சென்றவரேழுபேரும்
    அம்மையருள்பெறத் தவசி நின்றார்
நின்றார் நெடுகான வனமானதிலே
    நித்தம் கற்றோனை சித்தம்வைத்தே
வண்டாடும் பூஞ்சுனையில் மாதேழு
    பேருங்குழித்து நித்தம்வருகையிலே
கோலம் வேறாகின தாலிவ்வனத்திலே
    சிவனேதஞ்சமென்று மெங்களை ஆளவருவாயே

நடை

வருவாய் வருவாய் நீ மகாபரயீ சுவரனே
வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட்கொள்வாயே

விளக்கவுரை :

அருள் நூல் 1861 - 1890 of 2738 அடிகள்

arul-nool

கண்ட அகமகிழ்ந்து நல்லகாரிகை கன்னியர்ஏழுபேரும்
பண்டுமறைந்தநிதி நல்லபண்பாகக் கண்டபாவினைபோல்
வந்துகுளிர் காயந்தது நல்லமங்கைஎயெழுபேரும் போவோமென்று
பந்துதனம் உடையாரந்த பாவையேழுபேரும் சம்மதித்து
வந்துமிகக்கனலை வட்டமிட்டே வளைந்துகொண்டு
சந்துஷ்டியாய் மகிழந்து தணலை ஆவிமிகத் தானிருக்க
கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு
பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவையேழுபேரும் கர்ப்பமுற்று
அண்டாமல்தான்நீங்கி இவரோவெனவே எரிக்கஉன்னினரே
கொண்டாடித்தாக்கிடவே அந்த, கோதையின் கற்பிழந்து
எரிக்கமதியழிந்து அந்த, ஏலங்குழலாரியல்மறந்து
மதிக்கொத்தமாமயிலார் மாமுனியைக்கண்டு மதிஅசந்து
அய்யோநம்பெண்ணரசே நம்மறிவுகுலைந்தோம் ஆயிழையே
இத்தனைநாள்வரைக்கும் நாமிருந்த நெறியும்குலைந்தோமடி
சத்திக்குமீசுரக்கும் நாம்சாற்றும்மொழியேது தங்கையரே
வனத்திலேவந்தயிடத்திலிருந்த மாயம் வருவதறிந்திலமே
புனத்தில்கிளியன்னமும் நம்பேச்சும்கேட்காமல் போகுதடி
என்னவிதிவசமோ நமக்கிட்ட விதிமுறையிப்படியோர்
அன்னமடவாரேயிது யார்செய்த கைமசக்கானதுவோ
என்றே மிகப்புலம்ப முனியேற்றின கர்ப்பமுருத்திரண்டு
அன்றே ஒருமணிக்கர்ப்பம் அவதரித்தங்கேதான்பிறந்து
பிறந்தபொழுது பெருமூச்சுவிட்டார் ஆயிழைமாரெல்லாம்
மறக்கமதிமயங்கியந்த மக்களைப்பாராமல்மாமடவார்
நாணிமிகவயர்த்து காடு நாட்டூடேபோவென்று
கோணிமடவார் கோகோகோவென வோடலுற்றார்
ஓடினார்பெண்களெல்லாம் ஒருநொடியதில்நில்லாமல்
தேடினார்வானத்தினூடே சிவசிவா சிவனேயென்று
கோடியேமடவாரெல்லாம்; கொண்டதோர் நாணத்தாலே
வாடியேபுலம்பிமாதர்வனத்தை நோக்கிப் போகின்றாரே
அய்யா வனத்தில் சுனையாட அங்கேயிருந்து வரும்போது

விளக்கவுரை :


