அருள் நூல் 871 - 900 of 2738 அடிகள்

arul-nool

வழக்கண்டேன் சிவனே அய்யா
சட்டிக்காய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர்
பொருதக்கண்டேனையா சிவனே அய்யா
நாடுதனிலே திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து
கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
சாவல்கோழியல்லாவ கூவுமென்றுசொல்வார்கள்பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா
உண்டமயக்கத்திலே உறங்கப்போன உயிர்வோடிப்
போகக்கண்டேன் சிவனே அய்யா
மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல
மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா
பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில்
ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா
கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய
கடல் வந்தழிக்ககண்டேன் சிவனே அய்யா
பாகல்போடவே கரையாய் முளைத்துவர
பாகமும் கண்டேன் சிவனே அய்யா
பெருத்தஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு
பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா
முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு
முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
கிடைகலைந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம்
கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா
மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு
வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய்
குறுக்கவே தங்கக்கண்டேன் சிவனே அய்யா
கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி
கடல்போல தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை

விளக்கவுரை :

அருள் நூல் 841 - 870 of 2738 அடிகள்

arul-nool

பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
பச்சைப்பாம்பை கண்டவுடன் மயில்களெல்லாம்பதுங்கி
கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா
ஆலாகருடனையும் சிட்டிவோடிப் பறந்து அடித்து
எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா
ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டுஅது
போர் செய்யக்கண்டேன் சிவனே அய்யா
பச்சப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா
நெளியக்கண்டேன் சிவனே அய்யா
கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக
கண்ணுகுத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும்
பதியுங்கண்டேன் சிவனே அய்யா
கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ளகுடிகளும்
வாழக்கண்டேன் சிவனே அய்யா
திரைகடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும்
கண்டேனையா சிவனே அய்யா
ஈரத்தின் மேல்கிடந்த ஆடையை அட்டைகண்டு
எடுத்துவிழங்கக்கண்டேன் சிவனே அய்யா
போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனையிடத்தில்புழு
வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா
பூமாலையைக்கட்டி தோள்மாலையாக போட்டபூவும்தான்
வாடக்கண்டேன் சிவனே அய்யா
முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே
மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா
புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும்
கண்டேனையா சிவனே அய்யா
முள்ளுமுனையதிலே  குளம்வெட்டி வயலும் பாய்ச்சி
முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா
உப்புவிளைந்துவரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு

விளக்கவுரை :

அருள் நூல் 811 - 840 of 2738 அடிகள்

arul-nool

சீமைஅழிந்து போமே சிவனே அய்யா
சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம்
ஏதோசொல்லையா சிவனே அய்யா
ஆசுமதூரம் சித்திரம்ட விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம்ட சொல்லறுற்றேன் சிவனே அய்யா
பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி
போகவும் கண்டேனையா சிவனே அய்யா
பாம்பைக் கடிக்கவந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி
கொத்தக்கண்டேன் சிவனே அய்யா
பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால்

விளக்கவுரை :

அருள் நூல் 781 - 810 of 2738 அடிகள்

arul-nool

சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த
கலியிலிருப்பானோ சிவனே அய்யா
கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து
கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா
பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில்
பாசாணம் போடலாச்சே சிவனே அய்யா
பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா
குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள்
செய்ததுண்டோ சிவனே அய்யா
தேவர்கள் எல்லாரும் கயிலாசத்திலிருந்த
தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா
இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்கா
இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா
ஆனாலும் இன்னும்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
நாட்டு முறையைப்போல காசியும் காணிக்கையும்
நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா
திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அருள் நூல் 751 - 780 of 2738 அடிகள்

arul-nool

மருந்து வளரலாச்சே சிவனே அய்யா
கிழமுனி தானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக்
கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா
மெத்தவும் நாளாச்சே  பொத்தியே கையைச்சேர்த்து
விரித்த சடையனானேன் சிவனே அய்யா
ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற
அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா
ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா
திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைக்
சம்பளம் கூட்டினேனே சிவனே அய்யா
விரித்த தலையுடனே யெரித்த கண்ணோடிருந்து
வேகுதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அரணும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க
ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா
தெற்கும் வடக்கமாகச் சந்திரனும் சூரியனும்
திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி உதிக்கலாச்சே சிவனே அய்யா
காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு
காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா
வீதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட
வெள்ளக் காகந்தா னெங்கே சிவனே அய்யா
அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன்
அறியவுமாட்டானைய்யா சிவனே அய்யா
சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு
தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா
சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை
சண்டாளர் அறிவாரா சிவனே அய்யா
உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில
ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா
தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச்

விளக்கவுரை :

