அகிலத்திரட்டு அம்மானை 8551 - 8580 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு அம்மானை 8551 - 8580 of 16200 அடிகள்
ஆவிமறுகி அப்போது சொல்லலுற்றான்
பூரணனேவாசவனே பொறுத்துநீர் கொள்ளுமையா
நாரணனே என்சிவனே நான்செய்த பிழைபொறுத்து
வாரணக்கோவே வைகுந்தம் ஈந்தருழும்
காரணரே என்னைக் காத்தருளும் எனப்பணிந்தான்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
நல்லபேறும் கொடுப்போம் நம்மாணை தப்பாதென
வல்லவனேநீரும் வாய்த்த தேவன்தனக்கு
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதைஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்
விருத்தம்
என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்
விருத்தம்
மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்
விருத்தம்
வைகுண்டர் உதயம் விஞ்சை
அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்
விருத்தம்
வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
விளக்கவுரை :
ஆவிமறுகி அப்போது சொல்லலுற்றான்
பூரணனேவாசவனே பொறுத்துநீர் கொள்ளுமையா
நாரணனே என்சிவனே நான்செய்த பிழைபொறுத்து
வாரணக்கோவே வைகுந்தம் ஈந்தருழும்
காரணரே என்னைக் காத்தருளும் எனப்பணிந்தான்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
நல்லபேறும் கொடுப்போம் நம்மாணை தப்பாதென
வல்லவனேநீரும் வாய்த்த தேவன்தனக்கு
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதைஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்
விருத்தம்
என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்
விருத்தம்
மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்
விருத்தம்
வைகுண்டர் உதயம் விஞ்சை
அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்
விருத்தம்
வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
விளக்கவுரை :