அகிலத்திரட்டு அம்மானை 6961 - 6990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6931 - 6960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி
சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம்
நன்றான கன்னி நாரா யணரிடத்தில்
வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு
சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு
உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே
நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான்
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட
மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற
பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன்
அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன்
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப்
புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
அப்போத னாதி அய்யாநா ராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான்
பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ
நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ
தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார்
வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய்
நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால்
மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து
ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6901 - 6930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
தருவேன் கெதிகள் தருணமிக கேளீர்
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
அத்தருணம் வருவேன் ஆதிசிவ நாராயணரும்
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
வடக்கு உதித்து வருவோம் நாம்தெட்சணத்தில்
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில்
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது

காளி சிறை

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6871 - 6900 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும்
மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல்
சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல்
மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல்
பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல்
நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல்
தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல்
கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல்
மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல்
கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல்
செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல்
பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல்
மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல்
சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல்
ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல்
அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல்
தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல்
இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச்
சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து
இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி
நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும்
என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே
அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி
வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார்
வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி
நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு
நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே
தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார்
அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6841 - 6870 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி
இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து
மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு
எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால்
வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து
இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால்
அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே
செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும்
என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும்
நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம்
இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி
அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக
உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து
திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார்
நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே
தார்கெட்ட கலியில் தான்படைத்து அனுப்பிவைத்தோம்
இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர்
உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில்
நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால்
ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும்
மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி
எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே
செங்கருட வாகனவா தேவி மணவாளா
நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும்
சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே
எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில்
மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர்
பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால்
இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ
அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6811 - 6840 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில்
ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி
மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான்
எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண்
கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார்
அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து
செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே
மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை
அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன
என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே
அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும்
தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து
வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே
கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து
சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண்
அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே
இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும்
அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு
மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி
வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும்
ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே
நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு
என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ
அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும்
மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய்
இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால்
கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ
பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6781 - 6810 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால்
ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம்
நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும்
எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே
மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத்
தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து
ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத்
தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல்
உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய்
வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக்
குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும்
நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால்
குன்றுமலைக் கேகாமல் கோதைநாங்கள் தவமிருந்தோம்
இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும்
அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக்
கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி
மத்த தேசமும் மாயன் திருப்பதியும்
அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும்
துரைசாணி அய்யா துய்ய நாரயணரே
எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம்
மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது
என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும்
அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று
என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே
வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார்
பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி
எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி
ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை
நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும்
துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6751 - 6780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே
இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ
கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ
இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால்
புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே
கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே
வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று
புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே
கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு
மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே
கன்னிப் பருவமதில் கைமோச மானதினால்
உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப்
பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச்
சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி
பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித்
தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே
எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும்
சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர்
நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில்
சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம்
எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன்
கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ
இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக்
கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம்
இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும்
மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும்
குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத்
திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும்
கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6721 - 6750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ
கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க
இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான்
மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட
அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே
மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம்
தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே
எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த
வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ
பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ
வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ
நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து
தேசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே
பழிசெய்த சோழன் பாரக்கடலதிலே
வழிமுழுதும் கல்லெனவே மாறியே நில்லாதோ
பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல்
நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே
பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச்
சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே
கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக்
கொதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல்
ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ
கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே
கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல்
இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே
பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும்
ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம்
மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை
கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6691 - 6720 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வானத் தமிர்த மதுபா லமுதருந்தி
வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார்
ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான்
பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன்
அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார்
துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி
அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத்
தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும்
வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து
ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள்
சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள்
அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க
அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம்
நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில்
நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள்
சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை
மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால்
இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன்
பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது
சிக்கினால் நாமள் செடமெடுக்க நாளாகும்
மக்களுட துயரம் மாறாது என்றுசொல்லி
என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள்
அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார்
அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக
ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார்
அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே
பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது
கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து
உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து
வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே

விளக்கவுரை :
Powered by Blogger.