அருள் நூல் 121 - 150 of 2738 அடிகள்

arul-nool

ஓரேழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை
அடர்ந்து பிடிப்பார்க ளென்றும்
அறுத்த மங்கலியம் மிகுத்துக் கட்டுவார்களென்றும்
இன்றும் சிறிது நாளையிலே
கேள்விகேளாமல் இருக்கின்ற பேர்களும்
துர்ச்சனராய் இருக்கின்ற பேர்களும்
வர்த்தகராய் இருக்கின்ற பேர்களும்
தம்மில் ஒருவருக்கொருவர்
சண்டை போட்டு மாண்டுபோவார்கள் என்றும்
போனவர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசரைத் தரிசனம்பண்ணி
சர்வ பாக்கியத்தை அடைவார்கள் என்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி உண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்
அதனாலே
மானிடரெல்லாம் மறந்து உட்கொள்ளை
பிறகொள்ளை அடிப்பார்க ளென்றும்
நமக்கு நன்றாகத் தெரியும்
நாம் அதற்குமேல் பூலோக பஞ்சாமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்
வருகிறபோது,
மண்ணெல்லாம் கிடுகிடுவென்று ஆடும்.
வானமும் மலையும் முழங்கி திடுக்கிடும் அப்போது
அதிலே சிலதுர்ச்சனரெல்லாம் மாண்டு போவார்கள்
போனபேர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசராய் இருப்பார்கள்;.
மந்திர தந்திர வைத்திய
வாகடங்களெல்லாம் வடவாசலிலே போய்
சட்டுத்தீர்ந்து போய்விடுவார்கள்.
ஏழுசமுத்திரத்திலே மூன்றுசமுத்திரம் நீர்

விளக்கவுரை :

அருள் நூல் 91 - 120 of 2738 அடிகள்

arul-nool

அதன்மேல் பக்தியா
யிருக்கின்ற பேர்களுக்கும்
பிள்ளையில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
கண்ணில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
தனமில்லாமல் இருக்கின்ற பேர்களுக்கும்
பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும்
ஸ்ரீராம சேயரும் தீர்ச்சையாகி
திருமன திரங்கிபக்தி காரணங்களைச் சோதித்துப்பகர்ந்து
அவரசர் கேட்டவரங்களைக் கொடுப்பார்கள்
இன்னும் சிறிது நாளையிலே
சிலபேர் தெய்வீகமாய்ப் போய்விடுவார்கள்
முன்னுக்கு மழை தட்டும்
உலகில் பலபலவஸ்துகள் பலிக்குமெனப் பகர்;;ந்தார்
சில நீசர்கள் கருப்பை நினைவில்லாதே தொட்டு
மிகப்பரவசம் அடைந்து அழிந்து போவார்கள்
வாலி சுக்ரீவரும் பண்டாரவேசமாய் போவார்கள்
வாச்சி கொழுகலப்பையெல்லாம் நாசமாய்ப் போய்விடும்
முன்னாலே துலுக்கர் தம்மை நாசம்பண்ணுவதற்கு
துர்க்கை அம்மாளை பிறவிசெய்து அனுப்பியிருக்கிறோம்
பிராமணர் சுகத்துடன் வாழ்வார் புவியில்
முகத்தில் லிங்கமில்லாத பேர்களுக்குப்
பிரமதேவரை அனுப்புகிறோம்
பிரமதேவர் புவிமீதில் வந்து
பக்தி காரணங்களைச் சோதித்துப்
பொல்லாத பேர்களைத் தெரிந்து பிடித்து
புதுக்கிராம தேசத்தில் ஆளும் தேவதைக்குப்
பூசைப்பண்ணிப் போடுவா யெனப்புகட்டினார்
காவேரி ஆற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கலியம்
கவிழ்ந்து அடையவேணுமென்றும்
காசினியில்

விளக்கவுரை :


அருள் நூல் 61 - 90 of 2738 அடிகள்

arul-nool

மறையாறு சாஸ்திரம் அறியவே
மண்டலம் மளந்தகை கொண்டெழுதும் வாசகம்
மண்டலர்கள் எவரும் அறியவே
வரும்பகல் தொள்ளாயிரத்து தொண்ணுற் றெட்டாண்டினில்
வளர்சாம்ப சிவமூர்த்தியும் மகாபரசுராமரும்
பராபர ஸ்ரீராம மூர்த்தியும்
பதியேறும் மூர்த்தியும், வண்மைபார்த்திக் கலியிலே
பார்த்திந் தக்கலியுகத்தில்
படூரநீ சக்கிலியால் வரும் வாது வண்ணம்
பகர்ந்து திருவாசகம் எழுதி
பல நன்னூல் அறிந்தவர்கள் எவர்களும்
பக்தியுடனே எதய காலமும்
பணிந்து திரு வாசகம் முந்தியணைந் தோருக்கு
மிகுபல னுடாகிய மேன்மையும்
நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில்
நடக்கும் முறையைக் கேளீர்.

