அருள் நூல் 1471 - 1500 of 2738 அடிகள்

arul-nool

ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி
ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
செம்பவளத்தேரறி
நான்தேசமெல்லாம்  பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா
பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு
தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே
அறிவுசொல்லி தெளிவுதர
நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்
கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1441 - 1470 of 2738 அடிகள்

arul-nool

குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்
சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு
அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா
அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
ஏகன்போக னப்பாநான்
இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான்
உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
இருமனதா லெண்ணாதே பின்
எனக்குஉத்தரம் சொல்வாயn
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே
நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே
அந்த விசமதுதான் அனுகாதப்பா
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு

விளக்கவுரை :

அருள் நூல் 1411 - 1440 of 2738 அடிகள்

arul-nool

மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்
கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை
ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை
வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே
அண்டமெலாம் பிண்டமதாய்
ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்
கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா
நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை
அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே
மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே
எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்
ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா
பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே
என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை
தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே
கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது
பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து
அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 1381 - 1410 of 2738 அடிகள்

arul-nool

ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்
கண்டறிந்து பாருங்கப்பா
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா
இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்
இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா
ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்
குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா
ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்
இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு
மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்
நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்
அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா
அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது
அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா
இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்
திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்
எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா
மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ
ஊமையானேன் செவிடானேன்
பித்தனானேன் பேயனானேன்
என்பெருமையெங்கும் அறிவாரில்லை

விளக்கவுரை :


அருள் நூல் 1351 - 1380 of 2738 அடிகள்

arul-nool

இதைக் கேட்கிறபோது வாயில் வெற்றிலை இல்லாமல்
இது சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு
ஈசன்மலர்பாதம்கிட்டிக்கொள்ளும்
மேலும் ஆயிரத்தெட்டாமண்டு மாசியில்
ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து
பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும்
உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு
மேல்மாசி ஆறுஏழு அஞ்சில்
மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து
தர்மயுகம் உதிக்கும்

அதற்குமுன்னுள்ள காரணம் - அழிவுகள் விவரம்


பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு
பேய்மாறட்டத்தால் அழிவு
பெருஞ்சுரத்தால் அழிவு
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு
பெண்ணாலே ஆணழிவு
ஆணாலே பெண்அழிவு
பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும்
இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க
நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்
அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய்
வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய்
ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி
திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில் வேசமுமாய்
ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி
ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய்
உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன்
பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த

விளக்கவுரை :


அருள் நூல் 1321 - 1350 of 2738 அடிகள்

arul-nool

உங்கள் தேவிமார் ஐந்துபேரானாலும்
அவரவர் ஆம்படையானைத் தள்ளியின்னொரு முகம்பார்த்து
பேசவில்லை என்றும்
கொடிமரத்தில் ஐந்துநேரம் சத்தியம் செய்து
நாமம்கொண்டு இடச்சொல்ல
ஆமென்று ஏற்கமாட்டாமல் இருந்ததினாலே
எறும்புமுதல் எண்ணாயிரப்பட்ட
மிருகப்பிறவி செய்திருக்கிறதிலே
வாய்பேசாத மிருகத்தைத்தள்ளி
எந்தெந்தச் சாதிவாய்ப்பேசுமோ
அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும்
இந்தப்படி தானம்பண்ணிச் சத்தியம்செய்து
நாமம்கொண்டிட நொம்பலம் இதமாகப்போக
சீசர்லோகம் தகர்லோகம் இந்த ஒழுங்கைத்
தெரியச்சொல்லவும் இன்னும் கணக்கை நிரம்பியிருக்குது
அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

இரண்டாவது சட்டம்

என்பள்ளி பள்ளிகள் தோறும் இருக்கிறபள்ளி
கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம்

மூன்றாவது சட்டம்


என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு
அருளிச்செய்த விபரப்பத்திரம்
இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து
எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள்
நான், தீர்ப்புக்கேட்கும் வேளையிலே
உத்தரம்சொல்லத் திறமையாயிருங்கள்
நாலாம்தீர்ப்புச் சொல்லிவருகிறார் நம்மளையா
ஆகையால் தருமத்தைச்செய்து தவத்தைப்பெருக்கி
உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே
இந்த சிவகாண்டப்பத்திரப் பிரகாரம்
எல்லோரும் போற்றுங்கள்

விளக்கவுரை :


