அருள் நூல் 721 - 750 of 2738 அடிகள்

arul-nool

இத்தணைக்கும் சகித்த எனைமா முனியை இருத்தினான்
சிலநாளாய் சிவனே அய்யா
அரங்கதணில் அடைத்து வத்தல்போடத் தீவைத்து
அசையாமல் இருந்தiணாய சிவனே அய்யா
போதித்தேன் கூரையிலே, கேலிகள் பண்ணாதே
போவென் றடித்தானே சிவனே அய்யா
ஏழைமாமுனியும் யுகமாயிருந்து
இருத்தினான் சிறைதிலே சிவனே அய்யா
வெகுநாள் இங்கிருந்து சடையுதே திருமேனி
விரித்தலையுடனே சிவனே அய்யா
கவிழ்ந்தெந்த நேரமும் இருந்தந்த மாமுனிக்கு
கழுத்தம் கடுக்கதையா சிவனே அய்யா
பிரமணைத்தேடியே முழுமனதோடியிருந்து
பிடரியும் நோகுதையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்ததேனையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்தேனையா சிவனே அய்யா
சன்னியாசி வேசம்போல பின்சடையோடிருந்து
சடையுதே திருமேனி சிவனே அய்யா
குடமனி தானும் சிவனே அய்யா
குடமுனி, தானும் உடுக்கத்துணியில்லாமல்
கூட்டி முடியலாச்சே சிவனே அய்யா
வேள்ளைப்பேன் களுக்கெல்லாம் முள்ளுமுளைத்தென்
மீதில் கிடக்கலாச்சே சிவனே அய்யா
தலையில் சிவமுறைந்து வடதிசை முகமாகத்
தவத்தில் இருக்கலாச்சே சிவனே அய்யா
அம்புவியில் விளையும் பண்டம் பாராமலே
அறைக்குள் ளிருக்கலானேன் சிவனே அய்யா
வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில

விளக்கவுரை :

அருள் நூல் 691 - 720 of 2738 அடிகள்

arul-nool

பூமி அழிந்திடுமே சிவனே அய்யா
கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா
கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா
கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான்
கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா
பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா
கந்தனென்றியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும் தானோகலையோ சிவனே அய்யா
வெள்ளத்தடியைக் கொண்டு கள்ளனைத்போலத்தள்ளி
விட்டென்ன அடித்தானே சிவனே அய்யா
எனை அவன் வைததெல்லாம் வாக்குவாம் தானென்று
நினைத்துக்கொண்டனையா சிவனே அய்யா
பச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப்
பாலாயிருந்ததையோ சிவனே அய்யா
கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே
கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா
அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டேன்
றகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி
என்னையும் அடைத்தானே சிவனே அய்யா
வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை
நீற்றுக்கல் கொண்டுவந்த நீற்றிப்போட வேணுமென
நீசனும் செய்தானே சிவனே அய்யா
இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறாதென்று
எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
நெய்யுயூறிக்கட்டையெடுக்கித் தீயைவைத்துநீந்திக்கோ
என்றானோ சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று
குழிபோட்டு நின்றதையோ சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 661 - 690 of 2738 அடிகள்

arul-nool

நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதகா இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
மாபாவி யிறையறிந்து யாதோகோ ரியமென்று
பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்டபாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண
நற்பாலாயிருந்ததை சிவனே அய்யா
இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன்
எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா
கட்டிலையும் கொண்டுவந்த  தொட்டில் கட்டியென்னை
கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா
வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில்
கடல்வளைத்து கொண்டதையோ சிவனே அய்யா
கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம்
கல்லும் உருகிடும் சிவனே அய்யா
அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன்
இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு
எரியவும் கண்டேனையா சிவனே அய்யா
முட்டப்பதியும்நாடும் கிட்டக்கிளம்பும்வகை
முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா
ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக
எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா
பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அருள் நூல் 631 - 660 of 2738 அடிகள்

arul-nool

மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
அடுத்தாரைக்  காப்பதற்காய் பூவண்டன்  தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி
புண்ணா உளையதய்யா சிவனே அய்யா
மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு
மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா
அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே
அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா
வாடுதே யெந்தனுள்ளம்  மயங்குதே திருமேனி
வரவர வாடுதய்யா சிவனே அய்யா
குலைத்த தலையுடனே சலித்த முனிக்க
குறுக்கும் கடுக்குதய்யா சிவனே அய்யா
பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்த
புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி
அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா
எங்கெங்கும் விசையாச்சே தவமுனி யான்யிருக்கும்
கோலம் கண்டாயோ சிவனே அய்யா
கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று
குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும்  பசிக்குதையா சிவனே அய்யா
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 601 - 630 of 2738 அடிகள்

arul-nool

மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க
விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா
உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும்
உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா
எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு
இங்கே நான்வரும்போது சிவனே அய்யா
தாய்கிழவிக்குக் கொஞ்சம்  அதிசயங்களைக் காட்டி
சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா

விளக்கவுரை :


