அகிலத்திரட்டு அம்மானை 10951 - 10980 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர்
தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும்
நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார்
வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும்
பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண்
நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார்
அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால்
தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால்
என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர்
நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ
சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம்
எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று
சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி
வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில்
கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே
கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார்
நாட்டுக் குடைய நாராயணர் பாலன்
பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச்
சிறந்து தவசு செய்யு முறைமையினால்
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப்
பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல்
ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி
இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப்
பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம்
இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும்
போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான்
வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே
நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு
பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10921 - 10950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி
அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்
ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து
ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி
புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி
நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்
சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு
சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி
வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக்
கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்
சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்
கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்
சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்
கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து
என்ன விதமோ என்று மிகக்குளறி
மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி
எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி
சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி
தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்
பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக்

குறத்தி வருதல்

குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு
உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்
குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி
விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே
கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி
வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து
அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்
சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து
பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம்
விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10891 - 10920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய
இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி
அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்
மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்
அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்
முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென
ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்
சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே
என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்
அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி
கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை
நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்
மன்று தனையளந்த மாயத் திருநெடுமால்
என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார்

விருத்தம்
ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி
லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார்

விருத்தம்

வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன
விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே

மந்திரவாதிகளின் விசையடக்குதல்

நடை

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்
விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று
நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்
அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்
கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்
முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்
சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்
கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10861 - 10890 of 16200 அடிகள்


akilathirattu-ammanai

திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து
விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து
மலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவே
விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய்
அய்யா வுரைத்த ஆணை தவறாமல்
மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானை
அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணை
மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம்
தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும்
எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்து
அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி
மெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச்
சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும்
பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவே
வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே
மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும்
ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவே
வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே
வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன்
சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரே
தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும்
பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார்
உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள்
படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே
அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும்
செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும்
கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று
மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார்
இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து
அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10831 - 10860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக்
கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரே
என்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுது
அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார்
காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும்
சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள்
ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம்
வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார்
உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும்
திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும்
அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொரு
மணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும்
அப்போது பேய்கள் எல்லோருந் தானழுது
இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும்
உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும்
தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண்
என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை
பார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க்
காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும்
என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து
உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும்
என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார்
அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடி
என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று
வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார்
அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும்
இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில்
ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்து
கைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10801 - 10830 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது
மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே
அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்
எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே
நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து
ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்
நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து
ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து
நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான
வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே
ஆனதினால் பேய்கள் அந்நீசக் குலமதினால்
வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்
என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்
நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை
முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே
என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை
மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி
நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி
எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை
வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி
என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்
பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்
நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்
கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி
மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்
தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை
அப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும்
இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத்
தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச்
இனியரசமான கருணாகர பொருளே.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10771 - 10800 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
நல்லவைகுண்டம் நாட்டில் வரும் வரையும்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
வல்லவரான வைகுண்டபெம்மானும்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10741 - 10770 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முனிவாங்கிதந்த வார்த்தை முன்னாலே வையுமென்று
வரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவே
துரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண்
பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம்
இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவே
என்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன்
அன்று தலையோடு அந்தமுனி தானடித்து
வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால்
மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ
சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமே
பக்தியில்லா கூளிகளே பகருவோமென்றாலும்
பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே
வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும்
அவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான்
சீவபரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே
உங்களுட மூப்பு உகத்திலினி வாராது
எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண்
எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண்
பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்கு
ஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்து
நானே யிதுமேவித் தாறேனென் றிப்போது
இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும்
எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில்
ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய்
நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து
அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்று
மறந்துபோகாமல் மனதுள்மிக மகிழ்ந்து
நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்
காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்
தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10711 - 10740 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப்
பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்

நடை

ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது
வாச மலரோனும் மற்றோரும் போகரிது
என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி
அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை
உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்
திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி
பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி
மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்
சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி
ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்
என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம்
சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே
அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை
பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்
நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை
தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை
நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்
எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்
அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்
சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்
போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே
கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்
அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்
கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி
அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்
கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று
மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து
இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10681 - 10710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார்

விருத்தம்

விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்
பதிவை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்

விருத்தம்

பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம்
மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார்

விருத்தம்


நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே

விருத்தம்

அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார்

விருத்தம்

ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக
ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று
தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே

விருத்தம்


கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்

விருத்தம்


உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்

விளக்கவுரை :   
Powered by Blogger.