அருள் நூல் 1291 - 1320 of 2738 அடிகள்

arul-nool

அரிகோபலனை அய்யா காதை முறுக்கி
உனக்கு இடடகணக்கைத் தந்தேன்
தந்த கணக்கை எல்லோருக்கும்
தெரியச் சொன்னாயா?
தெரியச்சொன்னதைச் சொல் என்று கேட்க
அரிகோபலன் சொல்லத் தெரியமால் நின்று
தியங்கண்டு மகிழ்ந்து மயிலாடி சீசர்
கிடுகிடென்று மனப்பயங்கரமாய் நிற்க
நீ சொல்சீசன்  எழுத்தெழுந்து அய்யா சொல்ல
அரிகோபலன் சொல்லத்தெரியாமலும்
சீசர்சொல்லத் தெரியமாலும் இருந்ததினாலே
அய்யாதிருவாய் மலர்ந்து அருளினது என்னவென்றால்
கன்னிமார் ஏழுபேர் உண்டுமே
ஏழுபேர்க்கும் ஏழுமதலைகள் உண்டுமே
ஏழுபேரில் வைகையில் இரண்டுபேர் இறந்துபோனதுண்டுமே
அதிலே ஐந்துபேர்க்கு ஐந்துதேவிமார் உண்டுமே
ஐந்துபேர் ஆண்பிள்ளையாளால் அவரவர் தேவிமார்க்கு
அம்மையிடத்தில் உத்தரவு தோணிற்று
பெண்பிள்ளை ஐந்துபேரானாலும்
தர்மக்கிணற்றில் தானம்பிண்ணித் தர்மக்கிணற்றை ஐந்துதரம்
சுற்றிச்சேவித்து நம்முடைய திருப்பதியை
ஐந்துதரம் சுற்றிச் சேவித்து
கொடிமரத்தை ஐந்துதரம் சுற்றி சேவித்து
நான் அம்பலத்தில் சுவாமி அரசடிமூட்டில்
வந்திருந்து சத்தியம் கொண்டோம்
அன்றுமுதலாய் அந்த ஒழுங்கின்படி
நடந்து வருகின்றார்களா?
அவரவர் தேவிமார் முகம்பார்த்து பேசினதே அல்லாது
வேறெதேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்றும்
ஆண்பிள்ளைகள் நீங்கள் ஐந்துபேரானாலும்

விளக்கவுரை :



அருள் நூல் 1261 - 1290 of 2738 அடிகள்

arul-nool

பத்திரத்தைப் பள்ளியில் வைத்துப்பகர்ந்துகொடு நீமகனே,
இப்படி, உத்தரவுதந்தேன் உகந்து வா மகனே!
சத்தியமாயிருக்கவேணும் சண்டைபோடாதே மகனே!
அவரவர் கூடுதமட்டும்உள்ளதர்மம் தந்ததை வாங்குங்கடா மகனே!
இந்தப் பத்திரத்தைப் பள்ளியிலே தானும்வைத்துப் பணிவிடைகள்
செய்திடுங்கோ!
புத்திர பலன்களுண்டாம் பூமிவிளைந்துவரும்.
சத்தியமாயிருக்கவேணும் தர்மபதிகிடைக்கும் என்மகனே.
தர்மசங்கத்தார் தர்மம் வளரும்.
தர்மராசர் தர்மபுவி ஆளுவார்.
அம்மையார் பத்திரம்
பையன்மார் பத்திரம்
சீசன்மார் பத்திரம்
திருநெல்வேலிமார் பத்திரம்
பால்விறகுப் பத்திரம்
அய்யாபதி உட்படப் பத்திரம்
முட்டப்பதி பத்திரம்
பள்ளத்துப்பதிப் பத்திரம்
தாமரைக்குளம்பதிப் பத்திரம்
பூப்பதிப் பத்திரம்
செட்டிக்குடியிருப்புப் பத்திரம்
அகத்தீசுவரம் பத்திரம்
பாலவூர் பத்திரம்
சுண்டவிளைப் பத்திரம்
வடலிவிளைப் பத்திரம்
உன்பரக்கொடிப் பத்திரம்
பற்பலஊர் ஜனங்களுக்கும் கூடியபத்திரம்.

அய்யா சீசருக்குச் சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யாபதியில் வடக்கே முகமாயிருக்க
சீசர்தெற்கே முகமாகநிற்க
அரிகோபலனும் கைகட்டி மனப்பயங்கரமாய் நிற்க

விளக்கவுரை :


