அகிலத்திரட்டு அம்மானை 6661 - 6690 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே
ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித்
தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும்
பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும்
கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும்
சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும்
பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில்
சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது
தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார்
அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும்
இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு
இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும்
சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும்
கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே
நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய்
மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே
தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே
இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம்
இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன்
இரந்து திரியும் ஈசருக் கல்லாது
பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர்
அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி
இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ
வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம்
கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார்
அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார்
ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும்
மான்பெற்ற பிள்ளைகள்தாம் மானிலத்தி லேபெருகி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6631 - 6660 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து
வந்து மடவார் மறையொத்த மூவரையும்
சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக்
கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல்
மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக்
கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள்
சென்றோடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி

விருத்தம்

வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி
சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி
நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி
சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி

விருத்தம்

மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல
நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி
சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி
மாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி

விருத்தம்

மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி
தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே
காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற
தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி

விருத்தம்

மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா
காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல்
ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல்
வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே

விருத்தம்

தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல்
ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல்
சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு
வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே

நடை

அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே
மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே
தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6601 - 6630 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும்
அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும்
செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே
வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள்
இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி
தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள்
வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே
எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல்
தனதாக எங்கள் தயவில் குடியிருந்து
கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே
உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு
இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே
அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல்
காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப்
பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே
எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும்
சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ
ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து
தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ
கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ
அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும்
என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க
அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி
நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம்
வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும்
தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும்
அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள்
அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும்
கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி
நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6571 - 6600 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே
நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி
நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை
பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே
ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும்
ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள்
ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால்
பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை
மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே
சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும்
முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும்
மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள்
எனதுள் குடியிருக்கும் என்னுடைய நாயகமே
காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி
தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே
பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே
அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள்
என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே
அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார்
நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில்
செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார்
அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும்
ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே
அண்ணரே கோவே ஆதிநா ராயணரே
கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள்
தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய்
சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது
நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும்
ஆமான பதவி அருளவே வேணுமையா
என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6541 - 6570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில்
பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும்
உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு
கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள்
ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத்
தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை
எம்மிடத்தில் இருக்கும் இயல்கணக்கு அத்தனையும்
சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி
சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும்
காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு
ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண்
ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா
ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும்
அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண்
முழித்து எழுந்து மூடொன்று தானாக்கி
முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப்
பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய்
இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால்
அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில்
அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக்
கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு

அம்மைமார் தவநிறைவு

என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே
சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள்
தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும்
உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி
கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6511 - 6540 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வன்னமது பூகம் வாசமது விருச்சம்
தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம்
ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம்
சோதி விருச்சம் சுபசோபன விருச்சம்
தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம்
ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும்
வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில்
சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம்
வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக
ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய்
வானமீதிலிருக்கும் வளர்நிலவும் சூரியனும்
தானமது மாறாமல் தான்வருகும் தியதியிலே
உவரியிலே தோன்றும் உயர்தரும அப்பதிதான்
கவரமுடியாது கண்காணா திருப்பதினால்
சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய்
சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும்
வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள்
ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள்
மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய்
இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி
பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப்
புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார்
மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும்
தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம்
நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம்
இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச்
செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 6481 - 6510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது
நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால்
நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும்
சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும்
ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை
பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும்
இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி
புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக்
கானகமே நடந்து கதறி யெனைவருந்தி
மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார்
ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை
ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா
வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம்
வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே
பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி
தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி
இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும்
அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க்
கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல்
தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும்
விருச்சம் படைக்க வேணு மதுவிபரம்
புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான்
என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த
மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6451 - 6480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை
அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே
என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள
பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப்
பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி
இறந்தவழியாக இருக்கும் பாவக்கலியில்
கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால்
வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா
தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல்
வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய
இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே
கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார்
அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச்
செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால்
நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை
தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே
நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும்
திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே

தர்மயுகச் சிறப்பு

இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச்
செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும்
புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும்
நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும்
புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும்
புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல்
தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம்
நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ
இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல்
முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே
துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன்
பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6421 - 6450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண்
என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி
எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு
நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல்
படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில்
நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே
என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே
அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார்
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பு இறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்
சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும்
நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம்
வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில்
பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச்
சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்

திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்

ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே
சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6391 - 6420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி
நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும்
மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று
சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று
பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள்
ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று
சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள்
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்

பரலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும்
எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார்
வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார்
நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று
நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே
ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ
ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே
அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து
செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால்
கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி

விளக்கவுரை :
Powered by Blogger.