அகிலத்திரட்டு அம்மானை 7471 - 7500 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிறந்த முகிர்த்தமதில்ச் சேர்த்தேயுனையெடுத்து
உன்தனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி
உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி
என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி
முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி
எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு
எட்டுத்திசை போற்ற ஏற்றகுடை யொன்றுதந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச்
செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி
எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால்
சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப்
பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும்
கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும்
மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான்
முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத்
தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய்
அரசாளவைப்பேன் என ஆதிமிகவுரைத்து
தேவனுயிரை திக்கென்று தான்பிடித்து
மூவர்நடுவருட கூட்டிலிட்டு முகத்தேவன் கூடழித்தார்
என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப்
பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7441 - 7470 of 16200 அடிகள் 


akilathirattu-ammanai

தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பரித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி
நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனைப் போல பெரிய சம்பூர்ணனை
சுமந்துவருவாய் கடலில் சொர்க்கங் கொடுக்கவேணும்
அமர்ந்த முகூர்த்தமதில் அங்குன்னை நானெடுத்து
உன்தனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
எந்தனோடு எல்லாரும் இன்பமாய் தவசிருந்து
சிவநாராயணரை சிறுமதலை குண்டராக்கி
நவசோதனைக்கு நாட்டுக் கனுப்பி வைத்து
புத்திரனாய் நீயெனக்குப் பெரிய தெய்வவுயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாள்க்கழித்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7411 - 7440 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை

ஆத்ம ஜெயம்

அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம்
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
நற்சடலமானதை நருக்கென்றளித்து விட்டு
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
தேவருக்கு அதிபதியாம் திருமால்ஆனவரும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்

விளக்கவுரை :   


அகிலத்திரட்டு அம்மானை 7381 - 7410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும்
காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
நாட்டையறுக்கும் நாதனுட சக்கரந்தான்
சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன்
என்பேரால் நீயும் என்சொர்க்கம் சேரனுமே
சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள்
என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7351 - 7380 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
முனக்கத்துரோகி உலகில் மிகவுண்டாகும்
மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும்
காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார்
மாடாடு வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும்
கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை
காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும்
மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும்
நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும்
மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்
பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல்
கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார்
ஊடப்பிறப்பை உள்நினைப்பார் வைப்பாக
வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது
தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்
ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும்
வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார்
தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார்
பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும்
மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார்
கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும்
கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய்
நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7321 - 7350 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன்
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி
அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப்
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்
பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
தேசமிட்ட தெண்டந் தொடர்ந்து பிடிப்பார்கள்
வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
பூமிமுழங்கும் பொழுதுமிகச் சாய்ந்துவரும்
சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7291 - 7320 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து
தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க
நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே
தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே
ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும்
அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது
நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார்
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
மிஞ்சிய தீனம் மேலுக்கு உண்டாகி
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
இன்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7261 - 7290 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
கெதியோவிதியென்று கேட்டுஇருக்கையிலே
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
கானகமேநடக்க களைப்பா இருக்கயிலே
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டையும் போட்டுக் குலபதவியுன் தனக்கே
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்

விருத்தம்


ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே

விருத்தம்

சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே

விருத்தம்

அய்யனேதவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன் பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே

விருத்தம்


போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7231 - 7260 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7201 - 7230 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்

விருத்தம்

காரணா அரிநாரணா கருணாகரத்தருணா
வாரணா வெகுபூரணா வந்தாய் அருள்செய்வாயே
நாரணா பரிபூரணா நான்செய்த குற்றம்பொறுத்து
காரணா வைகுந்தம் கருத்தாய் அருள்வீரே

நடை

பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்

விருத்தம்

காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா
கவிஞோர் தொழும் வாரணா கருணகரத் தருணா
வெகு தருணா கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத் தினமேயருள் மாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
குணசீரா வெகுதீரா நவிவீரா புவிநாதா
தருணா கருணா இந்த்தருணம் வந்தாலே
கருவாய் உருத்திரண்டு கருத்தாய் வளர்ந்துஅன்று
இருந்தாய் எமலோகம் ஈசர்மாயிதான்என்று
திருவுருவம் கொண்டு சிவனும்நீரும் வந்ததினால்
திருவோடுறு மார்பா சிறியார்மிக தறியாச்செய்த
வெறியானதைச் சிறிதாக்கியே சேர்ப்பாய்
முகம்பார்ப்பாய் முடிவானதை யறியாமலே
மோகமாய் வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென
ஒஞ்சிப்பத மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே

நடை


இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
முப்படியே யாசீர் விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து

விளக்கவுரை :   
Powered by Blogger.