அருள் நூல் 1231 - 1260 of 2738 அடிகள்

arul-nool

நாம்சொன்னோம் மாமுனியும்
என், பள்ளியிலே வைத்திருந்தேன் பாதையில் போகவிட்டேன்.
கொடியேறும் நாள்தொடங்கி ஏழுநாள்
பிச்சை வாங்குங்கோ மகனே!
சுரையோடு கையிலெடுத்து எல்லோரும்
கூடிச்சேர்ந்து போய்விடுங்கோ.
சராசரத்தைப்போற்றித் தானதர்மம் செய்திடுங்கோ.
நல்லவர் இட்டதர்மம் நாள்தோறும் பொங்குமடா.
தர்மம், தந்தவனும் நல்லவன்தான்,
தராதவனும் நல்லவன்தான்.
நல்லவனும் பொல்லா தவனும்,
யெல்லாரும் நல்லவனென்று சொல்லிவிடு.
எட்டாம்நாள் வேட்டையாடி வருவேனடா நான்சுவாமி,
அகப்பட்டதைக் காப்பிட்ட மகன்கைக் கொடுத்து
உனக்கெனக்கும் பகையில்லையடா யுகபழிந்துபோனாலும்.
உன்னைப்போல் சுந்தரன் ஊரிலும்நான் காணேன்.
வட்டவட்ட சாலையிலே வாறவழிப் போக்கினிலே,
நீயுமுன்கூடச் சேர்ந்த ஜனங்களும் இட்டதர்மம் பெருகுமடா.
நாட்டைத்தான் ஒடுக்குதற்குக் கொடுத்தவரம் பறிக்கவாறேன்
நான்மகனே!
மந்திரவாள் தான்வாங்கி இந்திரனும் பதியேறி,
சந்திரனும் சூரியனும் சண்டைப்போட்டுத் தேசம்வாறார்.
இந்திரனார் சுந்தரர்க்குத் தாம்கொடுத்தோம் மாமுனியும்
இந்த, புதுச்சட்டம்வந்திருப்பதினால் நல்ல புத்தியாயிருந்து விடுங்கோ
நல்லபுத்தியிருக்காவிட்டால் பிழைகள்வரும் உங்களுக்கு
பற்பல ஊர்களிலேயிருக்கும் நிழல்தாங்கல்களில் என்மகனே
பள்ளியிலேதானும் வைத்துபணிவிடைகள் செய்திடுங்கோ.
சீசன்மார் கைக்கொடுத்து தெளிந்துபார் என்மகனே!
பள்ளிக்கூடங்கள்தோறும் பதிவாக நீங்கள்போய்   
இதை சொல்லுங்கடா என்மகனே மாமுனியும் சொன்னேன் நான்.

விளக்கவுரை :

அருள் நூல் 1201 - 1230 of 2738 அடிகள்

arul-nool

ஆண்மூட்பும் பெண்மூப்பும் அதிகப்பட்டு போச்சுதடா
இன, என்மூப்புதானுமுண்டு எவர்மூப்பும் செல்லாதே
பார்வதியும் அவறொருத்திப் பங்குண்டு என்று சொன்னாள்
அதுசீதனம் கொடுத்துப்போச்சு சிரிக்க வேண்டாம் என்மகனே
பள்ளியிலே தானிருக்கும் பள்ளியறைக் காவல்கார என்மகனே
உள்ளபடி நானுமிப்போ உபதேசம் சொல்கின்றேன்
பள்ளியிலே யிருந்து
பலபேர்க்கும் புத்திசொல்ல நாம்வருவோம்
பள்ளிக்கூடம் சோதிக்க
உத்தரவு நாம்கொடுத்தோம்மகனே
தர்மசீ சரை முன்னேவிட்டு சுவாமியும் நாம்வருவோம்
என்னுத்தர வோடேயுன் உத்தரவும் சொல்மகனே
நீயும்தான்
திருப்பிரம்பை பைக்கொடுத்து நீயனுப்பு என்மகனே
நீயனுப்பாவிட்டால் நான்
கூட்டிக்கொண்டு போய்விடுவேன் மகனே
என்னை, குற்றமென்றும் சொல்லாதே என்மகனே
இப்படி, கணக்கினைக் கற்பித்தகணக்கென்று
சொல்லிவா என்மகனே
ஆணும்பெண்ணுங் கூடி ஆசாரம் செய்தடுங்கோ
தானதர்மம் செய்துகொண்டு தழைப்பீர்கள் நீங்கமக்காள்.
மகனே, வட்டவட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
பட்டங்கள் தந்தேனடா பதறாதே என்மகனே
உன், உச்சக்கிரகமடா ஒருவருக்கும் தெரியாது.
உன், பச்சமுண்டால் போதுமடா
பகையெனக்கு இல்லையடா.
யாருக்கும் பதறாதே அச்சமில்லை என்மகனே
ஏடுதந்தேன், உன்கையிலே எழுத்தானியும் கூட தந்தேன்.
மகனே, பட்டயமும் தந்தேன் பகைதீர்த்தேன் பதறாதே
இனி, நமக்கொடு ஒழுங்குவேணும்.

விளக்கவுரை :


Powered by Blogger.