அகிலத்திரட்டு அம்மானை 15391 - 15420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
சுகமேஇருமகனே சுத்தகணத்தோனே
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான்
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15361 - 15390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய்

விருத்தம்

கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில்
வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும்
பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும்
ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்

விருத்தம்

இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே
உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும்
கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும்
மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம்

விருத்தம்


உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய்
முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல்
கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க
அடுக்கவுனக்கு உதவி செய்தார் அவரே யுனக்கு மகவாமே

விருத்தம்


ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த
ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள்
சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி
வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே

நடை

ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க்
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே
மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்
பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி
மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே
உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே
பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன்
ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை
அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15331 - 15360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று
வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று
மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே

வைகுண்டத்தில் திருமுடி சூடல்

விருத்தம்

வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள
மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப்
பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன்
பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும்
தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து
துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து
மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற
மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்

விருத்தம்

ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார்
கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச்
சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே
ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம்

விருத்தம்


ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன்
நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும்
வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து
தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார்

விருத்தம்

ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம்
வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ
மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா
செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய்

விருத்தம்

திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி
கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக்
குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு
மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்

விருத்தம்


கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே
வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம்
மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15301 - 15330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம்

விருத்தம்

நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே
நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால்
காங்கரிது எங்களுட கருணை நாதா
கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம்
ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும்
ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப்
பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும்
பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.

விருத்தம்

நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும்
நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு
இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து)
ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக்
கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும்
கொடுவரவேணு வேணுமெனக் கூற வானோர்
உண்டுபல மேளமொடு தாளத் தோடு
உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார்

விருத்தம்

சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச்
சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த
தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித்
தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர்
கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக்
குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற
மன்றலணி மாயவரு மீசர் தானும்
வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே

விருத்தம்

வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை
வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று
இளங்குருமா னானகுரு வைந்த ராசர்
இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப்
பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15271 - 15300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ
என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும்
அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும்

கலைமுனி, ஞானமுனி சாட்சியம்

இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில்
ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல்
தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால்
பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே
எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே
தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி
என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும்
நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு

விருத்தம்

கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான
விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி
ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும்
அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ

விருத்தம்


எறும்புகடை யானைமுதல் பேதா பேதம்
எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக
உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால்
உலகமதி லாருளதோ வுடைய மாலே
செறும்பொருளா முமதுமக னங்கே வந்து
செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும்
தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும்
தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார்

விருத்தம்

தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி
தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன்
உப்பரிகை மீதிருந்து அரசே யாள
உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை
மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும்
மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம்
நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15241 - 15270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சோதிமணியே சொல்லொண்ணா ஓவியமே
எந்தன் மணியே என்னாத ஓவியமே
உந்தனை உவரியிலே உற்று பெற்று கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும்
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
பார்வதிமுதலாய் பதிகைலை மங்கைஎல்லாம்
சீர்பதியில்வைத்து செய்தோம்திருமணங்கள்
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15211 - 15240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
கைகொண்டுதொட்டுக் கன்னத்தில்முத்திமுத்தி
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா

சான்றோர் கோவில் அமைத்தல்


என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
நன்றுகளின்று நவில்வார் எல்லோரும்
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
இன்னம்நமை எடுக்கவர ஏகினார்வைகுண்டமென்று
மடமடெனச் சான்றோர் மலைபிடுங்கி கொண்டுவந்து
திடமான சங்குமண் சேர்ந்துமிகக் குழைத்து
பொன்மேனிக்கூட்டை பொதிந்துமணிவைத்து கோவில்
தென்மேனிச்சான்றோர் திருநாள்நடத்திவந்தார்
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருள்ஞானக் கண்மணியே
ஆதிசிவமணியே ஆதிநாராயண மணியே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15181 - 15210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான்
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
இப்போஒழித்து இருக்கிறார் ஓதிக்கொண்டும்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால்
திருந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
கொண்டாடிநாதந் குருவேசரணமென
வண்ணக்கயிலையில் வானவரும் போற்றிநிற்கப்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15151 - 15180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்

விருத்தம்


வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமாள் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றித் திருமால் மகனைக்கண் டாவினரே

விருத்தம்


கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந்திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே

நடை


ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோசமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 15121 - 15150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொன்னாரந்தச் சுகமாலழைத்தாரென
அன்றுவைகுண்டர் அதற்கேது சொல்லலுற்றார்
நல்லது தானென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் தனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில்
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ

விளக்கவுரை :   
Powered by Blogger.