அகிலத்திரட்டு அம்மானை 2941 - 2970 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும்
பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார்
அப்படியே வானோர் ஆகாய மீதேகி
செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே
ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே
சீருரூப மான சிவகயிலை யானதிலே
பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற
வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும்
அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத்
தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல்
ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில்
ஏகமாயிங்கு வந்து யாமிதைக் குடித்தோ மென்றான்
ஏகசிவ சங்கமெல்லாம் இங்கு இருக்கிறார்கள்
சிவனிடத்தில் வந்து செய்திசொல் என்றிழுத்தார்
அவசியமுண்டானால் அவரிங்கு வருவாரென்றார்
கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும்
பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக
அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம்
உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து
வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே
சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு
நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க
அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார்
எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2911 - 2940 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஆரி ஆரிரரி ஆராரோ ஆரி ஆரிரரி ஆராரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும்
மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன்
மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ
சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக்
கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ
அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும்
செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ
துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக்
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ
ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ
ஆரி ஆரிரரி ஆராரோ ஆரி ஆரிரரி ஆராரோ

விருத்தம்

தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ
சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ

கற்பகத்தரு


நடை


சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி
ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம்
சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும்
வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று
கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2881 - 2910 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்

சரஸ்வதி தாலாட்டு

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ
சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும்
சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி யானவரோ
கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ
தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ
நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து
துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ
ஆரி ஆரிரரி ஆராரோ ஆரி ஆரிரரி ஆராரோ
பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே
நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ
எக்கா ளமூதி இடமடம் மானமுடன்
மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ
கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ
தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ
உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ
கல்விக் குகந்த கருணாகர ரானவரோ
செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2851 - 2880 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பாருபதி நாமம் பகருவா ளம்மானை
சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு
மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும்
கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள்
பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந் தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை
சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத்
தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை
கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே
வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை
வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார்
இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார்
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து
சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம்
அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2821 - 2850 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

குணமான தந்தி குமரனை யும்வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி
சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி
மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர
இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி
அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும்
பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று
அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை
அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து
இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய்
நீர்தானே நாமம் இட்ட லதுபோதும்
பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார்
கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார்
தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால்
தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு
சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும்
முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேயதற்கு
சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார்
நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு
தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள்
எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும்
சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே
பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2791 - 2820 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு
பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி
கண்ணான காளி காரிகையே நீகேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு
விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே
தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன்
விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும்
உன்னை யழைத்து உன்கையி லேதருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப்
பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து
மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக்
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து
வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள்
வேத முனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள்
வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து

சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து
முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும்
மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து
கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2761 - 2790 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி
பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே
ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித்
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு
தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில்
கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே
தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட
மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே
பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி
காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக
மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து
வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை
உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து
வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள்
தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே
மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும்
விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப்
படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள்
என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2731 - 2760 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை
தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள்
உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார்
இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள்
அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க

திருமால் அமுதளித்தல்

பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து
ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை
தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும்
கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி
நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே
அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல்
அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம்
சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள்
பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு
நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
அன்றுமே இந்திரர்க்கு அவ்விசனம் சொல்லிடவே
ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன்
தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து
ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும்
போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே
நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2701 - 2730 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே

அம்மைமார் தவம்

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு
அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும்
நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி

விளக்கவுரை :

அகிலத்திரட்டு அம்மானை 2671 - 2700 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே
பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி
குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே
காமத் தழலாய்க் கருமேனி யானதிலே
வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய
சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள்
கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி
அரிஓம் எனவே ஆடிக் கரையேறி
தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள்
உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு
அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட
கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே
திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார்
கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ
உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை
சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை
தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார்
வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும்
கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி
துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல்
கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை

விருத்தம்

கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும்

விளக்கவுரை :
Powered by Blogger.