அகிலத்திரட்டு அம்மானை 6571 - 6600 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே
நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி
நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை
பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே
ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும்
ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள்
ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால்
பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை
மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே
சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும்
முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும்
மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள்
எனதுள் குடியிருக்கும் என்னுடைய நாயகமே
காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி
தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே
பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே
அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள்
என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே
அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார்
நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில்
செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார்
அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும்
ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே
அண்ணரே கோவே ஆதிநா ராயணரே
கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள்
தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய்
சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது
நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும்
ஆமான பதவி அருளவே வேணுமையா
என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6541 - 6570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில்
பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும்
உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு
கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள்
ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத்
தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை
எம்மிடத்தில் இருக்கும் இயல்கணக்கு அத்தனையும்
சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி
சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும்
காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு
ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண்
ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா
ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும்
அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண்
முழித்து எழுந்து மூடொன்று தானாக்கி
முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப்
பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய்
இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால்
அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில்
அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக்
கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு

அம்மைமார் தவநிறைவு

என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே
சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள்
தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும்
உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி
கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6511 - 6540 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வன்னமது பூகம் வாசமது விருச்சம்
தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம்
ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம்
சோதி விருச்சம் சுபசோபன விருச்சம்
தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம்
ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும்
வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில்
சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம்
வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக
ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய்
வானமீதிலிருக்கும் வளர்நிலவும் சூரியனும்
தானமது மாறாமல் தான்வருகும் தியதியிலே
உவரியிலே தோன்றும் உயர்தரும அப்பதிதான்
கவரமுடியாது கண்காணா திருப்பதினால்
சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய்
சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும்
வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள்
ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள்
மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய்
இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி
பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப்
புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார்
மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும்
தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம்
நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம்
இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச்
செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 6481 - 6510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது
நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால்
நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும்
சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும்
ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை
பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும்
இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி
புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக்
கானகமே நடந்து கதறி யெனைவருந்தி
மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார்
ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை
ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா
வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம்
வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே
பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி
தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி
இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும்
அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க்
கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல்
தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும்
விருச்சம் படைக்க வேணு மதுவிபரம்
புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான்
என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த
மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6451 - 6480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை
அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே
என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள
பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப்
பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி
இறந்தவழியாக இருக்கும் பாவக்கலியில்
கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால்
வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா
தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல்
வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய
இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே
கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார்
அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச்
செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால்
நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை
தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே
நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும்
திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே

தர்மயுகச் சிறப்பு

இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச்
செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும்
புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும்
நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும்
புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும்
புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல்
தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம்
நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ
இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல்
முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே
துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன்
பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6421 - 6450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண்
என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி
எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு
நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல்
படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில்
நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே
என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே
அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார்
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பு இறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்
சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும்
நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம்
வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில்
பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச்
சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்

திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்

ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே
சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6391 - 6420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி
நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும்
மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று
சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று
பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள்
ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று
சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள்
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்

பரலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும்
எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார்
வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார்
நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று
நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே
ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ
ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே
அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து
செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால்
கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6361 - 6390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார்
என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா
என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே
நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார்
நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று
ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும்
மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை
வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும்
பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து
பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து
ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணைமறந்து
அன்ன மறந்து அதிக மணமறந்து
சொர்ண மறந்து சுகசோ பனமறந்து
நலமறந்து தேக நளினமிக மறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச்
சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய்
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே
என்று மகாமால் இப்படியே சொல்லிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6331 - 6360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது
கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது
பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது
ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம்
வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார்
அப்போது வானோர் எல்லோரு மேபயந்து
செப்புவ தேதோ திருமாலே நாங்களினி
சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால்
எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான்
ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம்
ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம்
அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி
எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே
என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே
அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும்
சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே
எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில்
மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை
சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு
இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும்
வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை
அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை
கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை
இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால்
நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி
இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று
வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று
மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப்
பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று
இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6301 - 6330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார்

சிவலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும்
வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள்
அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து
செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு
மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே
ஆயரே உம்முடைய அறிவின் படியாலே
அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு
சமயம் வழுவாத சாதித் திருமாலே
என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும்
நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து
காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும்
மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே
ஆனதா லீரேழு அவனி இருள்மூடி
மான மழிந்து வரம்பழிந்து மானிடரும்
ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம்
நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே
ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும்
ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று
பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை
ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே
ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு

விளக்கவுரை :
Powered by Blogger.