அகிலத்திரட்டு அம்மானை 6451 - 6480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை
அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே
என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள
பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப்
பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி
இறந்தவழியாக இருக்கும் பாவக்கலியில்
கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால்
வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா
தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல்
வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய
இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே
கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார்
அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச்
செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால்
நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை
தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே
நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும்
திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே

தர்மயுகச் சிறப்பு

இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச்
செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும்
புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும்
நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும்
புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும்
புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல்
தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம்
நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ
இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல்
முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே
துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன்
பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6421 - 6450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண்
என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி
எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு
நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல்
படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில்
நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே
என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே
அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார்
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பு இறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்
சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும்
நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம்
வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில்
பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச்
சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்

திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்

ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே
சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6391 - 6420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி
நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும்
மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று
சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று
பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள்
ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று
சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள்
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்

பரலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும்
எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார்
வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார்
நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று
நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே
ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ
ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே
அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து
செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால்
கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6361 - 6390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார்
என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா
என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே
நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார்
நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று
ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும்
மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை
வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும்
பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து
பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து
ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணைமறந்து
அன்ன மறந்து அதிக மணமறந்து
சொர்ண மறந்து சுகசோ பனமறந்து
நலமறந்து தேக நளினமிக மறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச்
சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய்
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே
என்று மகாமால் இப்படியே சொல்லிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6331 - 6360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது
கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது
பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது
ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம்
வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார்
அப்போது வானோர் எல்லோரு மேபயந்து
செப்புவ தேதோ திருமாலே நாங்களினி
சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால்
எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான்
ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம்
ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம்
அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி
எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே
என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே
அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும்
சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே
எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில்
மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை
சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு
இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும்
வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை
அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை
கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை
இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால்
நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி
இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று
வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று
மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப்
பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று
இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6301 - 6330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார்

சிவலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும்
வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள்
அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து
செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு
மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே
ஆயரே உம்முடைய அறிவின் படியாலே
அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு
சமயம் வழுவாத சாதித் திருமாலே
என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும்
நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து
காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும்
மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே
ஆனதா லீரேழு அவனி இருள்மூடி
மான மழிந்து வரம்பழிந்து மானிடரும்
ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம்
நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே
ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும்
ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று
பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை
ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே
ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6271 - 6300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ
என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார்
தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி
மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம்
மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில்
பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே
நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே
ஏங்கக் கலியனுட இருளினா லையாவே
நியாம்நடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து
தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே
ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே
மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம்
என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள்
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்
தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6241 - 6270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம்
இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப்
பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே
நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து
சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து
வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே
சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து
உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ
தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால்
இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும்
வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால்
ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு
மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து
நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து
மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர்
என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார்
ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே
மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண்
காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து
வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே
என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே
நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து
முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட
என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல்
ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய்
மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும்
நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம்
மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால்
என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6211 - 6240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான்
இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும்
அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து
இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக
பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில்
ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து
வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச்
செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
மனமாயுங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச்
சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை
வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள்
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை
அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி
எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே
ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள்
தாண்டவரே யினியுமது தயவி னருளாலே
என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில்
வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம்
என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6181 - 6210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
நாற்பத்தாறாஞ் சன்னாசி நல்ல விபரம்கேளு
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து
நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்

விளக்கவுரை :
Powered by Blogger.