அருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்

arul-nool

வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க

விளக்கவுரை :


அருள் நூல் நிறைந்தது

அருள் நூல் 2701 - 2730 of 2738 அடிகள்

arul-nool


சங்கீதம் பாட சகலகலையுந் தொனிக்க
மக்கள் ஓசையேழு வாhத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னாpவா சித்துநிற்க
தம்பூரு வீணைசுரமண்டலம் முழங்கக்
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கொpய
அiகு கொலுவிரிக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க
இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லாரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும்ட அருகில வரிருக்க
சதிரான வார்த்தையொன்ற தான்செவியி லுமூகி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதணி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானிணைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களான சிலவரிசை தான்கொடுத்து
மாதவனை நினைந்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளகளே யிந்த  பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்குத்
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம நீர்வாழ

விளக்கவுரை :

அருள் நூல் 2671 - 2700 of 2738 அடிகள்

arul-nool

பேய்க்குக் கொடுத்திடுவார் அச்சமுடன்
தெண்டமதற்கிடுவார் வஞ்சமறநாடு வுயர்ந்துவரும்
நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றிவரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் மேகத்திலே
இருந்து மீனும்விழும் மழையிலே மேகமதாய் வில்லும்
வெவ்வேறாகிவிடும் ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும்தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்
ஆயள்தான்குறையும்
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசாயிருக்கிறான்
மாமன்நானிருக்க மனம்போல் நடத்துகிறான்
அவன்பட்டம் பறித்திடுவேன் கொட்டிக் கலைத்திடுவேன்.
நாரணனும்

முற்றிற்று

கல்யாணவாழ்த்து
மவுனி  கலியாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்க யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும் வருத்தி

விளக்கவுரை :

அருள் நூல் 2641 - 2670 of 2738 அடிகள்

arul-nool

மேல்மழைகள் தான்கூடி மரத்துக்கொப்பு
நனைத்துவிடும்நாடி ஒருகொப்பு னையாது
மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிண்டு
மூன்றுவரும் கோஎன்று பெட்டைக்கூவிவிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர்வேகுமே பள்ளமதாய்
தாழுமேசிலவூர் சமுத்திரம்வந்தே பெருகும்மாளும்
சிலவூர்மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும்
சிலவூர்கள் இக்குடனேமண்மாரி பெய்துவிடும்
நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல்
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில்
மண்ணாலும் நித்தம்மடிவார் முன்னோர்கள்
உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமெனக்கை யெடுப்பார் சண்டாளர்
குட்டியழித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை
முட்டியவர் தாயைமகன் கொல்லுவான் கெட்டுவிழ நெஞ்சுடனே
பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும்மாற
பில்லிசூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார்
பாவமதாய் கூர்மையுடன் பாராமல் பன்னி உருக்காட்டி
பலியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால்
தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும்
ஏவல்செய்ய சின்னபிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே
மண்ணில் சடைவாக வார்த்தை சொல்லும்
பின்னும் மந்தப்பாவம் பிணிகருத்தாய் பாலருகில்
மானிடர்க்கு காவலுருப் புண்ணியங் கசப்பாகும்
மேவரிய ஒருத்தனுடன் ஒப்பத்தெட்டு பேர்கள்
திருத்தமறவே திரிவார் தேசமதில்
வருத்தமாய் தேடிநித்தம் குருதாய் தகப்பன்
கூறுமொழிகேளார் திருத்தமுடனே சிவத்தைத்
தேடார்கள் கருத்துடனே பிச்சையது போடாமல்

விளக்கவுரை :

அருள் நூல் 2611 - 2640 of 2738 அடிகள்

arul-nool

தம்பிபகை அன்னயர்க்குப் பிள்ளைபகைகன்னி
பெண்களும்பகையாம் பண்ணிரியாமி
மருமகளுக்கு மாற்றானாய் மாறாமல்பூமிதனில்
மாமிதன்மேல் போர்ப்பகையாம் கூராண்மைஅறிவு
மயக்கமாய் அண்ணனுடன் தங்கமுறைமை
தம்பிச்சொல்லுவார் முழுதுமேதரைதனிலே
தாயுமானும் சரசமிகப்பெருகி ஞாயவழிப்பாராமல்
நத்தியேநேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார்
சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள்
அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள்
மோகம் பெருகிக்கண்ட கணவன்மேல்
பாவமெனத்தோன்றாமல் பாருலகமெல்லாம்
அதிகக்கோபமுடன் பொய்யாற்கொலைகள்
செய்வார் பாவமதாய் முன்னாலே பெண்ரூபம்
முக்கோணமாய்ப் பிறக்கும் பின்னாலே ஆண்போல
புpறந்துவிடும் முன்னாலே ஆண்பிள்ளைபெண்பிள்ளைகள்போல
அரையின்கீழ் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு
ஆகிவிடும் மட்டிகளாய் நாணுவார் நஞ்சுதின்பார்
நாக்கைப்பிடுங்கிடவார் சீனமுடன்சாவார் கிணற்றிலே
நாணமுடன் ஆற்றிலேமடிவாரும் அக்கினியில் மாள்வாரும்
தாழ்மையாய் குத்திமிகச் சாவாரும் முகடராய் நாட்டமுடன்
பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச்
சக்கரத்தால்மடிவார்கள் பூவோகம்விசிறும்
பனியாலும் வீசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவாய், வீறுகெட்டு
நாளுக்குநாளாய் நடக்கவழிகுறுகும், சேவிக்குமே
வானம்திசைமாறும் கூலிக்கும்பார்க்கும் பாழ்நரகில்
ஏறுஅக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்கமுண்டாம்
வாழ்வோருக்கும் மேல்புறத்து நஞ்சைவிளையும்
அதற்குக் கீழ்புறத்து நஞ்சைவிளையாது

