அகிலத்திரட்டு அம்மானை 4681 - 4710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும்
அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும்
எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி
இருந்துபுத்தி இவன்தனக்கு யான் சொல்லாதிருந்தால்
மறுத்து உரைப்பான் மன்றீரேழும் அறிய
சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து
ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான்
ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல்
ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார்
அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து
செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு
மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார்
ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது
என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று
மன்று தனையளந்த மாயப் பெருமாளே
பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே
நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே
எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே
சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும்
என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு
கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல்
சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது
எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன்
வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன்
பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன்
ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன்
மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன்
ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன்
மேடை யறியேன் மெல்லியரை நானறியேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4651 - 4680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உள்ள விதியோ ஊழி விதிப்படியோ
கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே
பார்த்தேன் மகன்தான் படவிதி யங்குமில்லை
ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோ லெமீறி
சிவனுக் கபயம் செவியறிய விட்டேனான்
இவளுக்கு வேண்வடி ஏதுசெய்வோ மென்றுசொல்லி
ஒருவரு மென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை
வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று
மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை
அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான்
என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால்
நினைத்த படியே நிறைவேறு மென்றுரைத்துக்
கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால்
உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த் தான்பிறந்து
உன்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன்
என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந் தானுரைத்து
அன்று திருவனந்தம் அவர்நோக்கித் தானடந்து
சேத்திர பாலனுக்குச் சொன்னது
கேத்திரனும் வேதியனும் கிருஷ்ண ரடிபணிந்து
மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே
உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர்
தன்கமவோ ரங்கே தவித்துமுகம் வாடிருக்க
நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ
தேசமெல்லாம் நீசனுட செய்திகேட் டேயிருந்தும்
போவதோ தேவரீர் பொல்லா தவன்குடியில்
தேவரீ ரும்முடைய சிந்தையெள் போலறியேன்
என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ
சான்றோர்க் குபகாரம் தான்செய்யு முன்னாகப்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4621 - 4650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான்
வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார்

பசுவும் பெண்ணும்

அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில்
பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும்
நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச்
சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி
ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு
நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன்
அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும்
இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக்
கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு
செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி
புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு
உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று
நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே
என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும்
நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார்
ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ
அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச்
செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள்
அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல்
மெய்யா யொருமதலை விமல னருளினர்காண்
மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில்
குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து
இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான்
உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண்
அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி
மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி
ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி
போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4591 - 4620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால்
நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று
வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில்
நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே
சீதாஉன்னுடைய சீர்பாதஞ் சேரவென்று
நாதா வைகுந்தா நாராயணாவெனவே
இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே
முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே
கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே
படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய்
ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில்
வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய
ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று
நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி
தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில்
எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று
பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில்
மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும்
ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே
நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து
எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி
சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக்
கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும்
வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து
மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி
நின்றா ரதையும் நெடியோன தையறிந்து
கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன்
நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க
அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4561 - 4590 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி
சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை
அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி
இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ
அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ
வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம்
உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே
சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார்
அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர
இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள்
நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு
வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க
ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே
சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி
நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து
வடக்குக் கயிலாச வழியே வருகையிலே

வானோர்க்கு அருளல்

தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில்
கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில்
இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று
மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே
வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம்
வந்தார்கள் அந்த வடகயிலை வந்திருந்து
சந்துமிகப்பேசி தானுரைப்பார் அப்போது
கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால்
அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான்
அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை
எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4531 - 4560 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில்
பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன்
அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா
செப்போடு வொத்த சிவகாமி போலழகு
நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே
ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே
என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி
வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண்
ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று
மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை
அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி
இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில்
நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே
பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார்
என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும்
மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும்
திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப்
பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன்
ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி
ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும்
கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே
மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன்
மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து
அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க்
கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை
வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக்
கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச்
சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால்
தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே
வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4501 - 4530 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்டெம் பெருமாள் கால்கொண் டுதைத்திடவே
குன்றுபோ லேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும்
துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும்
வாய்கண் ணொருமலையாம் வயிறுமூணு மலையாம்
கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண் டன்போரே
பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல்
நின்றாளே யண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய்
கண்டாரே எம்பெருமாள் கனத்தவி சேடமென்று
தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே
பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன
சொல்லுவீ ரென்று திருமா லுரைத்திடவே
வெல்லும் புகழ்தேவர் விளம்புவா ரம்மானை
ஏம னிணையான எக்காளத் துர்க்கையிவள்
சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால்
கோபித் திவளைக் குன்றுபோல் சாபமிட்டார்
ஏகி வரும்போது இவள்தானு மீசுரரை
வணங்கியிச் சாபமெப்போ மாறுமென்றாள் மாயவரே
அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா
அனந்த புரமதிலே ஆனநதி மேலே
வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில்
உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே
பின்சாப மிட்டுப் போக விடைதருவார்
என்று சிவமுரைக்க இப்படியே வந்தவளும்
குன்றுபோ லேகிடந்தாள் குருவேயுன் பாதமதால்
அவள்சாபந் தீர்ந்து ஆயிழை போல்வடிவாய்
இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும்
நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி
வல்லவளே யெக்காள மடந்தையே யுன்றனக்கு
ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார்
வாதுக்கு வல்லகியாள் மாய ருடன்கேட்பாள்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4471 - 4500 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து
வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார்
மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால்
பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார்
அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு
இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா
நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு
வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை
பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி
மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல்
சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத்
தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து
பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து
ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய்
மாசணு காமல் மனதில் நமைத்துதித்து
ஓசை யுடனே உலக மதில்நீங்கள்
வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று
பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ
தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால்
வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம்
அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு
எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார்
நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம்
செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே
இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து
துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத்
தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத்
தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க
அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில்

எக்காள துர்க்கை

புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4441 - 4470 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பிரம்ம ரிஷிகள்

வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக்
களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார்
மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய்
ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார்
அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று
செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து
மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில்
ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர்
பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி
வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால்
அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச்
செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார்
அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம்
எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே
வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத்
தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே
வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார்
சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன்
தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப்
பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார்
அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி
இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே
மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று
தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை
உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத்
தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து
அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம்
இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே
எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே
திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4411 - 4440 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பங்கம் இல்லாத பரமரிசி ஆனவரும்
சங்கமெல்லோரும் சேர்ந்து மிகக்கூடி
மாயனிடத்தில் மனமகிழ்ந்து ஏதுசொல்வார்
ஆயனே கலியன் அவனும் மிகப்பிறந்து
நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த
தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா
அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால்
எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ
கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி
மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன்
பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன்
வரியான பாவி வம்புமிக செய்வானே
ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை
மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால்
எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா
இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான்
சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா
என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே
அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார்
நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே
கலியேது நீசம் காணேது வையகத்தில்
சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன்
அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத்
தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால்
கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே
வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம்
ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும்
வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும்
சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே
வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே

விளக்கவுரை :
Powered by Blogger.