அகிலத்திரட்டு அம்மானை 8071 - 8100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள்
வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து
பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே
நாங்களும் வாலிபப் பிள்ளையா   யிருக்கிறோம்.
அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால்
வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர்
இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி  
இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். 
அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர்
சத்தியமாய்ப் போவார்கள்.போன பேர்கள் போக
இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். 
அவர்களுக்கு வேண்டிய  பாக்கியத்தைக் கொடுப்போம்.

விருத்தம்

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்   
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

விருத்தம்

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

விருத்தம்

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

விருத்தம்


திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

விருத்தம்

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8041 - 8070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிகுத்துக் கட்டுவார்களென்றும்,  இன்னுஞ்சிறிது
நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும்
துர்ச்சனராயிருக்  கிறபேர்களும்
வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் 
சண்டைபோட்டு மாண்டுபோவார்களென்றும்
போனபேர்கள் போக  இருக்கிற பேர்கள்
புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு
சர்வபாக்கியத்திலே அடைவார்களென்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்.
அதினால் மானிடரெல்லாம் உயிரிழந்து உட்கொள்ளைப்
பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும்.
நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்.
நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும்,
மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும்,
அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம்
மாண்டு போவார்கள். போனபேர்கள் போக
இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள்.
மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும்.
வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச்
சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே
மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும்.
ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும்,
ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும்,
ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு
ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு
ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும்.
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு
தர்மம் வாங்கிறபேர்களில்லை யென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8011 - 8040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உயிர்நிலையில்லாதவர் அழிந்து போவார்கள். அதில்மேல் பதினெட்டுத்
துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த  
ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்று
நாள் இருள்மூடி ஆனைத்   துதிக்கைபோல் மழைபெய்யும்.
அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு   போவார்கள்.
அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும்
பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும்  
தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும்
தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச்
சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள்.
இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள்.
முன்னுக்கு மழைதட்டும்
உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென  வகுத்தார்.
சிலநீசர் மிகக்  கறுப்பை நினைவில்லாத்தொட்டு
மிகப் பாசமடைந்து  அலைந்து அழிந்து போவார்கள். 
வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள்.
வாச்சி கொழு கலப்பையெல்லாம்  நாசமாகிப் போய்விடும்.
முன்னாலே துலுக்கர்  தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே 
துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம்.
பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள்.
புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம்.
பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி  காரணங்களைச் சோதித்துப்
பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம  தேசத்தில் வாழுந் 
தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார்.
காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம்
கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு
ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை 
அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7981 - 8010 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக்
கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர்
வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே

விருத்தம்


மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

வேறு


திருவாசம் - 1

எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள்
பருதி பாலாழியும் இயல்வானம் வாயு முதலாய்
தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந்
தலைமோடனு மறியவே தென்கீழத் தேவரு
மிங்குள்ள மூவரும் தேசதெய் வேந்திர னறியவே
வாச முனிவோர்களும் வேதசன் னாசியும்
மறையாறு சாஸ்திர மறியவே மண்டல மளந்தகை
கொண்டெழுதும் வாசகம் மண்டலர்க ளெவரு மறியவே சொல்கிறேன்
வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும் மகாபரசுராமரும் ஸ்ரீராமசேயரும்
பதியேறும் மூர்த்தியும் வண்மை பார்த்திந்தக்கலி யுகத்தில்
படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையைப் பகர்ந்து
திருவாசக மெழுதிப் பலநூல் அறிந்தவர் எவர் அவர்களும்
பக்தியுட னெக்காலமும் பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந்
தோர்க்குமிகுபல னுண்டாம் பகரக்கேளு நத்தியுடன்
பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கு முறைதானுங் கேளீர்

வேறு


நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே
நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே
வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப்   பூலோகக் கலியுகத்திலே
ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா 
இருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அலைந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7951 - 7980 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான்
மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை

திருவாசக விருத்தம்

கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்

விருத்தம்

கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7921 - 7950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே      
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது
நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
தாங்கள்வைகுண்டம் விட்டுதாம் போகும்முன்னதாக
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
சித்தன் கிருபையினால் சிவசங்கந்தான்கூடி
புத்திபோல் நீசொல்ல பூவறிய நானெழுதி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7891 - 7920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன்
பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு
மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக்
தண்டரளமீதில்த் தங்கத்தகடணிந்து
கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி
பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு
அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர
அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல்
வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே
மாது வரவே மறையோனும் மாயோனும்
ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம்
உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும்
கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார்
வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே
அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே
கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும்
வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே
நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து
மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே
கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான்
கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு
நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை
செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை
கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7861 - 7890 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம்
என்று திருமாலும் இறவாத ஈசுரரும்
மன்று படைத்த மறையோனும் பார்வதியும்
சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும்
விரசு முனிமாரும் வேத மறையோரும்
சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும்
பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய்
வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும்
தானவரும் வேதத் தம்புருக் காரர்களும்
சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய்
எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி
எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி
வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து
கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை
கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து
மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி
வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு
எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு
மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு
ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப்
போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு
மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச்
சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு
இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து
வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி
அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி
இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று
கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து
சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து
குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7831 - 7860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம்
தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி
மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி
சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால்
அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது
போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர்
தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே
புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே
தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார்
நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி
அடக்க முடனே அய்யாநா ராயணரும்
ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து
புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி
நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய
காட்டு மரமறிய கல்லப்பு தானறிய
புற்பூ டறிய பூமிதெய் வாரறிய
நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய
சேட னறிய சிறுவாய்வு தானறிய
மேக மறிய மேலோர்கள் தாமறிய
பூக மறிய பொழுதுசந் திரனறிய
நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய
பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய
வேத மறிய விளங்கு மறையறிய
வாதை யறிய மன்றுபதி னாலறிய
சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய
அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய
எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து
பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல்
நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7801 - 7830 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
உலகதிலே நாமள் உவரியிலே தவமிருந்து
செகமதிலே ஓர்பாலன் சிறப்பாய் மிகவெடுத்து
கலிமுடிக்க போவார்காண் கர்த்தனரி வைகுண்டரும்
பெலிகொடுத்து கலிதனையும் பெரும்புவி  ஆள்வார்காண்
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார்
இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து
பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை
என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே
உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி
நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே
கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே
நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று
நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே
ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால்
தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ
நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே
தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும்

விளக்கவுரை :   
Powered by Blogger.