அருள் நூல் 1021 - 1050 of 2738 அடிகள்


arul-nool

முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம், ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகபதி யென்மகனே!
வட்ட வட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
நாம், இட்டபடி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே!
நாம் எழுந்தருளும் வேளையிலே அங்கங்கே உள்ளசனம்
எல்லோருந்தான்வருவார் என்மக்களே நீங்களுந்தான்.
அத்திபுரந்தனிலே ஐபேருந் தானிருந்தார்.
புத்தியுள்ள குருநாட்டில் பிறந்து வந்தேன் யென்மகனே!
பட்சிமிருகங்களும் பலஜீவ சந்துக்களும்,
பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடை செய் யும்மகனே!
தர்மம் பெரிதப்பா தான்சொன்னேன் என்மகனே!
தண்ணீர் பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றி சேவித்துவந்த,
மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே!
உகந்தகுடியென்று உன்னிடத்தில் சொன்னேன்நான்.
பயந்துதர்ம மிட்டந்த பரம்பொருளை தேடிடுங்கோ!
கொடுத்தது கூடாது கூடும்படி நீகொடுத்து,
அதிலிருந்து தசையாறி குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான்,
தழைப்பீர்கள் நீங்கமக்கள் தான்சொன்னேன் என்மகனே!
முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே!
பின்முகப்பிலாக்வி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன்.
பக்திமறவாமல் பதறாமல் நீயிருந்தால்,
புத்தி சொல்ல நான் வருவேன் புலம்புவேன் என்மகனே!
கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே.
சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து
போதமில்லையென்று பேசிடுநீ என்மகனே!
ஆடரவில்பள்ளிகொள்ளும் மாலவனும் தேவியுமாய்,
பேதகமில்லையென்று பொறுமை சொன்னா ரென்மகனே!
சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக் கூட்டத்திலே,
என்பங்கைத்தாவென்று பகர்ந்துவா நீமகனே!

விளக்கவுரை :



அருள் நூல் 991 - 1020 of 2738 அடிகள்

arul-nool

ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.

சாட்டு நீட்டோலை முற்றிற்று

பத்திரம்

அய்யா சீசருக்குச் சொன்னது


தர்மசீசர் தன்கையிலேதான் கொடுத்து வாமகனே!
நாம், காப்பிட்டகையைகச் கடுகச்சொல்லும் பேர்களுக்கு
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன்மகனே!
நாமாடி வந்த ஆட்டமெல்லாம்
அறைக்குள் பூந் தொளித்துயினி
ஆட்டமில்லாக்கூட்டம் இனக்கூட்டம் தேரோட்டம்.
அந்தந்த தலங்களிலே ஆடுமந்த பேர்களையும்
ஆடாமலேயிருந்து அறிவுசொல்லி வாமகனே!
இது, பரலோக வார்த்தையெல்லாம் பூலோக வார்த்தையில்லை,
இதை,
மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும்.
அம்மையுமை பார்வதியும் அறிவுசொன்னாள் என்மகனே
பள்ளியறை தனிலேவந்து பகர்த்தெழுதிதான்கொடுத்து
இது உள்ளபடி யென்றுசொல்லி உகந்துவா என்மகனே
நாம், கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்துக்குள்ளிருந்து
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன் மகனே!
கடைசியில் ஒருபதிதான் கடலுக்குள்ளிருக்குதப்பா.
அது துவர யம்பதிதான் துலங்கும்பததியதுதான்.
சட்டங்களும் கூட்டங்களும் தானமா னங்களும்,
அதை,
பெற்றவருக்குக் கிட்டிக்கொள்ளும் பேதகமில்லை மகனே!
பக்தியுள்ள மக்களுக்கும் புத்தியுள்ள மக்களுக்கும்
பயங்கள் தெளித்துவைப்பேன் பதறாதே என்மகனே!

விளக்கவுரை :

அருள் நூல் 961 - 990 of 2738 அடிகள்

arul-nool

கவ்வயிழுத்தானையோ சிவனே அய்யா
காரம்பசுவதனைக் கங்கைகரையில் கொல்லக்
கண்ட கலியாச்சே சிவனே அய்யா
துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து
ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
பதினெண்சாதியும் ஏழைச்சான்றோரை
வசைபறந்து போகலாச்சே சிவனே அய்யா
சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில்
தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா
எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய
என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா
மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே
வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா
நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே
நாமும் சடையலாச்சே சிவனே அய்யா
பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும்
பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா
கலியுகம் முடிந்துபோச்சு சக்கராயுதத்துக்கு
இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்

விளக்கவுரை :

அருள் நூல் 931 - 960 of 2738 அடிகள்

arul-nool

வடிவும்தான் வெளியாச்சே சிவனே அய்யா
சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண்
தானாகும் நாளாச்சே சிவனே அய்யா
சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று
சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா
எவரெவர் இருந்துமணியம் பண்ணவேணு மானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா
எப்போது கூவுமென்றுஇருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா
நொடிக்குள் முடிந்துவிடும் விஞ்சைகள் இங்கிருந்த
நோகுதே திருமேனி சிவனேஅய்யா
வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால்
வையகமழிந்திடுமே சிவனே அய்யா
கைதட்டும் பொழுதோ கண்தட்டுநேரமா
கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா
காடுநாடாகு மென்று நாராயணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா
நாராயணர் எங்கும் தாராளமானாரென்று
நகரெங்கும் பேராச்சே சிவனே அய்யா
கலியோ விளைந்துபோச்சு சிவனே அய்யா
கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று
வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா
மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண
முனிமார்கள் பெற்றமக்கள் சிவனே அய்யா
கடம்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண
காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா
அண்ணர் க்களந்தபாலை இடித்தகரைகாவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன்