அருள் நூல் 571 - 600 of 2738 அடிகள்

arul-nool

ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும்
ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா
தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து
தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா
முப்பத்து முக்கோடி தேவரிஷியுடனே
முனியும்வந்த தெடுத்தாரே சிவனே அய்யா
மாமுனி தாயுடனே வழியே நளடந்துவர
மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா
திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல
திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா
அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து
அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா
கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா
கடலும் முழங்கிட துறவர் வணங்கியென்னைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா
இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த
வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா
இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி
என்னையும் விடும்போது சிவனே அய்யா
கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை
காகமும் கண் டேனையா சிவனே அய்யா
கைகலங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக்
காட்டியும் தந்தாயே சிவனே அய்யா
வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல
வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா
நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி
ரகசியம் பற்றிவிட்டாய் சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 541 - 570 of 2738 அடிகள்

arul-nool

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
கண்ணுச்சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
வில்லு கொண்டே எய்துவிட்டேன் நம்முடைய
விசயன் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
பார்த்துவிட்டேன் இரண்டுகண்ணுங்கொண்டு நம்முடைய
பத்தினி மக்கள் நன்றாய் தழைத்துவாழ
மலைக்கன்னிமார் தங்காவில் பெற்ற நம்முடைய
மக்கள் வலியசீமை கட்டி அரசாளவாழ
தர்மருட குலத்தி லுள்ள நம்முடைய
தெய்வச்சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
ஆல்போல தழைத்து வாழ நம்முடைய
ஐவர் மக்கள் சீமைகட்டி அரசாள வாழ
பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையான
மக்கள் நன்றாய் தழைத்துவாழ,

தானநிறைவு வாசகம்


கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன்
தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன்
சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
பிரமனை அடுத்ததுக்காக பூவண்டன்மாவர் காவிக்கொள்ள
பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
ஆண்டியும் ஆண்டிச்சியுங்கூடி அழித்துவரும்போது
அன்புள்ள பக்தரை ஆல்போல் தழைக்க வைப்பதும்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

சாட்டு நீட்டோலை


சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல்
தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 511 - 540 of 2738 அடிகள்

arul-nool

அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
வர்ணமுனி  மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும்  அம்மை உமையாளருக்கும்
தெய்வாரிடுவது  முறையோம் முறையோம் முறையோம்
கவுந்தலம், வெந்தலம், சிலப்புவான், தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமனமா இச்சமயம் விடுங்கோகாட்டில்கலிவீசாமல்
திருக்கடச் சடலம் சகலவுடாத் தச்சன் உச்சில்லாக்கொட்டை
கக்குறு கறுத்தான்தடங்குலுக்கி படைவார் மறுவுறிதியான
சமனம்மன் அல்லிப்புலிமன் அகில்பாறையான்
சிலுப்பு வானெடுத்து சிலம்வுவானத்து தணலத்து
சங்குரண்டடிமை தேசவாதிக்குக் கலகம் வந்திருக்குது
மறுயுகத்தார் இதை மாயமொன்று சிரிக்கிறார்  அரி
அவர் சற்றுமயலமடைந்தார் இன்று பாஷையால்
அரசு வேண்டாமா சித்திரவாதத் தூதர்கள்
தீயினால் எரிந்து போவார்கள்.

வாழப்படிப்பு

சாஸ்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
பத்திரத்தாள் பெற்றமக்கள் நம்முடைய
பைந்தொடிமார் கன்னிமக்கள்
கோத்திரத்தோடே நன்றாய் தழைத்துவாழ
விழிமடைவார் படைத்தலைவர் நம்முடைய
வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ

விளக்கவுரை :

அருள் நூல் 481 - 510 of 2738 அடிகள்

arul-nool

மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா’
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டை நொடித்த கலீனீசன் முடியை
இறக்கி நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கல்லைப்பிளந்த கணபதி நாராயணம்
செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அக்கனியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆடிக்கள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே
தெரிந்தவர்  தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா
திரைகடல் ஓடுமுன்னே அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
பணிந்தவர் பணிந்திடுங்கோ  பாலன் பதியேறுமுன்னே
துணை மலையொன்று நம்பினபேர்க்கு
தொட்டு நாமம்சுற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
தொழுத மதலையைக் கண்டு
தொழுது பணிந்து நடந்தவர்க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கும்பிட்டு  தவம் செய்வதற்குக்
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள்

விளக்கவுரை :

அருள் நூல் 451 - 480 of 2738 அடிகள்

arul-nool

தள்ளிவைத்துத் தவத்தை அளித்தவன்
தரத்தை அறுப்பதுவும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கண்ணு மயிலாளைக் கண்டவர்
கயிலாசம் ஆளவருகிறாவர் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சிங்கமுகம் தொரிந்தெடுத்துத் சோர்த்துப்
படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
செந்தாமரை முகத்தாளுடனே
தெருக்கள் தெருக்கள் தோறும்
சிங்காசனம் முடித்து வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கம்புத் தடியதைக் கையில் கொடுத்து
கருடனை விடுவது எங்கள் அய்யா
வம்புகலியதை மதத்தை யொடுக்கி
வாகன மிடுவது எங்கள் அய்யா
கும்பக் குடமதில் பால்கொண்டு வந்து
குடிக்கச் சொல்வது எங்கள் அய்யா
செம்பொற் கவரிவீச அமைக்க
சீமைஅரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆரசடலம் எடுப்பது எங்கள் அய்யா
அவனிப்பகைவர் தரம் அறுப்பதும் எங்கள் அய்யா
பாரகலி முடிப்பதுவும் எங்கள் அய்யா
பஞ்சவர்ணத்தேர் அலங்காரிப்பதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
உத்தாரமும் துகிலும் உகந்து எனைநகைத்த
சந்திராதியைக்குத்தி தர்மபதி அரசாள
வெற்றிக்கொடியும் கட்டி வீரப்பதியிலேறி

விளக்கவுரை :


Powered by Blogger.