அருள் நூல் 571 - 600 of 2738 அடிகள்

arul-nool

ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும்
ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா
தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து
தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா
முப்பத்து முக்கோடி தேவரிஷியுடனே
முனியும்வந்த தெடுத்தாரே சிவனே அய்யா
மாமுனி தாயுடனே வழியே நளடந்துவர
மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா
திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல
திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா
அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து
அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா
கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா
கடலும் முழங்கிட துறவர் வணங்கியென்னைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா
இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த
வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா
இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி
என்னையும் விடும்போது சிவனே அய்யா
கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை
காகமும் கண் டேனையா சிவனே அய்யா
கைகலங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக்
காட்டியும் தந்தாயே சிவனே அய்யா
வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல
வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா
நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி
ரகசியம் பற்றிவிட்டாய் சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 541 - 570 of 2738 அடிகள்

arul-nool

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
கண்ணுச்சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
வில்லு கொண்டே எய்துவிட்டேன் நம்முடைய
விசயன் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
பார்த்துவிட்டேன் இரண்டுகண்ணுங்கொண்டு நம்முடைய
பத்தினி மக்கள் நன்றாய் தழைத்துவாழ
மலைக்கன்னிமார் தங்காவில் பெற்ற நம்முடைய
மக்கள் வலியசீமை கட்டி அரசாளவாழ
தர்மருட குலத்தி லுள்ள நம்முடைய
தெய்வச்சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
ஆல்போல தழைத்து வாழ நம்முடைய
ஐவர் மக்கள் சீமைகட்டி அரசாள வாழ
பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையான
மக்கள் நன்றாய் தழைத்துவாழ,

தானநிறைவு வாசகம்


கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன்
தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன்
சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
பிரமனை அடுத்ததுக்காக பூவண்டன்மாவர் காவிக்கொள்ள
பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
ஆண்டியும் ஆண்டிச்சியுங்கூடி அழித்துவரும்போது
அன்புள்ள பக்தரை ஆல்போல் தழைக்க வைப்பதும்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

சாட்டு நீட்டோலை


சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல்
தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 511 - 540 of 2738 அடிகள்

arul-nool

அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
வர்ணமுனி  மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும்  அம்மை உமையாளருக்கும்
தெய்வாரிடுவது  முறையோம் முறையோம் முறையோம்
கவுந்தலம், வெந்தலம், சிலப்புவான், தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமனமா இச்சமயம் விடுங்கோகாட்டில்கலிவீசாமல்
திருக்கடச் சடலம் சகலவுடாத் தச்சன் உச்சில்லாக்கொட்டை
கக்குறு கறுத்தான்தடங்குலுக்கி படைவார் மறுவுறிதியான
சமனம்மன் அல்லிப்புலிமன் அகில்பாறையான்
சிலுப்பு வானெடுத்து சிலம்வுவானத்து தணலத்து
சங்குரண்டடிமை தேசவாதிக்குக் கலகம் வந்திருக்குது
மறுயுகத்தார் இதை மாயமொன்று சிரிக்கிறார்  அரி
அவர் சற்றுமயலமடைந்தார் இன்று பாஷையால்
அரசு வேண்டாமா சித்திரவாதத் தூதர்கள்
தீயினால் எரிந்து போவார்கள்.

வாழப்படிப்பு

சாஸ்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
பத்திரத்தாள் பெற்றமக்கள் நம்முடைய
பைந்தொடிமார் கன்னிமக்கள்
கோத்திரத்தோடே நன்றாய் தழைத்துவாழ
விழிமடைவார் படைத்தலைவர் நம்முடைய
வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ

விளக்கவுரை :

அருள் நூல் 481 - 510 of 2738 அடிகள்

arul-nool

மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா’
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டை நொடித்த கலீனீசன் முடியை
இறக்கி நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கல்லைப்பிளந்த கணபதி நாராயணம்
செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அக்கனியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆடிக்கள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே
தெரிந்தவர்  தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா
திரைகடல் ஓடுமுன்னே அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
பணிந்தவர் பணிந்திடுங்கோ  பாலன் பதியேறுமுன்னே
துணை மலையொன்று நம்பினபேர்க்கு
தொட்டு நாமம்சுற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
தொழுத மதலையைக் கண்டு
தொழுது பணிந்து நடந்தவர்க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கும்பிட்டு  தவம் செய்வதற்குக்
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள்

விளக்கவுரை :

அருள் நூல் 451 - 480 of 2738 அடிகள்

arul-nool

தள்ளிவைத்துத் தவத்தை அளித்தவன்
தரத்தை அறுப்பதுவும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கண்ணு மயிலாளைக் கண்டவர்
கயிலாசம் ஆளவருகிறாவர் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சிங்கமுகம் தொரிந்தெடுத்துத் சோர்த்துப்
படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
செந்தாமரை முகத்தாளுடனே
தெருக்கள் தெருக்கள் தோறும்
சிங்காசனம் முடித்து வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கம்புத் தடியதைக் கையில் கொடுத்து
கருடனை விடுவது எங்கள் அய்யா
வம்புகலியதை மதத்தை யொடுக்கி
வாகன மிடுவது எங்கள் அய்யா
கும்பக் குடமதில் பால்கொண்டு வந்து
குடிக்கச் சொல்வது எங்கள் அய்யா
செம்பொற் கவரிவீச அமைக்க
சீமைஅரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆரசடலம் எடுப்பது எங்கள் அய்யா
அவனிப்பகைவர் தரம் அறுப்பதும் எங்கள் அய்யா
பாரகலி முடிப்பதுவும் எங்கள் அய்யா
பஞ்சவர்ணத்தேர் அலங்காரிப்பதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
உத்தாரமும் துகிலும் உகந்து எனைநகைத்த
சந்திராதியைக்குத்தி தர்மபதி அரசாள
வெற்றிக்கொடியும் கட்டி வீரப்பதியிலேறி