அருள் நூல் 1831 - 1860 of 2738 அடிகள்

arul-nool

ஈசன்யெலென்று மரத்திலந்ததேவிமார் ஏறவேணுமென்றே
மிகத்துணிந்து நல்லஏழினுள்கன்னி இளையவளும்
கூறிதுயிலெடுக்கும்வேளை கோலதிருமால் ஒரு கோலம் கொண்டார்
கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து
இன்றே கைவாச்சுதன்று யெரிக்கதுணிந்ததாரே நாரணரை
தீப்போல்மிகமிகவாவி அந்த சொந்த சுனைக்கரையானதிலே
வெயில்போல் கொழுந்துவிட்முமுனி நல்லகனலாகிகிடந்தார்
கண்டந்தகன்னியரும் கனலாய்எரிந்துவிடோமென்று சொல்லி
கொண்டாடிக்கன்னியர்கள் பின்னும் குக்களித்துச் சுனையாடவென்று
துகிலைக்கரையில் வைத்தஅந்த தோகைச்சுனையில் குளித்திடவே
வெயிலான மாயவருமொரு உபாயம்நினைத்தார் உலகளந்தார்
இனியிந்தகன்னிகட்குமெத்தவெவிறையலை தான்கொடுத்து
தணியாத அக்கினியைவந்துதழுவிட கற்பையழிக்கவென்று
நினைத்தே வருணனையும் நெடுவாயுவை அங்கேவரைவழைத்து
நினைந்தே விறையல்கொண்டு நண்ணுதல்மாரேழுபேரையிப்போ
மசக்கி கொடுவாவென்றொரு மாயமதுக்கு விடைகொடுத்தார்
திசக்கியமாயமது அந்ததேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே
அப்போதங்கே அருணன் ஆகாசமீதிலே நின்றுகொண்டு
பொற்பொறி நரல்போல் வந்த பெண்களின்மேலே தூவினனே
தப்பாமால்வாயுவும் வளர்சரீரம் விறைக்கவே வீசனனே
மெய்யானகன்னியர்கன் மெத்தவிறையலாலுளும் நடுங்கி
ஒடுங்கி மிகக்கொடுகி யந்த உள்ளம் தடுமாறும் பெண்களெல்லாம்
இந்த விறையலுக்கு நாம்ஏது செய்யப்போகிறோம் பெண்ணரசே
சிந்தையருதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி
ஆராருசெய்தததுவோ பெண்ணே ஆட்டம் பொறுக்கமுடியுதில்லை
கூரல்மிகக்காய ஒரு கொந்தணல் தன்னிலும் காணோமே
காணாமே பெண்ணரசேநம் கர்மவிதியது தங்கையரே
வாணாளயருதடி யென்று மாதுகன்னிமார் ஏழுபேரும்
பார்க்கின்றவப்பொழுது அந்தபாரான ஆவிக்கரையருகில்
தாக்கின்ற அக்கனியும் தணல்போலே குமறி யெரிந்திடவே

விளக்கவுரை :

அருள் நூல் 1801 - 1830 of 2738 அடிகள்

arul-nool

விருத்தம்

சீரணி மாயன்றானும் தெட்சணம் மீதில்வந்து
காரணமான கன்னிமார்கள் ஏழுபேரை
நாரணம் முகூர்த்தம் செய்ய நாடோருகுடைக்குள் ஆண்ட
காரணம் தன்னைக் கூறகமலப் பூமகளேகாப்போம்

நடை

சீரானகன்னியர்கள் சிவலோகம் சிவனார்க்குபூசைசெய்து
நேராய்மிகவிருக்க அந்த நேரிளைகன்னிமார் ஏழுபேர்களும்
நாராணயர்தொடர்ந்து அந்தநல்லவனத்தில் சுனையருகில்
ஆரார்மிகவறியார் அருவனம் பூஞ்சுனையானதிலே
போகாவவ்விடம்தனிலே அந்தப் பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை
வாயால்தொகுத்து உரைக்கயிந்த வையகமதில் யாதுளதோ
தேவர்மிகப்போகார் தெய்வேந்திரன் வானவர்போகவறிவார்
மூவரும்போகறியாரி முனிசித்தாதிமார்களும் போகறியார்
ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக்கரையானதிலே
ஆலிலைமேல்துயிலும் நல்லவச்சுதன்பச்சைமாலங்கே சென்று
ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலதின்மேல்
ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னிஏழுபேரும்
குளித்தோடி அக்கரையில்வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே
காணார்துகில்தனையும் கருமேகத்தைநோக்கிய ஆலமரத்தை
அண்ணாந்தவர்பார்த்து ஆடையைபார்க்கவே நோக்குவேளை
கண்டாரே ஆலமரத்தல் அவர்க்கானது கிலடையாளமென்று
கொண்டாடி கன்னியர்கள் கோ!கோ!கோ! என்ன கொடுமையென்பர்
எடுத்தாரைக்கண்டிலமே இதுஎன்மாயமோ பெண்ணரசே
கடுத்தானகற்பினையோயிது கம்மாயோ பெண்கன்னியரே
பூமிதனிலிருந்தும்நம்பொற்றுலகில் ஆலில்பறந்தென்ன
சுவாமிசிவனர்க்கு பொல்லாத தோசத்தை செய்தோமோ
கர்மவிதிப்பயனோ வேதன்கட்டளையிட்டபடிதானோ
நம்துகில்பற்து நடு ஆலமரத்திலே போயிருக்க
என்னவிதிப்பயனோ எடுத்தோரை கண்டிலோமி; பெண்ணரசே
உன்னியெடுப்பதற்கு ஒருஆளையிங்குகண்டிலோம்
என்றேமிகப்புலம்பி கன்னியேழுபேரும் மிகத்திரண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 1771 - 1800 of 2738 அடிகள்

arul-nool

வகுப்பதற்கு இன்னதென்றறியேன் நானும்
வகைவிபரம் நீரருளி வரமேதந்து
தொகுப்பதற்குச் சிலம்பிமுவே துணையாமென்று
இடமதிற்கில்  லாமலீடேறத் தீர்த்து
எப்போதும் எனையாளும் எம்பிரானே
யுகபதியில் மேவியுதித்தெழுந்த நாதா
உன்உவமை சொல்லுதற்கு உதவிகாப்போம்.

