அகிலத்திரட்டு அம்மானை 12061 - 12090 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம்
விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ
என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும்
நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது
தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும்
முழுது மனந்த மூதூரை விட்டுஇன்று
பழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித்
தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில்
சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென
நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக்
கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப்
பய்யவே யின்று பயண மெனவுரைக்க
உய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்து
சந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று
வந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து
ஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலே
ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக்
கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க்
கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார்
சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும்
வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார்
ஆலனைச் சுமந்தாலும் அதிகபலன் உண்டாகும்
பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள்
உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து
பேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்கு
நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார்
என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை
அன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லி
நம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச்
சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12031 - 12060 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்போ தரசன் எல்லோரு மேகேட்க
இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்
ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்
உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து
மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்
தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்
இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்
கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப்
பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்
மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி
ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை
செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து
நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே
சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான்
இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே
அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து
கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி
வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார்
கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து
மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை
உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே
குன்னுடைய நீசன் கூறினா னம்மானை
அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி
இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ
தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப்
போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து
நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது
வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12001 - 12030 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே
முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்
இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை
அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்
என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே
தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே
முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு
அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த
ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்
தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து
பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க
உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற
மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்
தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்
நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்
ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்
ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி
ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்

வைகுண்டர் விடுதலை


அப்போ தரசன் அவன்மனது தானிளகி
இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டா லவனும் மேலு மிருக்குமுறை
கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப்
போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க
ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்
என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11971 - 12000 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று
மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே
எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து
விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக்
குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை
கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்
பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்
நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்
ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்
தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்
என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்
மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து
ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு
தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்
அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார்
இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்
என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே
ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்
கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை
வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு
பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்
ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே
அப்போ சுவாமி அருகில் மிகவாழும்
மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்
இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்
அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்
என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு
அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11941 - 11970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே
கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்
மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே
துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்
அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்
காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்
சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்
ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்
மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே
ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்
வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே
அப்போது ராசன் அருகில்தலை யாடகளை
இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்
குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்
பண்டுநாமடைத்த பைத்தியக்காரனையும்
இக்கூட்டுக்குள்ளே அய்யாயிருந்தனரே
பண்டுபடைத்த பகவாந்தனையறிந்து
கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதுங்கி
அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்
பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்
நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல்
வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து
உலயில்மெழுகது போல் உள்ளமிகவுருகி
அலையில் துயில்வோனை அதுவணங்கி நின்றதுவே
விட்டான்கடுவாய்மேல் விதறிஇளகுமென்று
மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்
கிடந்ததுகா காணையா கிருபை யதினாலே
தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11911 - 11940 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பட்சி பறவை பலசீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்
ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்
நாகக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
பாவம்பிறந்து நீசன் இப்பரந்த உலகத்திலே
இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால்
மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ
என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து
ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி
இதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானை
அப்போ தவரிருக்க அம்மிருக மானதையும்
வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம்
கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும்
கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன்
அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்து
இன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்று
கூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்த
ஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல்
இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின்
சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவே
அடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத்
திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே
அன்றுராஜன் அடுத்தநாள் சென்றதற்குபின்
இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று
வந்தானே யந்த மாநீசப் பாதகனும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11881 - 11910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து
வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்
உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து
அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு
உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்
கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்
தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்
நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்
நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்
வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித்
தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்
ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்
நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்
சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே
கடுவாயைக் கொண்டு காலமே போவோமென
வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்
சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்
அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்
நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு
வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11851 - 11880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து
நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து
நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்
தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்
கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே
விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு
நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே
இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்
தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்
ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்
என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி
இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து
அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே
பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்
பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்
குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு
நாரா யணரே நாங்கள்போ குங்கருமம்
பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே
உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம் ஆனதினால்
செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்
ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே
போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்
என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்
நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து
விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்
படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி
கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி
முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து
காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி
வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11821 - 11850 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று
கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ
தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்
அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி
குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே
கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே
இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை
கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்

கடுவாய் சோதனை

ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்
சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு
என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை
கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்
அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை
செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்
கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்
நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்
சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே
தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்
பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே
தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்
சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்
காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி
ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து
போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப
வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்
ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க
நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்
வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து
இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி
வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11791 - 11820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே
நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே
ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே
கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க
மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்
தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க
ஆகாத நீசன் அழியும் நினைவதினால்
போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்
போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும்
கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு
அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்
சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்
அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்
இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்
நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்
நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்
சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று
நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்
சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி
ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது
நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்
கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்
இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க
சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து
தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு
முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள்
நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்
காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு
தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க
வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்

விளக்கவுரை :   
Powered by Blogger.