அகிலத்திரட்டு அம்மானை 6361 - 6390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார்
என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா
என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே
நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார்
நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று
ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும்
மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை
வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும்
பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து
பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து
ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணைமறந்து
அன்ன மறந்து அதிக மணமறந்து
சொர்ண மறந்து சுகசோ பனமறந்து
நலமறந்து தேக நளினமிக மறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச்
சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய்
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே
என்று மகாமால் இப்படியே சொல்லிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6331 - 6360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது
கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது
பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது
ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம்
வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார்
அப்போது வானோர் எல்லோரு மேபயந்து
செப்புவ தேதோ திருமாலே நாங்களினி
சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால்
எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான்
ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம்
ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம்
அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி
எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே
என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே
அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும்
சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே
எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில்
மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை
சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு
இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும்
வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை
அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை
கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை
இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால்
நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி
இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று
வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று
மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப்
பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று
இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6301 - 6330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார்

சிவலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும்
வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள்
அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து
செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு
மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே
ஆயரே உம்முடைய அறிவின் படியாலே
அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு
சமயம் வழுவாத சாதித் திருமாலே
என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும்
நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து
காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும்
மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே
ஆனதா லீரேழு அவனி இருள்மூடி
மான மழிந்து வரம்பழிந்து மானிடரும்
ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம்
நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே
ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும்
ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று
பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை
ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே
ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6271 - 6300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ
என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார்
தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி
மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம்
மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில்
பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே
நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே
ஏங்கக் கலியனுட இருளினா லையாவே
நியாம்நடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து
தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே
ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே
மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம்
என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள்
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்
தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6241 - 6270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம்
இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப்
பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே
நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து
சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து
வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே
சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து
உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ
தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால்
இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும்
வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால்
ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு
மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து
நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து
மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர்
என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார்
ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே
மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண்
காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து
வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே
என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே
நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து
முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட
என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல்
ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய்
மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும்
நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம்
மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால்
என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6211 - 6240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான்
இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும்
அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து
இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக
பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில்
ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து
வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச்
செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
மனமாயுங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச்
சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை
வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள்
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை
அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி
எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே
ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள்
தாண்டவரே யினியுமது தயவி னருளாலே
என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில்
வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம்
என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6181 - 6210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
நாற்பத்தாறாஞ் சன்னாசி நல்ல விபரம்கேளு
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து
நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6151 - 6180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும்
சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி
கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும்
முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து
அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே
ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து
கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான்
முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து
சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான்
நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும்
கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு
தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான்
மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான்
முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி
எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே
செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள்
புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட
அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான்
முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும்
அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து
மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான்
கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி
பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும்
சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு
ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான்
நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து
மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும்
சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு
முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான்
அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6121 - 6150 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக்
குதிகொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான்
பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு
மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான்
பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல்
கோடை குடித்துக் குலைவான் பதினாறான்
கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி
கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான்
நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு
கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான்
இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ
எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை
மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான்
தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு
நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து
கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான்
இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான
மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை
இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச்
சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான்
இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து
உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான்
இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி
பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான்
கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல்
புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும்
நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி
பாதை வழியேகான் பத்துரண் டேழானும்
கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 6091 - 6120 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு
ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய்
துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று
நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான்
காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான்
அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல்
பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான்
ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து
நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான்
ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப்
பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான்
எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி
கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான்
ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல்
இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத்
தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப்
பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே
பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும்
சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே
பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத்
துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து 
உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும்
சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே
பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு
உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து
இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ
பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி
கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச்
சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே
பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு

விளக்கவுரை :
Powered by Blogger.