விளக்கவுரை :


அருள் நூல் 421 - 450 of 2738 அடிகள்

arul-nool

சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடுக்கண் தலையறுத்த மேகவர்ணப் பட்டும்சூடி
வைகுண்டப் பதிதனிலே வைகுண்டராசராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
தீத்தறுத்த மாயவனார் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நடுத்தீர்த்து
அரசாள்வதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
மாயன்திருப் பதிதனிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மேகம் சூழ்ந்த
வையகமெல்லாம் ஒருகுடைக்குள்
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
படிஉடன் நடைதனிலே பாரப் பதிதனிலே
வைகுண்ட பதிதனிலே வைகுண்டராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாலுயுகம் கொண்டு எங்கள் அய்யா
வைகுண்டராசருக்கு நாற்சொரூபம் கொண்டு
தர்மபதியுதித்து அரசாள வருவது
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
குணமான ரிஷிமார் வந்து பணிவிடை செய்து
வைகுண்டராசராக ஏற்பது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சாதிக்கு சிறையிருப்பது எங்கள் அய்யா
தங்கத் திருமுடி சூடுவது எங்கள் அய்யா
அட்டி சரப்பளி அணிவது எங்கள்அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சத்திமுனி  என்தகப்பன் சத்திகன்னி என்தாயார்

விளக்கவுரை :

அருள் நூல் 391 - 420 of 2738 அடிகள்

arul-nool

வடிவுகொள்வதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
மாயன் திருப்பதிக்குள் யிருந்து புக்கு
எங்கள் அய்யா வைகுண்டராசர்  யெழுந்தருளி
தெருச்சுற்றி தேசத்தில் பவனிவருவது
யெங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா
கூண்டபெரும்  படையுடனே
கூடவரும்  காளாஞ்சியோடே கோட்டைசுற்றி
விளையாடி வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து ஈரேழு உலகமெல்லாம்
ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர்  வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
வாடாத பூவதுவாம் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்துதிருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் யெதிரில்லாமல்
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சரணம்சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு
வைகுண்டபதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள வருவது எங்கள் அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 361 - 390 of 2738 அடிகள்

arul-nool

மோட்ச உயிர்க்கும் நரகஉயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்

வைகுண்ட பதவி உயிர்க்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா

முன்னுள்ள ராமர் உயிர்க்கும்
மோகவடி வானஉயிர்க்கும்
முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும்
இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவன்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர்தான்
எவ்வுயிவர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா
கன்னியா குமரி க்கு வடக்கே
பதயேறுவதும் யெங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
வானம் உள்ள தேவரெல்லாம்
பூமியுள்ள  நாள்வரைக்கும்
மற்றமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும்
எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
நாகவடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து நாலுவிதமாய்

விளக்கவுரை :

அருள் நூல் 331 - 360 of 2738 அடிகள்

arul-nool

சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்!

சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோ
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம்

மகாலிங்கம்           அரிலிங்கம்
சிவலிங்கம்           லிங்காலிங்கம்
குருலிங்கம்           சொக்கலிங்கம்
திருலிங்கம்           சுகலிங்கம்
ஏக்காலிங்கம்             ஆதிலிங்கம்
ஏகலிங்கம்            அருள்லிங்கம்

அடங்காலிங்கம்

உகப்படிப்பு

அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா

சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையாம் முறையோம் முறையோம்

சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்

சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசுவாமி செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்

தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர்
நிச்சயித்தபடி யல்லாது மனிதன்
நிச்சயித்த படியிலலை அய்யாவே
இங்கும் யெங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள்
அய்யா சிவசிவா அரகர அரகரா

அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வோர் இடுவது முறையோம் முறையோம் முறையோம்

விளக்கவுரை :

அருள் நூல் 301 - 330 of 2738 அடிகள்

arul-nool

மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம்

அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்

திருவுக்கும் சடைகுரு  சிவசிவா சிவமண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சன்னியாசிகுரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவமண்டலம்
அரி சங்கராகுரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்
மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்

குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருமண்டலம்
சங்கம்நிதி குண்டலம் தரணி குருகுண்டலம்

தரணியது குண்டலம் தரணிபுகழ் குண்டலம்
சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா
ஏககுருவாகப் படைத்தது நிறைந்தவர் சிவசிவா
படைத்து நிறைந்தவர் பாலன்வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமால் ஆதிகுரு சன்னியாசி
சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர்
செந்தில்வேல் சன்னியாசி செந்தி வேலவர்
வடிவும் புகழ்படைத்தவர் மாயநிற மானவரவர் சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி
சிவசிவா தந்தேனன்னாய்
தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்

சிவசிவா த..ம்…அ…சி அரி  நன்றாகக் குருவே துணை

விளக்கவுரை :
Powered by Blogger.