அகிலத்திரட்டு அம்மானை 7951 - 7980 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு அம்மானை 7951 - 7980 of 16200 அடிகள்
எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான்
மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை
திருவாசக விருத்தம்
கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்
விருத்தம்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்
விளக்கவுரை :
எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான்
மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை
திருவாசக விருத்தம்
கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்
விருத்தம்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்
விளக்கவுரை :