அகிலத்திரட்டு அம்மானை 7171 - 7200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7141 - 7170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ
கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7111 - 7140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்

சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு

அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாராயணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
முன்தோசத்தால் தேவன் முடியணிந்த இந்திரனைக்
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7081 - 7110 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச்
செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி
அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச்
சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப்
பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள்
தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட
மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட
இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே
மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர
வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத
சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க
முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச
கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ
கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க
தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க
மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள்
சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள்
பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும்
சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர
ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே
வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய
செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க
வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க
புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ
செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள்
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7051 - 7080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
இப்படியேநான் உன்னருகே வருவேன்காண்
அப்படியே அங்கிருந்து அன்றுதவசு பண்ணி
நாரணரை வைகுண்டராய் நல்மகவாய் எடுத்து
சீரான தெட்சணத்தில் சிறையுமிருக்க வைத்து
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன்
திடமான கோவே செய்ய மணிவிளக்கே
என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய
என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே
என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது
அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச்
சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள்
வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 7021 - 7050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
நானும்சிவமும் நல்தவசியிலே வருவோம்
நீனும் தவமிருந்த நிலமையதுகேட்டு
நாரணரை வைகுண்டமென நம்மகவாய் தானாக்கி
சீரான தெச்சணத்தில் சிறையும் இருக்கவைத்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6991 - 7020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி

மகாலெட்சுமி மகரமாதல்

லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
ஆனிபொன் வைரம் அதுவளரும் மண்டபமும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6961 - 6990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6931 - 6960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி
சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம்
நன்றான கன்னி நாரா யணரிடத்தில்
வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு
சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு
உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே
நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான்
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட
மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற
பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன்
அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன்
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப்
புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
அப்போத னாதி அய்யாநா ராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான்
பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ
நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ
தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார்
வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய்
நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால்
மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து
ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6901 - 6930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
தருவேன் கெதிகள் தருணமிக கேளீர்
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
அத்தருணம் வருவேன் ஆதிசிவ நாராயணரும்
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
வடக்கு உதித்து வருவோம் நாம்தெட்சணத்தில்
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில்
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது

காளி சிறை

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி

விளக்கவுரை :
Powered by Blogger.