அகிலத்திரட்டு அம்மானை 5281 - 5310 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்படியே சிலைக்கு ஆனகுரு நாராயணரும்
இன்று போலெந்நாளும் மண்ணுக்கள்ளிருமென்று
அன்று சிலைக்கு ஆன நாராயணரும்
மும்மூர்த்தி எல்லாம் ஒருமூர்த்தி தானாகி
அம்மூர்த்தியாகி ஆதிவைகுண்டமென்று
வருவேன் கயிலை மாதரையும் மணமுகித்து
தருணம் வரும்போது தான்வருவேன் இவ்விடத்தில்
என்று உரைத்தார் எம்பெருமான் பொற்சிலைக்கு
அன்று பொற்சிலையும் ஆதியைப் பார்த்தேதுசொல்லும்
அதுவரையும் நான்தான் அவனிதனிலிருந்தால்
ஏதுநீசன் வந்து எந்தனையும் பார்ப்பானே
காளியும் என்னோடு கலந்து இருப்பாளே
ஆழியடைத்த அச்சுதரே சொல்லுமென்று
என்று சிலையும் எம்பெருமாளோ டுரைக்க
அன்று சிலைக்கு அருளுவார் அச்சுதரும்
கலிநீசன் வந்தால் கண்காணாதே போவான்
மலையாதே என்றுவாக்கு மிகக்கொடுத்து
இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று
சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப்
பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே
திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப்
பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி
அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே
அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல்
நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித்
தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும்
மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக்
கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5251 - 5280 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சென்று இருந்து சிவலிங்கம் தையமர்த்தி
நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய
தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட
ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி
வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய
வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க
வீசுவீ சென்று உலாவி யதுவீச
வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க
மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று
மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம்
தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை
கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து
பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம்
உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி
கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே
சிப்பாயி யோட சுபேதாருந் தானோட
அப்பப்பா வென்று அந்நீசன் தானோட
பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது
ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ
அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள்
மாய னனந்த புரத்திலே வாழுமட்டும்
நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில்
ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன்
பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்
என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக
அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள்
நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி
வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார்
இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5221 - 5250 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன
போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை
அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை

அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்


போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு
எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா
எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி
நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்
நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்
ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்
வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு
நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி
மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய
திரமான வாயு சேடன் முதலறிய
வருண னறிய மதியு மிகவறிய
தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன்
அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்
என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான்
அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி
முந்து மூலப்பதியில் முகுந்தனாண்ட தலத்தில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5191 - 5220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு
நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே
அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால்
அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன்
எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ
என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள்
இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா
அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ
வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ
ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ
என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே
உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா
முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு
இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா
அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச்
சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி
பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும்
இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது
நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ
பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத்
தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது
ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ
பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம்
பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான்
அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான்
வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ
என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5161 - 5190 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு
தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்
என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே
அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே
சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே
சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என்
என்வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை
என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு
வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை
நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின்
ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும்
கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை
தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை
என்றந்த நீசன் இத்தனையு மாயருடன்
தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும்
பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி
ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே
இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா
உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே
ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும்
மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார்
அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து
வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான்
மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5131 - 5160 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்
பொல்லாங்கு செய்யாமல் புவியாளு என்றனரே
அல்லாமல் சான்றோர்கள் அபயமிடும் ஒலிகள்
என்னாலே கேட்டு இங்கிருக்க முடியவில்லை
மண்ணாண்டிருந்த மாகாளி மக்களல்லோ
சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்
காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்
அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்
கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா
சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்
கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5101 - 5130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்று அந்த மாயன் அதற்கேது சொல்லலுற்றார்
முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா
ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்
பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்
அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்
கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்
மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்
கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்
வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்
அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது
சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
பத்தத் தலையான பார அரக்கனுக்குத்
தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்
கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து
நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா
உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5071 - 5100 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது
அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும்
எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை
எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும்
அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை
பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து

ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்


கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்
உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்
சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா
தீத்தனலைச் சேர்த்து சிவகங்கையில் பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைத்துன்னை சாபமிட்டால்
வான மிடியாலும் வான மழையாலும்
ஆன கடலாலும் அக்கினி தன்னாலும்
நாட்டை முடிக்குமடா நல்ல சாணாத்திகற்பு
கோட்டை இடியுமடா கோத்திரங்கள் தான்முடியும்
சேனையழியுமடா உன் செல்வமது குன்றுமடா
வான நட்சத்திரத்திரத்தாலும் வம்மிசங்கள் தான்முடியும்
என்று கலிநீசனுக்கு எம்பெருமாள் கூறிடவே
அன்று அந்த கலியன் அதற்கேது சொல்லலுற்றான்
உன் சாபமானாலும் உயர்காளி சாபமானாலும்
கன்னி சாபமானாலும் கபாலி சாபமானாலும்
சிவ சாபமானாலும் சக்தி சாபமானாலும்
சிவ செந்தெல்லாம் சேர்ந்து சாபமிட்டாலும்
என்றினிடத்தில் எள்ளளவும் வாராதே
வந்தாலும் அணுகாதே சிவமூல கருவிருக்கு
என்று கலியுரைத்தான் எம்பெருமாள் அச்சுதற்கு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5041 - 5070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை
அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு
இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப்
பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து
மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன்
சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல்
வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப்
பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த்
தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே
பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம்
மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே
முக்காலி கட்டி முதுகி லடித்துமிக
மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே
சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம்
ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது
கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள்
நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும்
சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண்
சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல்
சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான்
தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும்
மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல்
சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம்
ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும்
பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை
கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான்
நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 5011 - 5040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே
உப்பா லுவரா உபய மெடுத்தவரை
ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்
குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல்
களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான்
சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம்
வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான்
வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக்
கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து
சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப்
பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான்
ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம்
வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால்
ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி
வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல்
நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி
நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ
ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர்
நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர்
கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர்
பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை
பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே
விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார்
இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி
அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து
அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு
வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக்
கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும்
தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும்
ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும்

விளக்கவுரை :
Powered by Blogger.