அருள் நூல் 1651 - 1680 of 2738 அடிகள்

arul-nool

பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்
கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ
கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்
வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்
ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்
கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்
கயிலைமலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்
அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்
ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது
காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்
தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை
அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா
வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்
எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு
பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்
எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா
பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு
நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்
அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ
நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்
மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு
வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்
செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்
அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்
முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து
கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்
வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்
பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்

விளக்கவுரை :

அருள் நூல் 1621 - 1650 of 2738 அடிகள்

arul-nool

அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு
சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச்செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும்
தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ
தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா
நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா
சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே
வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்
உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்
பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா
யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்
அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே
அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ
பஞ்சவர்கள்  அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா
குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்
மந்திரமும் நானானேன்  மருந்துமூலி நானானேன்
சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்
சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்
கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே
துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ
பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி
காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா
யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்

விளக்கவுரை :


அருள் நூல் 1591 - 1620 of 2738 அடிகள்

arul-nool

முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ
பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே
சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டிசொல்கின்றேன்
மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது
நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே
வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா
கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன்
ஏகமெங்கும்வெளியாச்சே நளானெங்கேஒளித்திடுவேன்
கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும்
வேதமுத்துஞானமுத்துஉங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து
சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா
பார்தனிலேதான் அடங்கிமக்கள்மனதிலேயேயிருந்துவிட்டேன்
பண்டாரக்கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை
எங்கெங்கே போனாலுமெனக்கிரவுபகல்ஆகுதப்பா
என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்
அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ
தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்வரை
தெளியார்க்குபதேசம் நீசெப்பிரு என்மகனே
இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்
ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்
கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ
கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு
படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள்
அடிப்பார்அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுங்கோ
வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருக்கிறது
என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்
அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1561 - 1590 of 2738 அடிகள்

arul-nool

கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்
வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா
ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா
மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்
கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா
கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா
பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்
கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி
வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்
துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்
பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்
நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்
அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா
கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்
நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது
கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்
உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்
தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்
கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்
ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்
கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை
ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை
இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்
கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே
முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்
கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா
அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்
பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா

விளக்கவுரை :


அருள் நூல் 1531 - 1560 of 2738 அடிகள்

arul-nool

கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்
பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்
இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை
மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்
மேலுங் கீழுந்தெரியாது
நான்மெய்யன்மகன் பொய்யனப்பா
கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்
கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ
காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்
கண்காணப் பெருவழியேன்
அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா
கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ
உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்
மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை
நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா
அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ
தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா
அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து
பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே
இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்
நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா
வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ
வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா
கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்
கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா
கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்
காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ
நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா
நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

விளக்கவுரை :


அருள் நூல் 1501 - 1530 of 2738 அடிகள்

arul-nool

நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு  சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா
என் சித்துவித்தை அறிய மாட்டேன்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான்
அதையமர்த்த வல்லாருண்டோ
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து
பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா
ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா

விளக்கவுரை :


அருள் நூல் 1471 - 1500 of 2738 அடிகள்

arul-nool

ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி
ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
செம்பவளத்தேரறி
நான்தேசமெல்லாம்  பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம்அடிபிடிகள் அதிகமச்பாதேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடுஆச்சுதப்பா
பெண்ணாலெஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்ரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லைமிகலிநமக்கு
தானமானமில்லையப்பா சாதிவரம்பழியுதடா
சங்கக்கூட்டம் இல்லையாடா சரசக்கூட்டம் இக்கலியில்
கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில்
மக்களுக்கு உத்தரவு மால்சொல்ல நீதிஉண்டே
அறிவுசொல்லி தெளிவுதர
நான்அம்பலத்தில் கணக்கர்வைத்தேன்
நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை
ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம்செய்யவாறேன்
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதிதேடுங்கப்பா
அதிகாரசச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா
பத்திரத்தைப்பாடிவந்தாலும் பாதையிலேபோகவிடான்
கொடியென்றநாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ
அடங்காத பாம்பதுதான் அதன்நஞ்சை அறிவீர்களோ
எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக
இருபத்தைந்துபாம்பாக உங்களிடம்பார்க்கவருகிறாரே
சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன்
என்னாலேஆகுமட்டுமிதுவரைக்கும் புத்திசொன்னேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1441 - 1470 of 2738 அடிகள்

arul-nool

குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்
சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு
அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா
அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
ஏகன்போக னப்பாநான்
இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான்
உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
இருமனதா லெண்ணாதே பின்
எனக்குஉத்தரம் சொல்வாயn
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே
நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே
அந்த விசமதுதான் அனுகாதப்பா
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு

விளக்கவுரை :

அருள் நூல் 1411 - 1440 of 2738 அடிகள்

arul-nool

மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன்
கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தைஅறிவாரில்லை
ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றேசொல்வாரில்லை
வாரிதனை யடைத்தஅருமை சற்றுமில்லை யென்மகனே
அண்டமெலாம் பிண்டமதாய்
ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன்
கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா
நான்எந்நாளும் பள்ளிகொண்டுஇருப்பதை நீயறியவில்லை
அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதினென்னாணியித்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே
மாப்பிள்ளையா நானிருந்த மாயச்சித்தை சொல்மகனே
எண்ணிடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய்
ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதியல்லையா
பத்தவதாரம்பிறந்த பாதைகளைச் சொல்மகனே
என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை
தன்னையறித்ததுண்டால் தலைவனைநீயறிவாய்மகனே
கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன்
உங்களுக்குமண்ணில் மூவாசையதுமாற்றானாய் இருக்குதடா
வட்டக்கோட்டைக்க காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார்
சூத்திரக்கணக்கென்று சொல்லுகிறேன் கேள்மகனே
பஞ்சவர்ணக்கிளி கிளியொன்றிருந்தது
பறந்துபோகக் கண்டேனடா
ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே
பாம்புச்செடிக்குள்ளிருந்த பாம்பு படம்விரித்து ஆடுதடா
ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொல்வார் யார்மகனே
சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான்
முப்பூவை தானெடுத்து
அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 1381 - 1410 of 2738 அடிகள்

arul-nool

ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்
கண்டறிந்து பாருங்கப்பா
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா
இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்
இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா
ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்
குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா
ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்
இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு
மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்
நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்
அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா
அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது
அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா
இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்
திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்
எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா
மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ
ஊமையானேன் செவிடானேன்
பித்தனானேன் பேயனானேன்
என்பெருமையெங்கும் அறிவாரில்லை

விளக்கவுரை :


Powered by Blogger.