விளக்கவுரை :

அருள் நூல் 2581 - 2610 of 2738 அடிகள்

arul-nool

வஞ்சப்பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய்
தீநகரக்காந்தல் செகத்தோர்க்குத் தான்வயிற்றில்
மாநெருப்பாய்த்தங்கி வயிறுகழிந்து தீனமுடன்
மாள்வார்சிலபேர்கள் மாறாமலேசிலநாள்
தாழ்வாருயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே
சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே…
இரத்தமிகவோடவே மண்டலத்தில்…
நாடுபிழையாது நற்காலம்போயொழிக்கும்
கேடுதொடுத்துலகம் கெட்டுவரும் நாடுதனில்
மழைதழைத்துப்பெய்யாமல் வானம்சுருங்கிவரும்
களைகள் பயிரில் கலக்கமேவிளையாது
வெள்ளத்தால் பஞ்சம்வரும் வெண்சாவியாகி விடும்
பள்ளத்தாலும்நெற்பயிர் நடுக்கும் சனங்களுற்ற
பட்டணங்கள்தோறும் பசிநோய் அதிகமதாய்
வட்டிஅநியாயம் வாங்கிடுவார்தட்டழிந்து
பிள்ளையுடன் கொண்டபெண்ணைப் பேறாகவிற்றிடுவார்
தௌ;ளிமையாய் கள்ளச்சிறைகள் வைப்பார்
வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல்களவும்
பொய்பெருத்து மாதருள்மேல் மோகமுற்று
வாடுவார்நீதமுள்ள ஞானங்கள்தப்பிவரும்
நாய்போல்சினந்திடுவார் ஊனக்கொலைபுரிவார்
ஓயாமல்தீனதிய திருட்டுப்பெருத்துவரும்
சீமையெல்லாம் புரட்டுமுரட்டாகப் பேசிடுவார்
மருட்டியேஎன்தன் பணத்தை யிப்போது
தாவென்றுசொல்லிசிந்தை கலங்கிடவேசெப்பிடுவார்
நந்தலுறம் பொய்யாணைவிட்டிடு வார்பொய்ச்
சத்தியமே பெருகும் மெய்யோனைத்தேடாமல்
விற்றிடுவார் வையகத்தில் ராஜனவன்கைக்கூலி
நடத்தியே வாங்கிடுவான்பேசிடுவான் ஞாயப்
பிழையாக ஆசையுள்ள அண்ணனுக்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

arul-nool

ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை
எங்கேயென்று தேடி அடிப்பாரே
இப்படி கலியருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர்
வைகுண்டாpடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள்

விருத்தம்

எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு
பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும்
மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே
கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள்
நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க
பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம்
ஆதியிலேயேPசுரர்தான் அம்புவியெல்லாமொpக்க
நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம்சீக்கிரத்திலேயெழுப்பி
நற்
குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து
மேத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து
தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன்
நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன்
நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி
அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில்
நாம்போறோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன்
சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின்
அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம்
நளடக்கும்குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன்
என்றும்அடக்கமறச் சொல்லுகிறேன்அதுகேளும்
பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம்

விளக்கவுரை :


சொல்வாய் ஞாயவழி காட்டி

அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

arul-nool

பேருலகில் சொல்லாமல்; பேர்மாறி நிற்போம்
அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால்
ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா
இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார்
என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து
தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும்
சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும்
தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும்
தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார்

விருத்தம்

கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து
பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே
அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு
வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள்
காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு
ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு
மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு
ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள்

நடை

கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று
காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர்
மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல்
மான வரம்பில்லை யப்பாகண்டீர்
ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும்
ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர்
மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே
வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம்
ஐயமிறைக்கூலி தெண்டம்
அட்டிஅநியாயம் மெத்த
ஆண்களைத் தீண்டி வேலைகொள்வார்
மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம்
வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார்

விளக்கவுரை :

அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

arul-nool

மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார்
எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக
எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார்
இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு
இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார்
முட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம்
வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு
சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு
தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார்
வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு
வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே
என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும்
ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம்
பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா
புட்டாரநாயகியே கட்டழியம்மா
இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை
ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா
முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம்
மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம்
வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே
அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம்
மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று
மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம்
சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை
கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம்
பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால்
பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா
மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள்
மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா
பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம்

விளக்கவுரை :

அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்

arul-nool

உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு
ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக்
நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும்

நடை

அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க
அருமையானஇங்கழைத்து உரிமையாக இப்போது
மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி
மேலுந் தா;மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று
மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று
மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார்
மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள்
மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே
போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு
பொpயபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார்
கையில் மழுசூலம் காப்பறைகளேந்தி
கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார்
மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு
மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி
தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன்
சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே
கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார்
கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ
பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ
பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி
நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ
நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர்
ஏவல்பொpயோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற
ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே
செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி
தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார்
வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார்

விளக்கவுரை :


Powered by Blogger.