அருள் நூல் 1771 - 1800 of 2738 அடிகள்

arul-nool

வகுப்பதற்கு இன்னதென்றறியேன் நானும்
வகைவிபரம் நீரருளி வரமேதந்து
தொகுப்பதற்குச் சிலம்பிமுவே துணையாமென்று
இடமதிற்கில்  லாமலீடேறத் தீர்த்து
எப்போதும் எனையாளும் எம்பிரானே
யுகபதியில் மேவியுதித்தெழுந்த நாதா
உன்உவமை சொல்லுதற்கு உதவிகாப்போம்.

நடை

காப்போம் சிவபர ஆதிநாராயண கண்மணியானவரை
கன்னிமார்பாடலுக்கு முன்னைவினைத்திடகல்விக்குதவுவாயே
சேர்ப்பாயுந்தன் அருள்சிந்தையில்வைத்திருந்த தெய்வமடவார்
திருக்கறைத்கூறச் செயல்குருநீயல்லாமல் சீமையிலாருளாரோ
முக்கிபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னாக்கு காலமெல்லாம்
முண்டவனத்தில் கூண்டுதவம்செய்து முற்றும்நிறை வேற்றி
பக்தியுடன் நற்சொல்ல வைத்துப்படிமுறை தப்பாமல்
பாரானதெட்சணமீதானதில் வந்துபண்பாக கண்டுமையும்
வாதாடியவர்பெற்ற மக்களைக்கேட்டுன்னைவருடியே நாள்தோறும்
சீரானமக்களை யீந்துபின்னேழ்வரைச் சேர்த்துமணமருளி
தேவியும்மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டுதவும்
பண்பான இந்த கதைபடிப்பேனென்ற பாவவினை யானதெல்லாம்
பறக்கும்கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்து போலோக்கும்
குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்டதொக்கும் மன்றோ
கூறும் செந்தமிழ்பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமதி லொன்றும்வராமல் காத்திடக்கர்த்தனருள்வேணும்
கூடும்பரவெளி ஆனந்திமார்தேவி கூடியருள் புரிவாய்
சித்தமிரங்கியே தேவிமனோன்மணி சிந்தையிலேருந்தும்
சொல்லும் கதைகனக்கல்லல் வராமலே தோகையருள் புரிவாய்
ஆண்டவளாம்அரி நாராயணருடன் உலகில்மிகவாழும்
ஆதிபராசக்திதேவி ஏழுபேரும் அன்பாயிதற்குதவும்
கூண்டபுகழ்பெற்ற சான்றோரையீன்றகோதை ஏழுபேரின்
கோலத்திருலியாணத்திருக்கதைகூற என்குரு நாதனிது காப்பதாமே.

விளக்கவுரை :

அருள் நூல் 1741 - 1770 of 2738 அடிகள்

arul-nool

குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்
கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டுபோச்சே
பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன்
பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்
மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு
வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு
ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே
ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ
கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்
பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க்போகுதடா
கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா
இன்னும்செப்படிவித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே
வையகத்தில் ஒருசாரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்
நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்
மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்
மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்
ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மைபகையானால்
விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக்காறனடா
நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்
நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா

சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று

சத்த கன்னிமார் பாடல்

விருத்தம்


முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே
மூவரிய தெய்வகன்னி யேழுபேரும்
தன்னரிய நாரணரை தேடித்தேடி
தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்த
தென்னிலங்கை மணவைநகர் பதியிதான்
சீமைபதி தெட்சணத்தில் சென்றுகண்டு
மன்னவனும் தேவியுமாய் மகிழந்தஞாயம்
வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார்

விளக்கவுரை :