அருள் நூல் 721 - 750 of 2738 அடிகள்

arul-nool

இத்தணைக்கும் சகித்த எனைமா முனியை இருத்தினான்
சிலநாளாய் சிவனே அய்யா
அரங்கதணில் அடைத்து வத்தல்போடத் தீவைத்து
அசையாமல் இருந்தiணாய சிவனே அய்யா
போதித்தேன் கூரையிலே, கேலிகள் பண்ணாதே
போவென் றடித்தானே சிவனே அய்யா
ஏழைமாமுனியும் யுகமாயிருந்து
இருத்தினான் சிறைதிலே சிவனே அய்யா
வெகுநாள் இங்கிருந்து சடையுதே திருமேனி
விரித்தலையுடனே சிவனே அய்யா
கவிழ்ந்தெந்த நேரமும் இருந்தந்த மாமுனிக்கு
கழுத்தம் கடுக்கதையா சிவனே அய்யா
பிரமணைத்தேடியே முழுமனதோடியிருந்து
பிடரியும் நோகுதையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்ததேனையா சிவனே அய்யா
தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி
தலைவிரித்திருந்தேனையா சிவனே அய்யா
சன்னியாசி வேசம்போல பின்சடையோடிருந்து
சடையுதே திருமேனி சிவனே அய்யா
குடமனி தானும் சிவனே அய்யா
குடமுனி, தானும் உடுக்கத்துணியில்லாமல்
கூட்டி முடியலாச்சே சிவனே அய்யா
வேள்ளைப்பேன் களுக்கெல்லாம் முள்ளுமுளைத்தென்
மீதில் கிடக்கலாச்சே சிவனே அய்யா
தலையில் சிவமுறைந்து வடதிசை முகமாகத்
தவத்தில் இருக்கலாச்சே சிவனே அய்யா
அம்புவியில் விளையும் பண்டம் பாராமலே
அறைக்குள் ளிருக்கலானேன் சிவனே அய்யா
வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில

விளக்கவுரை :

அருள் நூல் 691 - 720 of 2738 அடிகள்

arul-nool

பூமி அழிந்திடுமே சிவனே அய்யா
கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா
கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா
கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான்
கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா
பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா
கந்தனென்றியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும் தானோகலையோ சிவனே அய்யா
வெள்ளத்தடியைக் கொண்டு கள்ளனைத்போலத்தள்ளி
விட்டென்ன அடித்தானே சிவனே அய்யா
எனை அவன் வைததெல்லாம் வாக்குவாம் தானென்று
நினைத்துக்கொண்டனையா சிவனே அய்யா
பச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப்
பாலாயிருந்ததையோ சிவனே அய்யா
கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே
கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா
அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டேன்
றகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி
என்னையும் அடைத்தானே சிவனே அய்யா
வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை
நீற்றுக்கல் கொண்டுவந்த நீற்றிப்போட வேணுமென
நீசனும் செய்தானே சிவனே அய்யா
இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறாதென்று
எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
நெய்யுயூறிக்கட்டையெடுக்கித் தீயைவைத்துநீந்திக்கோ
என்றானோ சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று
குழிபோட்டு நின்றதையோ சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 661 - 690 of 2738 அடிகள்

arul-nool

நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதகா இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
மாபாவி யிறையறிந்து யாதோகோ ரியமென்று
பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்டபாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண
நற்பாலாயிருந்ததை சிவனே அய்யா
இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன்
எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா
கட்டிலையும் கொண்டுவந்த  தொட்டில் கட்டியென்னை
கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா
வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில்
கடல்வளைத்து கொண்டதையோ சிவனே அய்யா
கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம்
கல்லும் உருகிடும் சிவனே அய்யா
அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன்
இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு
எரியவும் கண்டேனையா சிவனே அய்யா
முட்டப்பதியும்நாடும் கிட்டக்கிளம்பும்வகை
முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா
ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக
எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா
பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அருள் நூல் 631 - 660 of 2738 அடிகள்

arul-nool

மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
அடுத்தாரைக்  காப்பதற்காய் பூவண்டன்  தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி
புண்ணா உளையதய்யா சிவனே அய்யா
மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு
மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா
அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே
அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா
வாடுதே யெந்தனுள்ளம்  மயங்குதே திருமேனி
வரவர வாடுதய்யா சிவனே அய்யா
குலைத்த தலையுடனே சலித்த முனிக்க
குறுக்கும் கடுக்குதய்யா சிவனே அய்யா
பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்த
புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி
அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா
எங்கெங்கும் விசையாச்சே தவமுனி யான்யிருக்கும்
கோலம் கண்டாயோ சிவனே அய்யா
கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று
குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும்  பசிக்குதையா சிவனே அய்யா
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 601 - 630 of 2738 அடிகள்

arul-nool

மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க
விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா
உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும்
உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா
எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு
இங்கே நான்வரும்போது சிவனே அய்யா
தாய்கிழவிக்குக் கொஞ்சம்  அதிசயங்களைக் காட்டி
சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா

விளக்கவுரை :


Powered by Blogger.