அகிலத்திரட்டு அம்மானை 3571 - 3600 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும்
லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும்
ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும்
கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும்
ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும்
பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா
சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும்
கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும்
மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா
அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா
மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும்
மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும்
இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத்
தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன்
வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும்
தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும்
மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான்
பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை
மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை
சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை
வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை
காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3541 - 3570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்

கலியன் கேட்ட வரங்கள்


அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க
வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு
அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3511 - 3540 of 16200 அடிகள் 


akilathirattu-ammanai

வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை
நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை
பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன்
அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம்
கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக்
கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான்
பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன்
மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி
ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி
நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல்
தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை
இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி
மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3481 - 3510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய்
மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய்
யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய்
கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய்
சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய்
தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய்
நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய்
இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய்
உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு
கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல்
மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச்
சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான்
அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை
கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே
தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார்
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி
ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன்
பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3451 - 3480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க
உடனே யவனும் உள்ள மிகக்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து
மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத்
தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன்
அன்று மொழிய அமர ரதையறிந்து
பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல்
எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண்
பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல்
தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும்
புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே
தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த
ஆனா லெனதுடைய அளவி லளவாக
மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண்
என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே
அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார்
நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று
வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து
உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார்
அப்போது நீசன் அரனார் தனைநோக்கி
ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய்
அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3421 - 3450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை
தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை
ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே
நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும்
பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க
மருண்ட விழியால் மாகம துகலங்கி
மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல்
விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை
கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற
அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற
அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி
சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து
கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே
கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3391 - 3420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும்
பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி
இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே
அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது
கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான்
இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மனவீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
இவனாலநேகர் ஏற்றபொய்வம்போடும்
நவகோளுஞ்சொல்லி நரகமது போவார்கள்
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி
ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும்
சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும்
விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3361 - 3390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண்தா னுடம்பு விலாசக் குருவோடு
சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள்
வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப்
பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே
முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா
மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய்
வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி
அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச்
சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை
ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர்
அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும்
கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து
மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா
அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப்
பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர்
அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல்
கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத்
தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான்
புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய்
சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம்
உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும்
மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3331 - 3360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார்
உடனே சிவமும் உள்ள மிகக்களித்து
இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும்
அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே
எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை
மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத
தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார்
இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும்
வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும்
தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார்
சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை
அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே
இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால்
தலந்தா னிளகி தான்வந்த தாலேதான்
குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே
என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி
குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார்
நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று
திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும்
சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி
சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து
வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா
இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம்
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 3301 - 3330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத்
தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து
திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே

விளக்கவுரை :
Powered by Blogger.