அருள் நூல் 1711 - 1740 of 2738 அடிகள்

arul-nool

ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில் இருப்பீரோ
அண்டபகி ரண்டம்வெல்ல ஆயுதம் பிடித்ததுண்டால்
துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக்கெடுக்கின்ற கோடாரிக்கம்பதுபோல்
உங்களுடையபாவம் உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா
வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய்
ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்குதடா
எல்லோர்க்குங்கோபமாச்சுஇடையிலோட்டம் ஆச்சுதடா
பிரமன்பகைத்துண்டால் நீங்கள்பேசாமல்போய்வீடுவீர்
விஷ்ணுபகைத்ததுண்டால்வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரம் பகைத்ததுண்டால் உயிர்பிழைக்கமாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களைக்
கைபிடியாய் கொண்டுபோவான்
இத்தனைபேர் சோ;ந்திருக்க ஈசென்ன செய்வேனப்பா
அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன்
நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன்
சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ
உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா
ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன்
வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகதே
ஏசாதேபேசாதே யென்கணக்கர்சீசர்களே
சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன்நாக்கறுப்பேன்
முன்னாலேஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன்

விளக்கவுரை :

அருள் நூல் 1681 - 1710 of 2738 அடிகள்

arul-nool

மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுக்கு
ஓரு அன்புமலரெடுத்து அனுதினமும பூஜைசெவ்வாய்
நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா
பள்ளிக்கணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா
நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே
என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களே
அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான்
பண்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே ஆண்டிபுத்திசாலிவந்தேன்
வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே
ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்
அடங்காதகோபமாச்சே ஆண்டியென்ன செய்வேனடா
மக்களுக்கு வேலைசெய்ய மனமில்லைஎந்தனுக்கு
இன்னும்ஒருகாரணம் எடுத்தெழுதிசொல்லுகிறேன்
அவரவர்க்குத்தனித்தனியே ஆண்டிபுத்திசொல்லிவந்தேன்
நந்திசொன்ன உபதேசம்மக்கள் நாள்தோறும்கேட்டிருந்தும்
நீலனுக்கு மூக்கனுக்கு சொன்னநெட்டூரம்போலாச்சே
முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிபோச்சு
புத்திகெட்டபிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டுபோனீர்களே
ஒருகாதில்தான்கேட்டு ஒருகாதில் விட்டீர்களோ
இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது
வல்லாண்மைசெல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே
பொல்லாப்புக்கட்ட வேண்டாம் போறென்கைலாசம்
நாதனுமேகேட்டதற்கு நன்மையொருவாpல்லை
நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவாpல்லை
கண்டகோவில்தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ
கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல் மறைந்துவிடுவேன்
பாம்புகடித்ததுண்டால் பதைத்துநீங்கள்பட்டிடுவீர்
இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில்

விளக்கவுரை :

அருள் நூல் 1651 - 1680 of 2738 அடிகள்

arul-nool

பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார்
கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவீனை தீர்த்திடுங்கோ
கடலுக்குள் ஒருபாப்பான் பலகர்மங்கள் நடத்துகிறான்
வய்யகத்தில் வைகை வாசல்காவலாளி ஒன்பது பேர்
ஒன்பதுபோர் அங்கிருந்து பலஉபகாரஞ் செய்கிறார்
கயிலைமலை தன்னை கண்டு கனத்தவஞ் செய்தமக்கள்
கயிலைமலையானதிலே ஒருதவசியிருந்து வாடுகிறார்
அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன்
ஓடிஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது
காயம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும்
தூங்காமல் தூங்குகிறார் அதன்சூத்திரத்தை அறிவாரில்லை
அடங்காத தவசுதான் அதின்நஞ்சயிறிவீர்களா
வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும்
எண்ணடங்கா சொருபத்தலே அதில்என்சொருபம் அங்கு உண்டு
பிடித்த பிடிவிடாது பேயாண்டி சொல்லுகிறேன்
எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிசை பார்க்குதடா
பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்தவஞ் செய்திடுங்கு
நான்மறைக்ககூடாது ஞானமுத்து சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றார்க்கும்
அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ
நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கிரையாவார்
மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதுடா ஆளிப்புழு
வையகத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம்
செய்யாத தீவினைகள் செய்தபேர் உண்டுமானால்
அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர்
முன்கணக்கும் பின்கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து
கணக்கையெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன்
வாழும்பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான்
பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன்
ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம் காண்

விளக்கவுரை :

