அகிலத்திரட்டு அம்மானை 4171 - 4200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார்
மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம்
ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே

பேய்ப்பிறப்பு

அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி
இப்போது தானதவம் இல்லையே லோகமதில்
தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும்
பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க
என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான்
நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும்
இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது
மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா
ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப்
பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார்
என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து
அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து
இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று
தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே
இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில்
சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே
அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து
இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண்
என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே
அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து
பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும்
வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும்
பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில்
இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார்
அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார்
இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து
பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4141 - 4170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
நாணமிகவடைந்து நாட்டில் பிரிவாகி
ஈனதுன்பமாகி இருக்குமந்த நாளையிலே
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித்
தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4111 - 4140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது
பூலோக மேழும் பொன்னுலோக மேழும்
தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும்
ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம்
பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம்
சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம்
நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே
என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி
அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி
சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து
வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில்
கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி
ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை
நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை
எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி
மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து
ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை
கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம்
தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே
மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக்
காய மிழந்து காணா துருவெடுத்து
ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி
தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே
கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு
பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு
மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில்
பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும்
பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம்
சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று
யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4081 - 4110 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான்
மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான்
வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான்
மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான்
ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான்
அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான்
குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது
பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து
தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான்
கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத்
தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப்
பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து
மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை
கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம்
அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே
சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும்
தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான்
மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி
தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள

நந்திவரவு

தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள
மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால்
ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு
வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து
மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன்
ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே
என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க
அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது
அப்போது நந்தி அரிஅரனையும் போற்றி
செப்போடு ஒத்தசிவ சக்தியையும் போற்றி
நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4051 - 4080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ
நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
ஈசன் சக்தியையும் இணைபிரித்து வைத்தான்
தேசக்கலி சாதிதனைப் பதினெட்டாய் பிரித்து வைத்தான்
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான்
சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான்
மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான்
கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான்
வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான்
ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை
பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான்
கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான்
மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 4021 - 4050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல்
பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே
கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை
எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும்
பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும்
என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான்
நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும்
பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து
வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3991 - 4020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழைவான வேதா குறியா யதையறிந்து
கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால்
பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக
மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே
அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று
சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது
குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து
அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன்
இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால்
வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில்
கைகண்ட வேதக் கருணாகரக் கடலே
என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று
அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப்
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார்
மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு
தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண்
ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப்
போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்

சலந்தவசு

அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன்
இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற
அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா
கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான்
நல்லதுதா னென்று நல்ல முனியோடே
வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண்
கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில்
சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே
ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே
தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும்
வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3961 - 3990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ
குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம்
அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான்
செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த
மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க
ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே
என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
உன்று வசனம் உரையென்றார் மாமுனியை
என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும்
அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே
தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும்
கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா
நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால்
வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும்
நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே
மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால்
என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித்
தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே
மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று
அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான்
நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ
கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன
சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க

மலைப் புதுமை

அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை
இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான்
வேதா விதித்த மேலான ஆகமம்போல்
நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே
கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று
சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான்
இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3931 - 3960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார்
இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில்
செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில்
நந்த கோபால நாராய ணாவெனவே
மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய்
ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள்
பக்கமதில் எங்களையும் வைத்துபதவி தரவேணுமென்று
நிக்கவேதவசு நீலவண்ணர் உண்டெனவே
ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென
வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும்
விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும்
கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே
அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க
இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்

போகமுனி தவசு

போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று
வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில்
ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3901 - 3930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும்
உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும்

விளக்கவுரை :
Powered by Blogger.