விளக்கவுரை :

அருள் நூல் 901 - 930 of 2738 அடிகள்

arul-nool

கழந்தோடிப் போக்கண்டேன் சிவனே அய்யா
ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து
உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா
இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை
தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன்
கொம்பு முளைக்கண்டேன் சிவனே அய்யா
சடைநாய், முழுத்தேங்காயை, கவ்விக் கொண்டுபோய்
தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா
நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக
நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா
வீட்டெலி, கூடியே பூனைதனைபிடித்து
விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா
இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள்
இந்த கலியழிக்க சிவனே அய்யா
ஆனாலும் இன்னுங்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லார்க்கும்
அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா
வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்ததாலே
மேலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா
தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே
தோலெழும் கூசுதையோ சிவனே அய்யா
கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போல
காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா
முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா
உள்ளவனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று
ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா
வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே

விளக்கவுரை :

அருள் நூல் 871 - 900 of 2738 அடிகள்

arul-nool

வழக்கண்டேன் சிவனே அய்யா
சட்டிக்காய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர்
பொருதக்கண்டேனையா சிவனே அய்யா
நாடுதனிலே திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து
கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
சாவல்கோழியல்லாவ கூவுமென்றுசொல்வார்கள்பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா
உண்டமயக்கத்திலே உறங்கப்போன உயிர்வோடிப்
போகக்கண்டேன் சிவனே அய்யா
மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல
மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா
பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில்
ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா
கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய
கடல் வந்தழிக்ககண்டேன் சிவனே அய்யா
பாகல்போடவே கரையாய் முளைத்துவர
பாகமும் கண்டேன் சிவனே அய்யா
பெருத்தஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு
பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா
முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு
முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
கிடைகலைந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம்
கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா
மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு
வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய்
குறுக்கவே தங்கக்கண்டேன் சிவனே அய்யா
கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி
கடல்போல தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை

விளக்கவுரை :

அருள் நூல் 841 - 870 of 2738 அடிகள்

arul-nool

பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
பச்சைப்பாம்பை கண்டவுடன் மயில்களெல்லாம்பதுங்கி
கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா
ஆலாகருடனையும் சிட்டிவோடிப் பறந்து அடித்து
எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டுஅது
போர் செய்யக்கண்டேன் சிவனே அய்யா
பச்சப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா
நெளியக்கண்டேன் சிவனே அய்யா
கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக
கண்ணுகுத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும்
பதியுங்கண்டேன் சிவனே அய்யா
கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ளகுடிகளும்
வாழக்கண்டேன் சிவனே அய்யா
திரைகடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும்
கண்டேனையா சிவனே அய்யா
ஈரத்தின் மேல்கிடந்த ஆடையை அட்டைகண்டு
எடுத்துவிழங்கக்கண்டேன் சிவனே அய்யா
போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனையிடத்தில்புழு
வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா
பூமாலையைக்கட்டி தோள்மாலையாக போட்டபூவும்தான்
வாடக்கண்டேன் சிவனே அய்யா
முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே
மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா
புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும்
கண்டேனையா சிவனே அய்யா
முள்ளுமுனையதிலே  குளம்வெட்டி வயலும் பாய்ச்சி
முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா
உப்புவிளைந்துவரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு

விளக்கவுரை :

அருள் நூல் 811 - 840 of 2738 அடிகள்

arul-nool

சீமைஅழிந்து போமே சிவனே அய்யா
சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம்
ஏதோசொல்லையா சிவனே அய்யா
ஆசுமதூரம் சித்திரம்ட விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம்ட சொல்லறுற்றேன் சிவனே அய்யா
பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி
போகவும் கண்டேனையா சிவனே அய்யா
பாம்பைக் கடிக்கவந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி
கொத்தக்கண்டேன் சிவனே அய்யா
பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால்

விளக்கவுரை :

அருள் நூல் 781 - 810 of 2738 அடிகள்

arul-nool

சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த
கலியிலிருப்பானோ சிவனே அய்யா
கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து
கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா
பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில்
பாசாணம் போடலாச்சே சிவனே அய்யா
பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா
குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள்
செய்ததுண்டோ சிவனே அய்யா
தேவர்கள் எல்லாரும் கயிலாசத்திலிருந்த
தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா
இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்கா
இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா
ஆனாலும் இன்னும்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
நாட்டு முறையைப்போல காசியும் காணிக்கையும்
நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா
திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அருள் நூல் 751 - 780 of 2738 அடிகள்

arul-nool

மருந்து வளரலாச்சே சிவனே அய்யா
கிழமுனி தானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக்
கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா
மெத்தவும் நாளாச்சே  பொத்தியே கையைச்சேர்த்து
விரித்த சடையனானேன் சிவனே அய்யா
ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற
அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா
ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா
திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைக்
சம்பளம் கூட்டினேனே சிவனே அய்யா
விரித்த தலையுடனே யெரித்த கண்ணோடிருந்து
வேகுதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அரணும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க
ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா
தெற்கும் வடக்கமாகச் சந்திரனும் சூரியனும்
திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு
காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா
வீதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட
வெள்ளக் காகந்தா னெங்கே சிவனே அய்யா
அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன்
அறியவுமாட்டானைய்யா சிவனே அய்யா
சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு
தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா
சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை
சண்டாளர் அறிவாரா சிவனே அய்யா
உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில
ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா
தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச்

விளக்கவுரை :
Powered by Blogger.