அருள் நூல் 1621 - 1650 of 2738 அடிகள்

arul-nool

அதிகாரபத்திரத்தில் அரவர்க்கு தீர்ப்புண்டு
சத்தியத்தீர்ப்புகேட்க மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச்செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும்
தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ
தம்பிகணக்கனையும் தான்கூட்டி வாறேனப்பா
நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா
சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என்மகனே
வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில்
உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன்
பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா
யின்னும் ஒருகாண்டம் எழுத்தெழுதி பாடுகிறேன்
அயோத்திப ட்டணந்தான் அழியுதப்பா என்மகனே
அச்சுத்தேரி ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ
பஞ்சவர்கள்  அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா
குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன்
மந்திரமும் நானானேன்  மருந்துமூலி நானானேன்
சந்திரனும நானானேன் சூரியனும் நானானேன்
சேரசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையகத்தில்
கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே
துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ
பத்திரத்துக்கெழுத்து கூலிபலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளிகண்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
கற்ப மூலி உங்களுக்கு கர்மவீனை தீற்குமுலி
காணுதப்பா அப்பதிக்குள் ஒருகனத்தமுத்துயிருக்குதடா
யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம்

விளக்கவுரை :


அருள் நூல் 1591 - 1620 of 2738 அடிகள்

arul-nool

முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ
பின்னாலே கண்டதுதர்ன போகுதடா என்மகனே
சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டிசொல்கின்றேன்
மாசியென்ற மாதத்திலே உங்கள்மாமனுக்கு போதாது
நாட்டில்குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்ததினிலே
வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா
கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன்
ஏகமெங்கும்வெளியாச்சே நளானெங்கேஒளித்திடுவேன்
கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும்
வேதமுத்துஞானமுத்துஉங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து
சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா
பார்தனிலேதான் அடங்கிமக்கள்மனதிலேயேயிருந்துவிட்டேன்
பண்டாரக்கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை
எங்கெங்கே போனாலுமெனக்கிரவுபகல்ஆகுதப்பா
என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும்
அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ
தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்வரை
தெளியார்க்குபதேசம் நீசெப்பிரு என்மகனே
இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள்
ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கள்
கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ
கொடுத்தால்பதவியுண்டு குறைவில்லைஉங்களுக்கு
படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள்
அடிப்பார்அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுங்கோ
வம்புவசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருக்கிறது
என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம்இடுக்கமதுவந்தாலும்
அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன்

விளக்கவுரை :


அருள் நூல் 1561 - 1590 of 2738 அடிகள்

arul-nool

கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்
வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா
ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா
மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்
கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா
கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா
பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்
கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி
வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்
துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்
பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்
நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்
அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா
கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்
நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது
கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்
உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்
தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்
கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்
ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்
கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை
ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை
இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்
கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே
முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்
கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா
அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்
பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா

விளக்கவுரை :


அருள் நூல் 1531 - 1560 of 2738 அடிகள்

arul-nool

கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்
பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்
இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை
மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்
மேலுங் கீழுந்தெரியாது
நான்மெய்யன்மகன் பொய்யனப்பா
கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்
கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ
காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்
கண்காணப் பெருவழியேன்
அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா
கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ
உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்
மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை
நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா
அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ
தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா
அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து
பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே
இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்
நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா
வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ
வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா
கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்
கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா
கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்
காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ
நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா
நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

விளக்கவுரை :


அருள் நூல் 1501 - 1530 of 2738 அடிகள்

arul-nool

நானாண்டி ஆண்டிநடுக்காட்டு குருவாண்டி
கேளாண்டிகுலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி
சித்தாண்டிசிவனாண்டி இந்ததேசமெங்கும் நானாண்டி
மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு  சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா
என் சித்துவித்தை அறிய மாட்டேன்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான்
அதையமர்த்த வல்லாருண்டோ
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
வையமெல்லார்முத்தாச்சு அதைவகையறிவாரில்லையப்பா
காடெங்கும்கனத்தமுத்து அதை கண்டெடுப்பார்யாருமில்லை
சத்துக்குள்ளமுத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து
பக்தியுள்ளமுத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து
கண்டவர்எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்மப்பா
ஆணாகிபெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாடியப்பா

விளக்கவுரை :


Powered by Blogger.