திருவாசகம்

நல்ல வீரபுரம் தர்மராசா வழியிலே
நாடும் ஒரு மதலை பிறந்து
வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே
நாங்கள் வாலிபப் பிள்ளையாயிருக்கிறோம்
பூலோகக் கலியுகத்திலே
ஆசாரமாய் இருக்கிறபேர்களும்
அழுக்கான புத்திமதியா யிருக்கிறபேர்களும்
வரவர ஆங்காரமாய் அலைந்து அழிந்து போவார்கள்,
அதின்மேல்; பதினெட்டுதுர்க்கை அம்மன் பிறந்து
பூலோகக் கலியுகப் பஞ்ச அமிர்தராச்சியத்திலே வருகிறார்.
வந்தவுடன் மூன்றுநாள் இருள்மூடி
யானை துதிக்கையோல் மழைபெய்யும்
அதிலே சிலதுர்ச்சனர்கள் எல்லாம்
மாண்டு போவார்கள்

விளக்கவுரை :


அருள் நூல் 31 - 60 of 2738 அடிகள்

arul-nool

பூமகளைச் சேர்ந்து வாழ்ந்து வருவதற்கு
அடையாளம் உலகில் நடக்கும்
என்பால் பக்தியாய் இட்டசட்டபடி நடங்கள்
நான் வருவதற்கு அடையாளம்
பின் வாசகத்தில் அடங்கியிருக்கிறது.

விருத்தம்


கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மரையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையோடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் பேசி விளம்புவார் னாச மாவார்
தேறிய பூதத்தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய மொழியை யுள்ளம் கொண்டவர் குருவைக் காண்பார்.
ஒரு திரு விபூதி உருண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஒருதிடத் தேங்காய்ப் போலும் ஒரு மனத் திரணை போட்டு
கருதிட வெற்றிலை பாக்குக் களித்திடுவார்க்கு மூவர்
வருதிட ஞானம் மெய்யின் வழியிது வாகுந் தானே
மனுமொழி மிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று விளம்பிய பகை!ர் தன்னைத்
தனியவள் துர்க்கை சென்று கொன்றவள் நகரம் பூத்தி
கனிவுடன் துர்க்கை வாரிகடல் தீர்த்த மாடுவாளே.

நடை

எறும்புக்கடை யானைமுதல் யெண்பத்து நான்குயிர்கள்
ஏழுகடல் பதினாறு புவிகளும்
இரவிமதி சூரியர் பருதிபாலாழியவும்
இசைவான வாய்வு முதலாய்தோறும்
மாமலையோடு மாமரச் சோலையும் சேடனும்
தலை மோடனும் அறியவே
தென்கீழத் தேவரும் இங்குள்ள மூவரும்
தேசதெய் வேந்திரம் அறியவே
வாத முனி யோர்களும் வேதசன்னியாசியும்

விளக்கவுரை :

அருள் நூல் 1 - 30 of 2738 அடிகள்


arul-nool

அய்யா வருகையின் முன்னறிவிப்பு


அறம்பழுத்த கனிரசமே கலியறுக்க மானிடராய்
மகரமதுள் வைகுண்டம் தோன்றி
திறம்பெருத்தோ மென்றுகலி பிடித்து அவரவரே
நமக்குமேல் ஒன்றுமில்லை யென்றார்
பரங்கனிதான் கலியதனுள் ஐந்து ஒன்று
கவங்களித்துக் கலிதன்னால் சாக
மனம்பொறுத்த சான்றோரைக் காப்பேனென்றார்
வான்முனியும் நான்முகனும் வரமீன்றாரே.
                                                                         - பழம்பாடல்

காரணமான மாயன் கலியுகம் வரவென் றெண்ணி
நாரணம் பயந்து ஓடி நல்மலை யேறி மானாய்
வேடன்கை அம்பால் செத்து வில்வேந்தர் முதலோர் காண
தரணி வாறோ மென்று தவலோகம் சேர்ந்தார் மாயன்
                                                                         - இடைக்காடர்

அகிலத்திரட்டு திருவாசகம்

வரும்பகல் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டாண்டில்
பரலோகச் சங்கம் கூடிக்
கலியுகக் கொடுமை அதிகமென்று கண்டு
திருவாசகம் எழுதிப் பார்ப்பர் வசம் அனுப்பி
சகலரும் தெரியும்படி சொல்லச்
சொல்லா திருந்ததினாலே
திருவாசகத்தின் படி
ஆயிரத்தியெட்டாமாண்டு
திருச்செந்தூர் பாற்கடலில் பிறந்து
விஞ்சை பெற்று
மூன்றாம்நாள் கரைசேர்ந்து
பூவண்டன்தோப்பில் ஆறுவருடம் தவமிருந்து
பின்
தண்ணீர்மண்ணால் சகல நோயைதீர்த்து இருக்கும் சமயம்
இராசசோதனை கழித்துப்பின்
சத்தக் கன்னியைச் சேர்த்து
எழுமதலை கொடுத்து
சான்றோரைக் காப்பேனென்று உத்தரவு செய்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 16171 - 16200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ

விருத்தம்

மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே

விருத்தம்


வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்

வாழி விருத்தம்

திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம்

அய்யா உண்டு

காப்பு படித்து நிறைவு செய்யவும்

அகிலத்திரட்டு அம்மானை முற்றும்

அகிலத்திரட்டு அம்மானை 16141 - 16170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ

விருத்தம்

மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்

விருத்தம்


இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன்

விருத்தம்


மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே

விருத்தம்

இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 16111 - 16140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ

விருத்தம்


பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ

விருத்தம்


மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்

விருத்தம்


பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே

விருத்தம்


போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 16081 - 16110 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்

விருத்தம்

ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்

விருத்தம்

தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்

கலி விருத்தம்


ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர்

விருத்தம்

பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்

விருத்தம்

பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்

விருத்தம்


முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்

விருத்தம்


சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 16051 - 16080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்


ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்

நடை

மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தனதுள் அகமகிழ்ந்து
நின்றேவல் செய்து நித்தம் பணிமாற
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்

விளக்கவுரை :   
Powered by Blogger.