நடை

காப்போம் சிவபர ஆதிநாராயண கண்மணியானவரை
கன்னிமார்பாடலுக்கு முன்னைவினைத்திடகல்விக்குதவுவாயே
சேர்ப்பாயுந்தன் அருள்சிந்தையில்வைத்திருந்த தெய்வமடவார்
திருக்கறைத்கூறச் செயல்குருநீயல்லாமல் சீமையிலாருளாரோ
முக்கிபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னாக்கு காலமெல்லாம்
முண்டவனத்தில் கூண்டுதவம்செய்து முற்றும்நிறை வேற்றி
பக்தியுடன் நற்சொல்ல வைத்துப்படிமுறை தப்பாமல்
பாரானதெட்சணமீதானதில் வந்துபண்பாக கண்டுமையும்
வாதாடியவர்பெற்ற மக்களைக்கேட்டுன்னைவருடியே நாள்தோறும்
சீரானமக்களை யீந்துபின்னேழ்வரைச் சேர்த்துமணமருளி
தேவியும்மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டுதவும்
பண்பான இந்த கதைபடிப்பேனென்ற பாவவினை யானதெல்லாம்
பறக்கும்கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்து போலோக்கும்
குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்டதொக்கும் மன்றோ
கூறும் செந்தமிழ்பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமதி லொன்றும்வராமல் காத்திடக்கர்த்தனருள்வேணும்
கூடும்பரவெளி ஆனந்திமார்தேவி கூடியருள் புரிவாய்
சித்தமிரங்கியே தேவிமனோன்மணி சிந்தையிலேருந்தும்
சொல்லும் கதைகனக்கல்லல் வராமலே தோகையருள் புரிவாய்
ஆண்டவளாம்அரி நாராயணருடன் உலகில்மிகவாழும்
ஆதிபராசக்திதேவி ஏழுபேரும் அன்பாயிதற்குதவும்
கூண்டபுகழ்பெற்ற சான்றோரையீன்றகோதை ஏழுபேரின்
கோலத்திருலியாணத்திருக்கதைகூற என்குரு நாதனிது காப்பதாமே.

விளக்கவுரை :

அருள் நூல் 1741 - 1770 of 2738 அடிகள்

arul-nool

குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்
கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டுபோச்சே
பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன்
பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்
மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு
வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு
ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே
ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ
கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்
பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க்போகுதடா
கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா
இன்னும்செப்படிவித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே
வையகத்தில் ஒருசாரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்
நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்
மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்
மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்
ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மைபகையானால்
விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக்காறனடா
நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்
நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா

சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று

சத்த கன்னிமார் பாடல்

விருத்தம்


முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே
மூவரிய தெய்வகன்னி யேழுபேரும்
தன்னரிய நாரணரை தேடித்தேடி
தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்த
தென்னிலங்கை மணவைநகர் பதியிதான்
சீமைபதி தெட்சணத்தில் சென்றுகண்டு
மன்னவனும் தேவியுமாய் மகிழந்தஞாயம்
வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார்

விளக்கவுரை :

அருள் நூல் 1711 - 1740 of 2738 அடிகள்

arul-nool

ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ
அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்
துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்
உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா
வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்
ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா
எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா
பிரமன்பகைத்துண்டால் நீங்கள்பேசாமல்போய்வீடுவீர்
விஷ்ணுபகைத்ததுண்டால்வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களைக்
கைபிடியாய் கொண்டுபோவான்
இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா
அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்
நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்
சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ
உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன்
வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே
ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே
சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்
முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்

விளக்கவுரை :

அருள் நூல் 1681 - 1710 of 2738 அடிகள்

arul-nool

மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு
ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்
நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா
பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா
நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே
என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே
அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்
பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்
வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே
ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்
அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா
மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு
இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்
அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்
நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்
நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே
முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு
புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே
ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ
இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது
வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே
பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்
நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை
நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை
கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ
கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்
பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்
இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்

விளக்கவுரை :

Powered by Blogger.