அகிலத்திரட்டு அம்மானை 7951 - 7980 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான்
மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை

திருவாசக விருத்தம்

கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்

விருத்தம்

கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7921 - 7950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே      
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது
நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
தாங்கள்வைகுண்டம் விட்டுதாம் போகும்முன்னதாக
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
சித்தன் கிருபையினால் சிவசங்கந்தான்கூடி
புத்திபோல் நீசொல்ல பூவறிய நானெழுதி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7891 - 7920 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன்
பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு
மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக்
தண்டரளமீதில்த் தங்கத்தகடணிந்து
கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி
பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு
அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர
அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல்
வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே
மாது வரவே மறையோனும் மாயோனும்
ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம்
உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும்
கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார்
வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே
அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே
கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும்
வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே
நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து
மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே
கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான்
கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு
நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை
செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை
கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7861 - 7890 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம்
என்று திருமாலும் இறவாத ஈசுரரும்
மன்று படைத்த மறையோனும் பார்வதியும்
சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும்
விரசு முனிமாரும் வேத மறையோரும்
சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும்
பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய்
வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும்
தானவரும் வேதத் தம்புருக் காரர்களும்
சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய்
எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி
எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி
வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து
கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை
கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து
மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி
வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு
எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு
மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு
ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப்
போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு
மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச்
சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு
இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து
வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி
அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி
இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று
கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து
சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து
குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7831 - 7860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம்
தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி
மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி
சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால்
அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது
போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர்
தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே
புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே
தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார்
நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி
அடக்க முடனே அய்யாநா ராயணரும்
ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து
புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி
நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய
காட்டு மரமறிய கல்லப்பு தானறிய
புற்பூ டறிய பூமிதெய் வாரறிய
நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய
சேட னறிய சிறுவாய்வு தானறிய
மேக மறிய மேலோர்கள் தாமறிய
பூக மறிய பொழுதுசந் திரனறிய
நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய
பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய
வேத மறிய விளங்கு மறையறிய
வாதை யறிய மன்றுபதி னாலறிய
சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய
அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய
எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து
பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல்
நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7801 - 7830 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
உலகதிலே நாமள் உவரியிலே தவமிருந்து
செகமதிலே ஓர்பாலன் சிறப்பாய் மிகவெடுத்து
கலிமுடிக்க போவார்காண் கர்த்தனரி வைகுண்டரும்
பெலிகொடுத்து கலிதனையும் பெரும்புவி  ஆள்வார்காண்
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார்
இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து
பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை
என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே
உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி
நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே
கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே
நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று
நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே
ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால்
தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ
நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே
தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7771 - 7800 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த
கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில்
ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ

தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால்
காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக்
கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது
பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ

ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள்
தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன்
வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி
உன்னிச் சிவமுரைப் பார்

நடை

ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி
வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு
முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப்
பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே
அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி
இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே
செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே
ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப்
பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே
தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும்
மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ
அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே
நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும்
காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க
நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால்
நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும்
எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும்
கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும்
கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7741 - 7770 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ

பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து
கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம்
நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள்
சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ

தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும்
ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும்
ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும்
ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ

ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத
சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில்
இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ

பொன்னூற்றுத் தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று
முன்னூற்று யோசனை யுலாவுசுழி - பன்னூற்றுப்
பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று
மாலூற்று மாபதியு மாகுதோ

செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங் காசனமும்
முப்பத்தி ரண்டறமு மோங்குதோ - ஒப்பற்ற
ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள்
சீர்பதினா யிரத்தெண் சேருதோ

தெருக்கள்பதி னாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்குக்
குருக்களொன்று விஞ்சையொன்று கூறுதலோ - மருக்கள்
மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால்
வேறார்க ளும்பறிக்க வேண்டுமோ

பொற்மைப் பதியில் பொன்வாச லொன்றதிலே
தர்மமணி யொன்று தாங்குதோ - தருமமனு
மணியினது கூறறிய மணிகணீரென் றதல்லால்
இனியிரு ளில்லா தேகுதோ

அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7711 - 7740 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த
மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும்
போகத்தருணம் வந்து பூட்டினதோ

நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும்
பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப்
பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே
இடியத்தான் வந்தொத்த தின்று

பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும்
வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு)
அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே
சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ

மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச்
சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த
இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக்
களவறுக்கச் சோதியொன்று காணுதோ

அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும்
பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து
நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க
வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ

பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த
வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து
செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக்
கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ

பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம்
மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு
ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி
மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ

இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல்
நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப்
பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7681 - 7710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே
ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித்
திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே
அப்படியே நல்லதென்று அரனு முமையாளும்
முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும்
வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும்
மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும்
திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும்
சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும்
வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும்
தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம்
தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும்
அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார்

திருநடன உலா

நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம்
வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள
மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே செப்பு

இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும்
சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள
மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு
இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு

என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்திப் பூண்னதோ

தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப்
பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே
பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச்
சீறுங் கலிவயதால் சென்றுதோ

வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால்

விளக்கவுரை :   
Powered by Blogger.